Thursday, April 6, 2017

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
vijaysimman
2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
3. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல்
4. தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.
5. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்
6. பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை, தட்டைப்பயிறு
7. வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்
8. சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.
9. மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.
10. சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்
11. ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ.கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு – உருளைக் கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு
12. அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக் கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக் கிழங்கு / கரும்பு – உளுந்து / பச்சைப் பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்
13. ஒருவிதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இருவிதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். எ.கா: உருளைக் கிழங்கு / கடுகு / நிலக்கடலை / பயிறு வகைகள் – நெல் / கோதுமை / கரும்பு / கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.
14. சில பயிர்கள் கெட்ட வாடையை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பின் இப்பயிர்களைப் பயிரிட்டால் சில வகைப் பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
15. ஊடுபயிரல்லாத தனிப்பயிர் செய்தபின் அதிகம் அரிதாள் கட்டை விடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: கரும்பு / வெள்ளைச் சோளம் / பருத்தி / அவரை – தீவனப் பயிர்கள்
16. சில வறட்சி தாவரங்களைத் தொடர்ந்து ஈரப்பதம் விரும்பும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நெல் – கொண்டைக் கடலை




யூரியாவிற்கு மாற்றாக இயற்கை மருந்து


யூரியாவை விட இயற்கை மருந்து நல்லது!யூரியாவிற்கு மாற்றாக, தானே தயாரித்துப் பயன்படுத்தும், இயற்கை உரம் குறித்து விளக்கும், விவசாயி பாஸ்கரன்:
தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான எண்ணம், நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நைட்ரஜன் சத்தை செடிகள் கிரகிப்பதற்காகவே, உப்புத் தன்மை அதிகம் உள்ள யூரியாவை பயன்படுத்துகிறோம்.செடிகளின் வேர்களில் நீர்ச்சத்து இருக்கும் வரை தான், நாம் போடும் யூரியாவை உறிஞ்சும். மீதி உள்ள யூரியா பூமிக்கடியில் சென்று தங்கி விடும். இப்படி ரசாயன உரங்களும், யூரியாவும் அதிகப்படியாக பூமியில் சேருவதால், இயற்கையாக வளரும் நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக, இயற்கை முறையில், நான் தயாரித்த உரத்தையே யூரியாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தி வருகிறேன்.
தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில், 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லத்தை கலந்து, மூடி வைத்து நொதிக்க விட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த, 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை கலந்து நொதிக்க விட வேண்டும்.இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன், தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலந்து, ஒரு இரவு நொதிக்க விட வேண்டும்.இந்தக் கரைசல், தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு, 2 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து, சில மணிநேரம் வைத்திருந்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டு பத்திற்கு மாறிவிடும்.இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாக தெளிக்க வேண்டும்.

அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து, ஆரோக்கியமாக வளர துவங்கி விடும். இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக் கரைசல்’ என, அழைக்கின்றனர்.இதுதவிர, இலை, தழைகளை கொண்டே இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப்பாகவும், ஊட்டச்சத்து கொடுக்கலாம்; இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.

இதைத் தயாரிக்க, தலா, 5 கிலோ வேம்பு, புங்கன் நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடாதொடா இலைகளை ஒன்றாக கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின், ஆற வைத்து வடிகட்டி, 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலக்க வேண்டும். இக்கரைசலில் இருந்து, 2 லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீர் கலந்து, ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.இவற்றை பயன்படுத்துவதால் மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.தொடர்புக்கு: 94428 – 71049




ஈ எம் பற்றி


ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம்…80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ,எம். .
இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம்,அசட்டோபேக்டர்,அசிட்டோபேக்டர்,ட்ரைகோடர்மா,சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிகளும்.லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா,ரே பூசணம்,ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களும் உள்ளன…ஈஎம் பற்றி அறிமுகம் போதுமானது.இது கால்நடை வளர்ப்பில் என்ன வகையில் பயன் படுகின்றது என்பதை மட்டும் பார்க்கலாம்.
ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம்.இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம்.இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும்.இதனை வெளியில் வாங்குவது எளிது.
உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.
ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ
செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.
பயன் படுத்தும் முறை
இந்த இரண்டாம் நிலை திரவத்தில் ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து பயன் படுத்தலாம்.இது கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன் படும்.தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.தொழுவத்தின் துர்நாற்றம் குறையும்
ஈஎம் பொக்காஷி எனும் தவிடு உணவு தயாரிக்கும் முறை,தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில் ஏ.ஈ.எம் எனும் இரண்டாம் நிலை திரவத்தை தவிடு புட்டு பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் பிளாஸ்டிக் பாயில் கட்டி வைக்க வேண்டும்.ஒருவாரம் சென்றபின் திறந்து பார்க்கும் போது மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூசனம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி.இதனை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்…
ஒருலிட்டர் தாய் திரவம் சுமார் 300 ரூபாய் வரும்.இதனை சுமார் ஆறு மாதம் வரை பயன் படுத்தலாம்.இரண்டாம் நிலை திரவத்தை 30 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.வாங்கியவுடன் 1 லிட்டர் தாய் திரவத்தையும் பயன் படுத்த வேண்டாம்.நம்முடைய தேவை பயன் பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன் படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயார் செய்யுங்கள்..நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள்.
நான் எனது மண்ணில்லா தீவன வளர்ப்பிற்கும்,தொழுவத்தில் தெளிப்பதற்கும்.கோழிகளுக்கு குடிநீரில் கலப்பதற்கும் தொடர்ந்து பயன் படுத்துகின்றேன்..நல்ல பலன் தான் கொடுக்கின்றது…





மீன் அமிலம் தயாரிப்பது


மீன் அமிலம் தயாரிப்பது :
1526175_1420479634855402_291012883_n

தேவையான பொருள்கள் + செய்முறை :
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
பதம் அறிதல் :
நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.
பழவாடை அறிதல் :
பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
பயன்படுத்தும் முறை :
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்
பயன்கள் :
பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
வைப்பு :
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்

