Tuesday, September 27, 2016

காய்ச்சல்

இயற்கை வழியில்

காய்ச்சலை குணமாக்குங்கள்

காய்ச்சல் என்பது உடலின் உள் கழிவுகளை வெளியேற்றி
உடலை சுத்திகரித்துக் கொள்ள
உடலே செய்யும் வைத்தியம்.!
காய்ச்சலில் முக்கியமான பகுதி மூளைகாய்ச்சல் என்பது தான்.!
மற்றபடி டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களுக்கு மட்டுமே வரும்.!
காய்ச்சல் வந்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் உதவி வழக்கமான உணவை நிறுத்துவதுதான். அதற்காக பிஸ்கெட், பிரட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.! ஏனென்றால் உடலில் பல நாட்களாக சேகரிக்கப்பட்ட இரசாயண கழிவுகளை எரிக்கத்தான் காய்ச்சலே வருகிறது. மீண்டும் இரசாயணத்தை கொடுத்தால் காய்ச்சல் குணமாக  நீண்ட நாட்கள் பிடிக்கும்.! வெறு என்னதான் சாப்பிடுவது என்றால் வெறும் சுத்தமான சாத்துக்குடியின் சாறு மற்றும் சுத்தமான மண்பானை நீர் மட்டும்தான் மண்பானை நீரை வேண்டுமானால் சற்று சூடாக்கி குடிக்கலாம். ஆனால் கொதிக்க வைக்கவே கூடாது.! கொதிக்க வைத்தால் நீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் தாதுப்பொருள்கள் முற்றிலும் அழிந்துவிடும்.! காய்ச்சல் மூளைகாய்ச்சலாக மாறுவதிலிருந்து பாதுகாக்க ஒரு ஈர வெள்ளைத்துணியை நனைத்து நெற்றியில் மட்டும் துணிக்காயகாய பற்றிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்பட்டால் குழைய வேகவைத்த அரிசிக்கஞ்சியை கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம்.! காய்ச்சலோடு ஜன்னி வந்தால் சுத்தமான மண்ணை குழைத்து நெற்றியிலும் வயிற்றிலும் பற்றிட்டுக் கொள்ள வேண்டும்.!  இதுவே போதும் இரண்டு மூன்றுநாட்களில் உடலில் உள்ள கழிவுகள் தீர்ந்தவுடன், நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவடைந்தவுடன் காய்ச்சல் விடைப்பெற்று விடும்.! உள்மருந்து கொடுத்தே ஆகவேண்டிய சூழல் இருந்தால் பத்து துளசி இலை பத்து நல்லமிளகு ஐந்து ஜாதிமல்லி இலை அல்லது பூ இவற்றை இடித்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது ஒன்றரை டம்ளர் ஆனதும் எடுத்து வடிகட்டி மூன்று வேளை உணவிற்கு  அரைமணி முன் அல்லது உணவிற்கு அரைமணி நேரம் பின்பு கொடுத்து வந்தால் எத்தகைய காய்ச்சலும் அதிகப்பட்சம் ஒருவாரத்தில் குணமாகிவிடும்.! இது பலபேரால் பயன்படுத்தி முழு வெற்றி அடைந்த அருமையான இயற்கை முறை  அனைவரும்  பயன்ப்படுத்திக் கொள்ளுங்கள்.!
நலம் பெருகட்டும்.!

No comments:

Post a Comment