Tuesday, September 27, 2016

தீய பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்....


இயற்கை வழியில் உங்கள் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்

தீய பழக்கம் என்பது தன் உடல், மன ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத 
நாட்டின் சட்டத்திட்டம் , அறக்கோட் பாட்டிற்கு  எதிரான செயல்களே தீயப்பழக்கம் எனப்படும். ஒருவன் உண்மையில் மனம் விரும்பி  தீய பழக்கங்களை விடவேண்டும், தன்னால் விட முடியும் என்று எண்ணினால் தீய பழக்கத்தை விட முடியும்! அவ்வாறு தன்னால் தீய பழக்கத்தை அவ்வளவு எளிதாக விடமுடியாது என்று எண்ணி னால் அவன் வாழ்நாள் முழுவதும் அவனால் அதிலிருந்து விடுபட முடியாது! 

ஏனெனில்   எப்பொழுது ஒருவன் தன்னால் நன்மை தரும் நல்ல செயல் களைச்  செய்ய முடியாது என்று முடி வெடுக்கிறானோ அந்த வினாடியே அவன் தீமைகளுக்கு அடி பணிந்து விட் டான். தீமைக்கு உண்மையில் இல்லாத கிரீடத்தை அவன் அதற்கு சூட்டிவிட்டான். கண்டிப்பாக அவன் எந்தக் கடவுளை வணங்குபவனாய் இருந்தாலும் அந்த கடவுளையே செருப்பால் அடித்து விட்டான் என்று தான் பொருள்.! 

கடவுள் என்றாலே மனிதன் நன்மையின் பக்கம் நிலை நிற்பதற்காக  ஏற்ப்படுத்தப் பட்டவை தான்!  

நன்மை தரும் செயல்களின் பக்கம்,நல்ல பழக்க வழக்கங்களின்  பக்கம் என்னால் நின்று உயர்வடைய முடியாது.! டாஸ்மாக் அதிகமாக இருக்கிறது குடிப்பேன், வியா பாரத்தில் கொள்ளை லாபம் வருகிறது கொள்ளையடிப்பேன், லஞ்சம் தர தயாராக பலர் இருக்கிறார்கள் லஞ்சம் வாங்குவேன், கல்விக்காக , தங்கள் வருமானத்திற்காக எத்தகைய இழிவையும் தாங்கிக் கொள்ள இந்த சமுதாயம் தயாராக இருக்கிறது நானும் பிறரை இழிவுபடுத்துவேன்.!  என்று கூறு பவன் உண்மையில் தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும்  இல்லாதவன்.! அந்தந்த நேரத்திற்கு சூழலிற்கு தக்கபடி வாழ்பவன் இயற்கையின் எஜமானும் இல்லை கடவுளின் மகனும் இல்லை மாறாக இவனே தீமையின் எஜமான் சாத்தானின் மகன்! 

துரதிஷ்டவசமாக இன்றைக்கு ஆன்மிக வாதிகள் என்று அறியப்படும் மத சாமி யார்கள் பலரும் தீமையை சகித்துக் கொண்டு வாழ், அல்லது சாமர்த்தியமாக அதையே உனக்கு நன்மை செய்யும் விசயமாக மாற்றிக் கொண்டு வாழு என்று உபதேசம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.! உண்மையில் இந்த ஆன்மீக வாதிகளே தீமைக்கு அடிமையாகி விட்டார்கள். இவர்களே உண்மையான கடவுளை மறுக்கி றார்கள்! கடவுள் தன்மைக்கு எதிராக மக்களை திசைதிருப்பி விட்டுவிட்டனர்.! 

புத்தனோ, இயேசுவோ, முகமதுவோ செய்யாத ரமணரோ, ரமானுஜரோ சொல்லத் துணியாத  தீமையை சகித்துக் கொண்டு நீங்களும் அதோடு இயைந்து வாழுங்கள் என்ற தத்துவத்தை நவீன சாமியர்கள் கூறுவதை கேளுங்கள். உண்மையில் இவர்கள்  கடவுளை உணர்ந்தவர்கள் அல்ல அரசியல்வாதிகளின் ஏஜன்டுகள் என்பதை  புரிந்துகொள்வீர்கள்.! 
இந்த ஏஜன்டுகளின் துணையோடு தான் நமது கனிமவளம் முதல் உடல் நலம் வரை அத்தனையும் கொள்ளையடிக்கப் படுகிறது.! 

எங்கெல்லாம் தப்புகளை சகித்துக் கொண்டு செல்ல கூறப்படுகிறதோ அங்கெல்லாம் நன்மையின் பால் உள்ள நம்பிக்கையை கைவிட்டுவிடு என்ற ஆலோசனை கூறப்படுகிறது.!
ஆதலால்  உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்  கடவுளான உண்மையின் மீது நம்பிக்கை கொள்ளு ங்கள் தொடர்ந்து செயல்படுங்கள் உங் கள் தீய பழக்கங்கள் அத்தனையை விட்டு நீங்களும்  தீய அரசியல் சக்திகளி டமிருந்து நமது தேசமும் கடவுளால் கண்டிப்பாக காப்பாற்றப்படும்.!

No comments:

Post a Comment