கோழிகளை வளர்க்கும் முறை



தோட்டத்தில் கோழிகளை வளர்க்கும் போது நாம் கொஞ்சம் கவனத்துடன் இருந்தால் தொற்று நோய்களைத் தவிர்த்து கொள்ள முடியும்
pannaiyar-koli.
வெளியில் சென்று வந்ததும் உடனே பண்ணைக்குள் செல்லக் கூடாது;
பார்க்க வருபவர்களையும் வாங்க வருபவர்களையும் தனி இடத்தில் நிறுத்தி நாம்தான் பண்ணைக்குள் சென்று காட்ட வேண்டிய கோழிகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்;
இறந்த கோழிகளையும் நாய் அல்லது காக்கை கொண்டு வந்து போடும் கோழி உடல்களையும் உடனே ஃபர்மலின் தெளித்துப் புதைத்து விட வேண்டும்;
வேறு இடத்தில் இருந்து கொண்டு வரும் குஞ்சுகளை உடனே நம் பண்ணைக்குள் விடாமல் மூன்று நாட்களுக்குத் தனி இடத்தில் வைத்து துளசித் தேனீர் தந்து அதன் பிறகு உள்ளே விட வேண்டும்.
தினமும் காலையில் கோழிகளைத் திறந்து விட்டு முதல் தீனி தரும் போதும், மேய விடும் போதும், மாலையில் அடைக்கும் போதும் அருகில் சற்று நின்று ஒவ்வொரு கோழியும் தீனி எடுக்கும் விதத்தையும் அளவையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவற்றின் எச்சங்களைக் கவனிக்க வேண்டும். அவை நன்றாகத் திரண்டு பிழுக்கை வடிவில் இருக்க வேண்டும். இளகி இருந்தாலோ தண்ணீராக இருந்தாலோ, உடனே அந்தக் கோழிகளைத் தனிப் படுத்தி அவற்றிற்கு வாய் வழியாகக் கெட்டியான மோர் தர வேண்டும்.
மறுநாள் முழுவதும் அனைத்துக் கோழிகளுக்கும் தண்ணீருக்குப் பதிலாகக் கெட்டி மோர் மட்டுமே தர வேண்டும்.
கோடையிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோழிகளுக்கு மோர் தரவேண்டும்.
இந்த முறையில் கழிச்சல் நன்றாகக் கட்டுப் படுகிறது. கழிச்சல் கடுமையாக இருந்தால் இரசாயன மருந்துகளும் தேவைப் படும்.
கடுமையான கழிச்சல் வந்தால் பெரும்பாலான கோழிகள் இறந்து விடும்.
எப்போதும் நூறு கோழிகள் இருக்கும் எங்கள் பண்ணையில் இதுவரை வெள்ளைக் கழிச்சலோ இரத்தக் கழிசலோ வந்ததில்லை.

களர் நிலத்தை வளமாக்கும் மந்திரம்

kalar-1
சுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மறைவுப் பகுதி. இந்தப் பகுதியில் பெரும் துணிச்சலுடன் இயற்கை வேளாண்மையில் போராடி வருபவர், லட்சுமணன். இயற்கையின் எல்லாக் கூறுகளும் இங்குள்ள உழவர்களுக்குப் பாதகமாகவே உள்ளன.
அதிலும் குறிப்பாக இவர் தேர்வு செய்துள்ள நிலம் மிகவும் களர்தன்மை கொண்டது. களராகிப்போன பொட்டல் நிலத்தை, வளமான விளைச்சல் மண்ணாக மாற்றுவது மிகவும் கடினம். ஆனால், அந்தச் சாதனையை ஓசையின்றிச் செய்திருக்கிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள புதுப்பட்டி லட்சுமணன்.
களர்நிலத்தில் உழவு
kalar-2முற்றிலும் வளமிழந்துபோன நிலத்தை, போராடி இவர் மீட்டுள்ளார். வளமிழந்த மண்ணை மீட்க முயலும் பலருக்கும் இவரது பண்ணை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நிலத்தில் தாவரக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் தொடர்ச்சியாக இவர் சேர்த்துக்கொண்டே வந்தார். அதாவது சாணம், மாட்டுமோள் (கோமயம்), தழை, குலைகள், அறுவடைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவு, பஞ்சாலைக் கழிவுகள், உமிச் சாம்பல் போன்றவற்றை இட்டார்.
இவரது தொடர் முயற்சியின் விளைவாக மண் மாறியது. முன்னர் இவருடைய நிலத்தில் டிராக்டரைக் கொண்டு உழுவதுகூடக் கடினமாக இருந்தது. இன்று மண் பொலபொலவென மாறியுள்ளது. மண்ணில் மட்கின் அளவும் அதிகமாகியிருக்கிறது. அதனால் நிலத்தில் நடக்கும்போதே மண், பஞ்சுபோல இருப்பதை உணர முடிகிறது.
உயிர் தரும் கழிவு
பொதுவாக மண்ணில் உயிர்மக் கரிமம் (organic carbon) அதிகமாகும் போதுதான், மண் வளம் அதிகரிக்கும். வேதி உப்பு உரங்களைத் தொடர்ந்து நிலத்தில் கொட்டும்போது, மண்ணில் உள்ள உயிர்மக் கரிமம் குறைந்துகொண்டே வரும். அதனால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்து, நீர் தேங்கத் தொடங்கும். நீர் தேங்குவதன் மூலம் மண்ணில் உப்பின் அளவு அதிகரிக்கும். உப்பைச் சரிசெய்து பயிரை வளர்க்க மேலும் வேதி உரங்களை இட வேண்டும். மீண்டும் உப்பு கூடிக்கொண்டே போகும். இது ஒரு வகை நச்சு வளையம். இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபட வேண்டுமானால், வேதி உரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். படிப்படியாகக் குறைக்கலாம் என்று நினைப்பது, நடைமுறைக்கு சரியாக வராது.
மண்ணில் சேர்க்கப்படும் தாவரக் கழிவுகளால் மண்ணில் நுண்ணுயிர் செயல்பாடு அதிகரிக்கும். நுண்ணுயிர் பெருகுவதால் மண்ணின் கெட்டித்தன்மை குறைந்து, பொலபொலவென மாறும். ஏனென்றால் மண்ணில் உள்ள உயிர்கள் மண்ணைத் துளைத்துக்கொண்டே இருக்கும். ஆக, எந்த வகையில் மண்ணை வளப்படுத்த வேண்டுமானாலும், நிலத்தில் கழிவுகளைச் சேர்ப்பதுதான் தீர்வு.
நீர் தேங்கினால் ஆபத்து
இத்துடன் லட்சுமணன் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான செயல்பாடு, நிலத்தில் உரிய இடத்தில் அமைத்துள்ள வரப்புகளும் வாய்க்கால் வடிகால் அமைப்பும்.
பொதுவாக வாய்க்கால், வடிகால் இல்லாத நிலத்தில் சிக்கல் அதிகமாகிவிடும். பெரும்பாலான உழவர்கள் வாய்க்கால் அமைப்பதோடு நிறுத்தி கொள்வார்கள். பலரும் முறையான வடிகால்களை அமைப்பதில்லை. அதனால் நிலத்தில் மழைநீர் தேங்குவதற்கான சாத்தியம் அதிகரிக்கும். நீர் தேங்கும்போது முன்னர்க் கூறியபடியே உப்பின் அளவும் அதிகமாகும். தேவைக்கு அதிகமாக நீரைத் தேங்க வைக்கக் கூடாது, நிலத்துக்குள் அனுப்ப வேண்டும். அல்லது பண்ணைக் குட்டைகளில் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
களர் நிலத்தில் நீர் தேங்கினால் சிக்கல் மேலும் அதிகரிக்கும். அதைச் சரிசெய்ய இயற்கையானது, களைத் தாவரங்களை உருவாக்கும். அங்குப் பறவைகள் மர விதைகளைக் கொண்டுசேர்க்கும். அதன் பின்னர்க் காடு உருவாகும். இதற்கான கால அளவு அதிகமாகும். இயற்கையின் இந்த ரகசியத்தை அறிந்துகொண்டு, அதை விரைவுபடுத்தும் செயலை நாம் செய்ய வேண்டும்.
மண்ணே முதன்மை வளம்
வடிகால்களும் முறையான வரப்புகளும் அமைக்காவிட்டால் மண் அரிப்பும் ஏற்படும். வளமான மேல்மண் அடித்துச் செல்லப்பட்டால், நமது வளம் முற்றிலும் குறைந்துவிடும். எனவே, வளமான மேல்மண்ணைப் பாதுகாக்கும் வேலை பண்ணையத்தில் மிக முதன்மையானது. நல்ல மேல் மண் இயற்கையாக உருவாக நான்கு லட்சம் ஆண்டுகள்கூட ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லட்சுமணனின் நிலத்தில் மண்ணின் தன்மை மெல்ல மெல்ல மாறி, இப்போது நீரை நன்கு பிடித்து வைக்கும் தன்மை கொண்டதாக, பஞ்சுபோல நிலம் மாறியுள்ளது. எங்கெல்லாம் கழிவை அவர் சேர்க்கவில்லையோ, அந்த இடங்கள் இன்னும் கடினமாகவே உள்ளன என்பது அவருடைய நுட்பத்தைத் தெளிவாகவே உணர்த்துகிறது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com
லட்சுமணன் தொடர்புக்கு: 09842194848

