Tuesday, September 27, 2016

வாத எண்ணெய் தயாரிப்பு முறை

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும். இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாதுஅனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில்இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்.

எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும் வாத எண்ணெய்.

1) எண்ணெய்கள்

நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி

2)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார்

3)மருந்துப் பொருட்கள்
சுக்கு,மிளகு,திப்பிலி,பூண்டு,ஓமம்
பெருங்காயம்,கிராம்பு,வசம்பு,சதகுப்பை

4)மருந்து சாப்பிட, நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை

அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்


இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின், நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்.நன்குகொதிக்க விடவும். நுரை அடங்கி வரும்
நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்இந்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்.

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை:

உள் மருந்தாக நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி குடிக்கும்அளவுக்குஇளஞ்சூட்டில் இருக்கும்போது அந்தப் பாலுடன்
அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து, உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்துகாலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும். வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்துமறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வரஎண்பதுவகைவாதங்களும்அனைது சூலைநோய்களும்மருத்துவர்களால்கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்.

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம், வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்.
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்!

No comments:

Post a Comment