ஒருங்கிணைந்த பண்ணையம்

விவசாயம் நஷ்டம் கொடுக்கும் தொழில் என்று முத்திரை இடப்பட்டு அவற்றை உண்மை என நிரூபித்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை கடைபிடிக்காததே முதல் காரணம்.
ஒரு விவசாயிக்கு வருமானம் என்பது
1.தினசரி
2.வாரம் ஒருமுறை
3 .மாதம் ஒருமுறை
4 .ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
5 .வருடம் ஒருமுறை
6 .மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என ஆறு வகைகளில் வருமானங்கள் வரவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மழை இல்லாமல் போனாலோ அல்லது பயிர் பொய்த்து போனாலோ நஷ்டம் ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.
ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயம் சார்ந்த ஏதோ ஒரு தொழில் இருக்கவேண்டும்
உதாரணமாக
  1. தேங்காயில் இருந்து கொப்பரை எடுப்பது
  2. பாலில் இருந்து வெண்ணை மற்றும் மோர் எடுப்பது
  3. கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பது
போன்ற ஏதோ ஒரு சிறு தொழில் அமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இப்படி சிறு தொழில் அனைத்தும் விவசாயிகள் கையில் இருந்த காலம் போய் விவசாயி அல்லாதவர்கள் செய்வதால் குறுகிய காலத்தில் அதிக லாபம் எடுத்து சென்று விடுகிறார்கள்.
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு விவசாயி அவர் சார்ந்த பல தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்ற ஒரு பொருளில் மட்டும் எடுத்து கொள்ளாமல் விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி சொல்ல ஆசைப்படுகிறோம்.
தினம் வருமானம் என்ற முறையில் சில கறவை மாடுகள் வைத்து பால், மோர், வெண்ணை என வியாபாரம் செய்யலாம், மீன் வளர்ப்பில் ஈடுபட்டு தினம் வருமானம் தேடலாம். காய்கறிகள், கீரைகள் சுழற்சி முறையில் பயிரிட்டு தின வருமானத்தை அதிக படுத்தி கொள்ளலாம்.
வார வருமானம் என்றால்
கோழி, காடை, வாத்து, வான்கோழி, போன்றவற்றை வளர்த்து வருமானம் ஈட்டலாம், சுழற்சி முறையில் வாழை பயிர் செய்து வந்தால் வாரம் ஒருமுறை வருமானம் பார்க்கலாம். சிறுதானியங்கள் பயிறு வகைகள் போன்றவற்றை பயிர் செய்து மூன்று மாதங்கள் ஒரு முறை வருமானம் பார்க்கலாம், நீண்ட கால பயிர்களான மரங்களை வளர்து 5 வருடங்கள் ஒரு முறை நல்ல வருமானம் ஈட்டலாம்.
எமது அனுபவத்தை மட்டும் இங்கு பகிர விரும்புகிறோம்.  இயல்பாக நாம் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நண்பர்கள் கூற்றுப்படி ஆடு, மாடு , முயல் , கோழி , நீர் மேலாண்மைக்காக பண்ணை குட்டைகள் அமைப்பது போன்ற பல விஷயங்கள் உள்ளன. இவற்றை பற்றிய விழிப்புணர்வும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் நிறையவே உள்ளன. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று தான் நம்முடைய ஒருங்கிணைப்பு என்பது. விதை பற்றி பேசினாலே சிலருக்கு பிடிக்காது ஆனால் எதிர்காலம் கூடி வாழ்வதற்கே என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் விவசாயத்தில் வெற்றி பெற போவதில்லை என்பது உணரப்பட வேண்டிய ஒன்று.
நமது பண்ணையில் 2 கன்றுகள் உள்ளன இவை இரண்டும் நமது குழு நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து வாங்கப்பட்டது அவற்றை பராமரிக்கும் பொறுப்பு எம்முடையது.  வாங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. மேலும் விவசாயிகள் ஒன்று கூடி நாம் உற்பத்தி செய்யும் பொருளை சரியாக கொண்டு சேர்த்து சரியான விலை பெற ஒருங்கிணைப்பு வேண்டும். இல்லையேல் வெறும் பேச்சிலோ அல்லது ஏட்டிலோ தான் முடியுமே அன்றி செயல்பாட்டில் இராது என்று கூறினார்.
ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு விவசாயி தனது விவசாயத்திற்குத் தேவையான வளத்தை தனது வயலுக்குள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளியில் காசு கொடுத்து வாங்கிச் செய்யாத தற்சார்பு நிலைக்கான திட்டமிடலுடன் கூடிய பண்ணை அமைப்பே ஒருங்கிணைந்த பண்ணையம் என்று மதுரையை சார்ந்த சாகுல் கூறினார்.
சென்னையை சார்ந்த மார்கபந்து அவர்களின் பார்வை , பண்ணையின் கதவுகள் பண்ணையாட்கள் வந்து போவதற்கும் நம் விளைபொருட்கள் விற்பனைக்கு செல்வதற்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும். விதை, தழை, இடுபொருள் அனைத்தும் பண்ணை உள்ளேயே தன்னிறைவு பெற வேண்டும் என்று அய்யா நம்மாழ்வார் கூறியதை நினைவு படுத்தினார் !!
ஒருங்கினைந்த பண்ணையை சுற்றி உயிர்வேலி: அனைத்தும் F, பலவித தேவைகளுக்காக உபயோகமாகும் வகையில், கீழ்கண்ட வகைகளில் அமைக்கவேண்டும்.
Firewood / Fuel  ( விறகு )
Furniture ( வீட்டு பொருள் செய்ய )
Food ( உணவு )
Fence ( வேலி )
Feed ( கால்நடை & பறவைகளுக்கு தீனி )
Fruit ( பழம் )
Fertiliser ( தழையுரத்திற்கு )
Flower ( பூக்கள் )
Future ( வருங்கால சந்ததியினருக்கு பலனளிக்கும் மரங்கள் )
Funeral ( கடைசி பயணம் )
திண்டுக்கல் பிரிட்டோவின் நண்பரின் கருத்தாவது தற்போதைய சூழலில் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் தேவை, பயன்கள்,பயிற்சி, உற்பத்தி திட்டமிடல், விற்பனை திட்டமிடல் பண்ணை நிர்வாகம்,மதிப்பு கூட்டி விற்பனையும் உபயோகம்,இடுபொருள் தயாரிப்பு, இடுபொருள் உபயோகம், இடுபொருள் விற்பனை,குறிப்பாக பொருளின் இலை நிர்ணயம் மற்றும் பலவேறு அம்சங்களையும் மனதில் கருத்தில் கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயமே.
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. திட்டமிடுதலில்  இதன் வரிசையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் பலன் கிட்டும்.
1.நிலத்தின் அளவு,
2.நிலத்தின் தற்போதய அடிப்படை  வசதிகளான நீர், மின்சாரம்,சாலை வசதி,தடுப்பு வேலி,பாது காப்பு,மண்.
3.பண்ணையில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு, பணியாளர்களின் எண்ணிக்கை
4.திட்டமிடப்படும் அல்லது எதிர்பார்க்கப்படும் வருமானம் இது நபருக்கு நபர் வேறுபடும் காரணம் அவரவர் விவசாயத்தை முழுமையாகவோ பகுதியாகவோ சார்ந்திருப்பதனால்.(தின,வார,மாத,மூன்று,ஆறு மாதம் மற்றும் வருடம்)
5.மிக முக்கியமான முதலீடு
மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். சில குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1.விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்படுதல் மூலம் அனுபவ அறிவை பகிர்ந்து கொள்ளலாம். ஏனோ தெரியவில்லை தகவல்களையும் பிரட்சணைக்கான தீர்வுகளை பெறுபவர்கள் எண்ணிக்கை மட்டுமே அதிகமாக உள்ளது வருத்தம். தனது அனுபங்களை ஏனோ பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர்.
2. விலை நிர்ணயம் செய்யும் பொழுது எந்த பொருளாக இருந்தாலும் விளை பொருளோ, விவசாய இடுபொருளோ நிரந்தர வாடிக்கையாளராக்க வேண்டும் என்பதனை மனதில் வைக்கலாம்.
இது எனது தாழ்மையான கருத்து. பிறருக்கு ஒத்த அல்லது மாறுபட்ட கருத்தும் இருக்கலாம் என்று முடித்து கொண்டார்
ஒருங்கிணந்த பண்ணையம் செய்து வரும் கிருஷ்ணன் அவர்கள் கூறுவதாவது ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு . இந்த முறையில் கால்நடை மற்றும் உயிரினங்களை பயன் படுத்தி மண்ணை வளப்படுத்தவும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும். என்னிடம்  நாட்டு மாடுகள் 6.   வெள்ளாடுகள் 15.   செம்மறிஆடுகள் 8.     நாட்டு கோழிகள் 50  மற்றும் நாய் பூனைகளையும் வளர்க்கிறேன்.  பசு மாட்டிலிருந்து பால் தயிர் மோர் நெய் சாணம் சிறுநீரும் கிடைக்கிறது. இதில் பஞ்சகாவ்யா ஜீவாமிர்தம் மற்றும் எருவும் தயாரித்து பயன் படுத்துகிறேன்.  வெள்ளாடு செம்மறிஆட்டின் குட்டிகளை கறிக்காக விற்பனை செய்கிறேன். எருவை தோட்டத்திற்கு பயன் படுத்துகிறேன். கோழியிருந்து தினம் பத்து முட்டை கிடைக்கிறது. எங்கள் குடும்பங்களுக்கு போக மீதியை அடை வைத்துக் குஞ்சுகளாக  உற்பத்தி செய்கிறேம். கோழிகளை கறிக்காக விற்பனை செய்கிறேம். ஒருங்கிணைந்த பண்ணையமாகவும் வரும் காலங்களில் ஒருங்கிணைந்த கூட்டு பண்ணையமாகவும் இனைத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அப்படி இனைத்து செயல் பட்டால் தான் விவசாயம் லாபமானாதாக இருக்கும்.
எடப்பாடியை சேர்ந்த பூபதி கூறியதாவது உயிர்நாடி  நண்பர்களே  மானாவாரி 3 ஏக்கர் நிலகடலை 1.5 ஏக்கர் நரிபயிர், பாசிபயிர் 30 சென்ட் நெல்நாற்று அனைத்தும் வருணபகவாண், சூரியபகவாண் அருள் ஆசியினால் பூமி தாயிக்கும் வாயில்லா ஜீவனுக்குமே உணவாகிவிட்டது எப்போ அடுத்த மழை வரும் என ? எதிர்பார்த்தபடி 100 கிலோ சோளம் கையிருப்பில்  இது எனது சென்றமாத நிலை. இன்னும் மழைவர 3 மாதம் ஆகும் அதுவரை என்ன செய்யலாம் என சிந்தித்தபோது மனதில் தோன்றியது  ஒருங்கிணைந்த பண்ணையம்  இப்போது  நாட்டுகோழி 13 தாய்கோழி 2  சேவல் (அசில்-பெருவிடைரகம்) கொண்டு  எனது வீடு அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் வலை கட்டி பண்ணை ஆரம்பித்துள்ளேன்  அந்த நிலத்தில் 35  மாமரம் உள்ளது மற்றும் 15 செம்மறியாடு உள்ளது 2 சீமை மாடு உள்ளது ஆடு மாடு சாணம் மாமரத்திற்கு எருவாகவும் ஆட்டிற்கு பில்லு வளர்வதற்கு ஊட்டசத்தாக  பில்லு மற்றும் சாணியில் வளரும்  பூச்சி ,புழு, கறையான், கோழிக்கு உணவாக இதுதான். இப்போது அரம்பித்துள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் என்றார்.                                                           .
உழவுப்பெருந்தகையோருக்கு இன்றைய அனைத்து நடைமுறை பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு – தற்சார்பு அதற்கு சிறந்த வழி கூட்டுப்பண்ணையம் வேண்டும் .

வளம் குன்றா வேளாண்மை


வளம் குன்றா வேளாண்மை என்பது வேளாண்மையின் ஒரு முறையாகும். வேளாண்மையின் உற்பத்தித் திறனை நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரி வைத்திருக்க உதவும் முறையே வளம் குன்றா வேளாண்மையாகும். வளம் குன்றா வேளாண்மை என்பது பண்ணை முறையும், தத்துவமும்  இணைந்ததாகும். சூழ்நிலை மற்றும் சமூக யதார்த்தங்களை பிரதிபலிக்கக் கூடிய பெறுமானத்தின் வேர் போன்று செயல்படுகிறது. அனைத்து வளங்களை பாதுகாத்தல், கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப் புற சூழலில் ஏற்படும் சேதம், போன்றவற்றை இயற்கை முறைகளுடன் இணைந்து செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை மண் முறைகளுடன் செயல்படுவது தான் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஏற்கெனவே இருக்கிற மண் சத்துக்கள்  மற்றும் நீர் சுழற்சி, சக்தி தருதல், உணவு உற்பத்திக்கான மண் உயிரிகள் போன்றவற்றின் பயன்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த வளம் குன்றா வேளாண்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறையால் உற்பத்தி உணவு சத்துக்கள் நிறைந்ததாகவும், எந்த வித பொருளுடன் கலப்பிடமில்லாமலும், மனிதனின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைக்காமலும் இருக்கிறது.
நடைமுறையில், இந்த முறை செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள், கால்நடைகளுக்கான உணவுகளுடன் சேர்க்கும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறது. இந்த பொருட்கள் அதனுடைய புதுப்பிக்க முடியாத வளங்களை சார்ந்திருத்தலாலும், சுற்றுப்புற சூழலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள், வனவிலங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள், கால்நடை மற்றும் மனித நலத்திற்கு ஊரு விளைவிப்பதாலும் தவிர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மண்ணில் நடைபெறும்  உயிரியல் செயல்முறைகளை மட்டுபடுத்துகின்றன. சில வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் உணவுடன் கலக்கும் பொருட்கள் உரங்கள் சிதைவுறச் செய்யாமல், மனித நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. வளம் குன்றா வேளாண்மை முறைகள் பயிர் சுழற்சிகள், பயிர் கழிவுகள், விலங்கின் உரங்கள், பயிறு வகைகள், பசுந்தாள் உரங்கள் பண்ணையில்லாத அங்கக கழிவுகள், தகுந்த இயந்திர சாகுபடிமுறை மற்றும் கனிமங்களுடைய பாறைகள் போன்றவற்றை நம்பி இருக்கிறது. இதனால் மண்ணில் உயிர்களின் செயல்பாடுகள், அதிகரிக்கின்றன மற்றும் மண் வளம் மற்றும் உற்பத்தித் திறனை நிலைபடச் செய்கின்றன. இயற்கை, உயிரியல், உழவு முறைகளைப் பயன்படுத்தி பூச்சிசள், களைகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
வளம் குன்றா வேளாண்மையின் நோக்கம் வேளாண்மையை நீண்ட காலத்திற்கு செயல்படச் செய்யதாகும். முதல் பயிர் விதைத்திருந்தாலும், விலங்குகளை பட்டியில் அடைத்தாலும், விவசாயிகள் தங்களுடை நிலத்திலிருந்து குறிப்பிடத்தக்க விளைச்சல் ஒவ்வொரு வருடமும் கிடைக்க செய்ய வேண்டும் என்பதில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தற்போதைய புதிய முயற்சிகளால் இந்த முறை பிரபலமடைந்து வருகிறது.


நவீன வரையறை:
வளம் குன்றா வேளாண்மை என்பது பண்ணை முறையின் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தி.
  1. வேளாண் உற்பத்தியின் பொருளாதார திறனை அதிகப்படுத்துதல்.
  2. இயற்கை வளங்களின் அடிப்படையை நிலைப்படுத்துதல்.
  3. வேளாண் செயல்களால் மற்ற சூழ்நிலை அமைப்புக்களை ஒரே மாதிரி நிலைபடுத்துதல் ஆகும்.
வளம் குன்றா வேளாண்மையின் சில அடிப்படைக் கொள்ளைகள்:
  1. பண்ணை உற்பத்தித் திறனை நீண்டகாலத்திற்கு ஒரே மாதிரி வைத்திருக்க உதவுதல்.
  2. இயற்கை வளங்களின் அடிப்படை மற்றும் அதைச் சார்ந்து சூழ்நிலை அமைப்புகளுக்கு ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை களைதல், குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
  3. வேளாண்மையில் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் வரும் எச்சங்களைக் குறைத்தல்.
  4. வேளாண்மையிலிருந்து வரும் சமூக  பயன்களை (பணம் மற்றும் மணம் சம்பந்தமில்லாதது) அதிகரித்தல்.
  5. வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் தீடீர் மாற்றங்கள் போன்ற இடர்பாடுகளை இளைவதன் மூலம் பண்ணை முறைகளை எளிதாகப் பயன்படுத்துதல்.
வேளாண்மையின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள் நம்பிக்கை தரும்படி இல்லை என்று சிலர் விவாதம் செய்கின்றனர்.  இருந்தாலும், வளம் குன்றா வேளாண்மையை எப்படி அளவிடுவது என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.
உலகத்தின் பார்வையில் வளம் குன்றா வேளாண்மை:
வரையறை1:
சுற்றுப்புற சூழல் நன்றாகவும், பொருளாதார ரீதியாக திறனுடையதாகவும், பண்பாட்டுக்கு பொருத்தமாகவும், புனித அறிவியல் அணுகு முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பொழுது வேளாண்மை வளம் குன்றாமல் இருக்கும். (என்.ஜி.லு. வளம் குன்றா வேளாண்மை சங்கம், 1992).
வரையறை 2:
குறைந்த - வெளிப்புற இடுபொருள் மற்றும் வளம் குன்றா வேளாண்மை (LEISA) என்பது உள்ளூரிலேயே இருக்கக்கூடிய இயற்கை மற்றும் மனித வளங்களை அளவாகப் பயன்படுத்துதல், (மண், நீர், தாவர வளம், அப்பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகள், வேலையாட்கள், அறிவு மற்றும் திறன் போன்ற வளங்கள்) மற்றும் பொருளாதார  ரீதியாக பயன்படுத்தக்  கூடிய வகையிலும், சுற்றுப்புற சுழலைப் பாதிக்காதவாறும், பண்பாட்டுக்குத் தகுந்த மாதிரியும், சமூகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் உள்ள வேளாண்மையாகும். (ரெய்ஜின்டிஸ், ஹேவர்கோர்ட், + வாட்டர்ஸ் -பேயர், எதிர்கால வேளாண்மை, 1992).
வரையறை 3 : 
நிலைப்பாடன வளர்ச்சி என்பது இயற்கை வளங்களின் அடிப்படையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களின் ஒருங்கிணைப்பால் மனிதனின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கான தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்தால் மற்றும் அதை அடைய உறுதி செய்வதும் ஆகும். இத்தகைய நிலைப்பாடான வளர்ச்சி (வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வளத்துறைகளில்) நில, நீர், தாவர மற்றும் விலங்குகளின் மரபு வளங்களை பாதுகாத்தல், சுற்றுப்புற சுழலுக்கு ஊறு விளைவிக்காமல், தகுந்த தொழில்நுட்பத்துடன், பொருளாதார ரீதியாகப் பயன்படும் வகையிலும், சமூகத்தில் நடைமுறைபடுத்துவதேயாகும். (எப்.ஏ.ஒ.குழுவின் 94 வது கூட்டத்தின் 9416 அறிக்கை, 1998).

குறிக்கோள்கள்
  • கிடைக்கும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல்
  • புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்துவதை குறைத்தல்
  • பண்ணை தொழிலாளர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் சமுதாயத்தை பாதுகாத்தல்
  • சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்
  • சாகுபடி நுட்பங்களின் பொருளாதார நன்பகத்தன்மையை பாதுகாத்தல்
  • சமூகத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்காகவும் விவசாயிகளுக்கு போதுமான நிதி வழங்குதல்
  • உயர் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு உற்பத்தி செய்தல்
  • சூழ்நிலைகள் மற்றும் திறனுக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளை வளர்த்தல்


    வளம் குன்றா வேளாண்மையின் அடிப்படை ஆதாரங்கள்

    வளம் குன்றா வேளாண்மை பண்ணைக்கும், பண்ணை சமூக பொருளாதாரத்திற்கும் பயன்தரும்  வகையில் பொருளாதார வளர்ச்சியை கொண்ட 4 கொள்கைகளும், ஐந்தாவது சமூகத்திற்காகவும் உள்ளது.
    குறிப்பிட்ட அளவு இடுபொருள் இடுதல்:
    வளம் குன்றா உற்பத்தியால் பண்ணை வளங்களை அதிகப்படுத்த முடிகிறது. உள்ளுக்குள்ளே பெறப்படும் இடுபொருள்களான, வேலையாட்கள், அதி தீவிர புல்வெளி அமைப்புக்கள், சுழற்சி செய்த சத்துக்கள், பயிறு வகை தழைச்சத்து, பயிர் சுழற்சிகள், புதுப்பிக்கும் சூரிய ஆற்றல் பயன்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட பூச்சி மண் மற்றம் நிலக் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்களாகும். விளைச்சலை ஒரேமாதிரி வைத்துக் கொள்ளும் பொழுது இந்த மாதிரி மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. இதனால் மொத்த பண்ணை வருமானம் அதிகரிக்கும். இந்த வருமானத்தால் பயன்படும் வகையில் சில்லறை விற்பனை அதிகரிக்கப்படுவதால் மற்றும் வரி விதிப்பாலும், சமூகத்திற்கு பயன்பாடு அதிகரிக்கிறது,
    மாற்று வழிமுறை: ஆரோக்கியமான மண் உருவாக்குவதற்கும், இடுபொருட்கள் வாங்குவதை குறைப்பதற்கும், வளம் குன்றா வேளாண்மை மாற்று பயிரிடுதல் மற்றும் கால்நடை அமைப்புக்களை மாற்றுதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது. மாற்று வழிமுறையால் அதிகப்படியான பண்ணை வருமானம், பொருளாதார இடர்களான வானிலை, பூச்சி வேளாண் சந்தை மாற்றங்களை குறைப்பதாலும் பெற முடிகிறது. இதனால் நிலங்களை விவசாயிகள் வைத்துக் கொள்ளவும், உள்ளூர் பொருளாதாரத்திலிருந்து ஏற்படும் இடர்பாடுகளை களையவும் உதவுகிறது.
    இயற்கை மூலத்தனத்தைப் பாதுகாத்தல்:
    மூலதன சொத்துக்களின்மதிப்புக் குறைநிலை மதிப்பிடுதலாகும். விவசாயிகள் இந்த முறை நிலையாகப் பயன்படுத்துவதில்லை. பண்ணை முறைகளின் மதிப்பு குறைவதால் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாமல் போகிறது. இந்த இழப்பு, விளைச்சலைப் பாதிக்கும், பண்ணை வருவாய், நிலைப்பாட்டையும் பாதிக்கும், வளம் குன்றா வேளாண்மையில், நிலத்தின் உற்பத்தித் திறன் மற்றும் நீர் வளங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதாலும், மனித வளம் மற்றும் சுற்றறுப்புறச்சூழல் மேம்படுவதாலும் பொருளாதார மதிப்பு உயருகிறது.
    மதிப்புக் கூட்டல்: விவசாயிகளுக்கு விளைவித்த விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுவதிலும் பங்கு உள்ளது. உண்மையான வளம் குன்றா வேளாண்மையை உருவாக்கி, நிலைப்படுத்துவதில், விவசாயிகள் மிக அதிகளவு மதிப்புக் கூட்டிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த முறையால் தனி விவசாயிகளால் இதை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் தங்களுடைய பொருட்கள நேரடி விற்பனை செய்ய முடியும். மற்ற மதிப்புக் கூட்டால் நுட்பங்களுக்கு அதிக வளங்கள் தேவைப்படும். ஆனால் ஒரு விவசாயினால் இதை கையாளுவது எளிதாக இருக்கும். ஆகவே, இந்த மதிப்பு கூட்டல் நுட்பங்களுக்காக உள்ளூர் விவசாயிகள் குழுவாக உருவாக வேண்டும் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைந்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    சமூகம்: அனைத்து சமூகத்தினருக்கும் ஒருங்கிணைப்பாக வளம் குன்றா வேளாண்மை உள்ளது. வளம் குன்றா வேளாண்மையை வளரச் செய்ய வேண்டுமானால், நாம் முதலில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான தொடர்பை அறிந்திருக்க வேண்டும் மற்றும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகமான சந்தர்ப்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். வளம் குன்றா வேளாண்மையால், விளைச்சல், உணவு பாதுகாப்பு, நீர் உற்பத்தி  செய்ய திறந்த வெளி இடம், தாவரங்கள் வளருவதற்கான இயற்கை வாழிடங்கள் மற்றும் சமூக, பொருளாதார கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன. தற்பொழுது, நகர சமூகங்கள் விவசாய சமூகத்திலிருந்து தத்துவம்  மட்டுமல்லாமல், புரிந்து கொள்ளல், குறிப்பாக, உணவு உற்பத்தி மற்றும் பரவுச் செய்தல் போன்றவற்றில் தனித்து இருக்கின்றன. நம்முடைய சமூகத்தை நிலைபடச் செய்வதில் உள்ள சிக்கல் (அ) நாம் ஒருங்கிணைந்து இல்லாமல் இருத்தல் வாழ்வாதாலும் நல்லபடியாக இல்லாமல் இருத்தல் போன்றவற்றில் பண்ணை முறையின் பங்கு எவ்வளவு என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது, இதற்காக நாம் நம்முடைய அக்கம்பக்கத்தினரும் ஒன்றுபட்டு இருந்தால் நகர்புற மற்றும் கிராமப்புற சமூகங்கள் நல்லநிலையைில் இருக்க முடியும்

    வளம் குன்றா வேளாண்மையின் படிகள்
    வேளாண் சூழ்நிலை அமைப்பு பல இடைப்பட்ட பகுதிகளுடன் பல குறிக்கோளுடன்  அமைக்கப்பட்டுள்ளது.  மண் தரம் வளம் குன்றா வேளாண் சூழ்நிலை மேம்பாட்டின் முக்கியமான பகுதியாகும். இதுவே நீர் மற்றும் காற்றின் தரத்திலும் வளம் குன்றா வேளாண்மை முக்கியமானது, மண் தரத்தை மதிப்பிடுவதால் மேலாளர்கள் எளிதாக செயல்படுது்த வேண்டிய முறைகளை கண்டுபிடிக்க முடிகிறது.
    வளம் குன்றா வேளாண் சூழல் மேம்பாட்டின் முக்கியமான பகுதி மண் தரமாகும்.
    1. தரமான பண்ணை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்:
    • மண் அரிப்பை அடுக்குத்தளம் அமைத்தல், படிப்படியாக பயிரிடுதல், சுழமான குழிகளை சரிசெய்தல் போன்றவற்றால் தடுக்கலாம்
    • மண்ணுடன் அங்ககப் பொருட்களை சேர்க்கலாம் (பசுந்தாள் உரப்பயிர்கள் வரப்பு பயிர்களாக வளர்த்தல், மட்கிய உரம், உரங்கள், பயிர்க் குப்பைகள், அங்கக உரங்கள்)
    • நிலப் பண்படுத்துதலை பேணுதல்
    • காற்று தடுப்புக்களை வளர்த்தல்
    பணப்பயிர்களுடன் வைக்கோல், புற்கள் அல்லது வரப்பு பயிர்களுடன் சுழற்சி செய்தல்
    1. நீரின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பேணிக் காத்தல்:
    • வயல் மற்றும் புல்வெளியில் மண் அரிப்பதை் தடுத்தல்
    • வேதிப்பொருட்கள் பயன்படுத்துதலை குறைக்கலாம்
    • பாதுகாக்கப்பட்ட செறிவான பகுதிகளை விரிவுபடுத்தல்
    • மழை பெறுவதைப் பொறுத்து பயிர்களை வளர்த்தல்
    • பயனுள்ள பாசன முறைகளை பயன்படுத்துதல்
    1. அங்ககக் கழிவுகள் மற்றும் பண்ணை வேதிப்பொருட்கள் மாசுபடாதவாறு மேலாண்மை செய்தல்:
    அங்ககக் கழிவுகள்:
    • மண் பரிசோதனை செய்து, தேவைப்படும் அளவு உரங்கள் மற்றும் பறவை எச்சங்களை இடவேண்டும்
    • இறந்த பறவைகள் மற்றும் எச்சங்கள், கழிவுகளை மட்கச் செய்ய வேண்டும்
    • மழை மற்றும் பனியிலிருந்து பறவைக் கழிவுகளை பாதுகாக்க வேண்டும்
    • புல்வெளி (அ) கோழிப்பண்ணையை அமைக்கலாம்
    • பண்ணை வேதிப் பொருட்கள் மற்றம் அகற்றுதல்
    • வேதிப்பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தல்
    • குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்
    • நச்சுத்தன்மை குறைவான வேதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்
    • மறுசுழற்சி
    • அட்டையில் கொடுத்துள்ள வழிமுறைப்படி அகற்றிவிட வேண்டும்



    வளம் குன்றா வேளாண்மையின் அணுகுமுறைகள்:
    பலநூறு வருடங்களாக வளம் குன்றா வேளாண்மை பின்பற்றப்பட்டு வருகிறது. பல தரப்பட்ட பெயர்களில் பலதரப்பட்ட அணுகுமுறையும் பின்பற்றப்படுகிறது. இதில், இந்த அணுகுமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்று செய்வது வரையறுக்கப்பட்டுள்ளது
    முக்கிய முன்னேற்றங்கள் எதிர்ப்பார்க்கப்பட்டது, இருந்தாலும், அறிவியலில் வளர்ச்சி மற்றும் வேளாண் சூழ்நிலை அமைப்பு வடிவமைப்பு மற்றும் மேலாண்மை செய்வது பற்றியும் தரப்பட்டுள்ளது
    பராம்பரிய வேளாண்மையில் பல அணுகு முறைகள் (குறைந்தபட்ச நில பண்படுத்ததுல், வேதிப்பொருட்கள் வளையம் செய்தல்) ‘பயன்பாடு’ வகையில் வருகிறது. வளங்கள் பயன்படுத்துதலை குறைத்தல் மற்றும் எதிர்மறை சூழ்நிலை தாக்கம் ஏற்படுத்துகிறது. விவசாயிக்கான இடுபொருள் செலவைக் குறைக்கிறது. இது வளம் குன்றா வேளாண்மையின் ஆரம்பநிலையாகும்.
    பாதுகாப்பான பொருட்கள் மற்றும் செய்முறைகள் (உயிரியல் பூச்சிக் கொல்லிகள், உயிரிக்கட்டுப்பாடு பொருட்கள், இறக்குமதி உரங்கள், பாறை துகள்கள், இயந்திரக் களைக் கட்டுப்பாடு) போன்றவற்றிற்கு மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதற்கான முயற்சிகள் பிரபலமடைந்து வருகின்றன. எதிர்மறை சுற்றுப்புற சூழல் சேதக்குறைவும் பிரச்சனைக்குரியதாக உள்ளது. உயிரியல் பூச்சிக் கொல்லிகள் பயனுள்ள உயிரிகளையும் அழிக்கிறது. பூச்சி கட்டுப்பாட்டிற்கு உயிரிக் கட்டுப்பாட்டு பொருட்களை வயலில் விடுவது, இறக்குமதி செய்யப்பட்ட உரப் பொருட்கள் இந்த முறையை சிரமமானதாகவும் மாற்றுகிறது. களைகளைக் கட்டுப்படுத்த அதிகப்படியான சாகுபடி மேற்கொள்வதும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கும்.

இந்தியாவில் செயல்படும் திட்டங்கள்
1.எஸ்டி.சி.ஐ.சி.திட்டம்
தலைப்பு: நீர்த்தேக்க பகுதிகளில் வளம் குன்றா வேளாண்மை என்.ஜி.ஒக்கள் மற்றும் விவசாயிகள் திறன்களை வலுப்படுத்துல்- எஸ்.பி.டபிள்யூ.டி-கே திட்டம்,
காலம் : 1.04, 2002, லிருந்து (1999 -ம் வருடத்திலிருந்து பகுதி ஆரம்பிக்கப்பட்டது)
செயல்பாடுகள்: வளம் குன்றா வேளாண்மையையும் குல்பர்கா, கோபல் மற்றும் பீடார் மாவட்டங்களில் மூன்று SPWD பங்குதாரர்களுடன் நீர்த்தேக்கப் பகுதிகளில் என்.ஆர்.எம்யையும் ஒருங்கிணைத்தல், பட்டாணியில் எப்.எப்.எஸ்.ஐ நடத்த பங்குதாரர்கள வழிகாட்டவும், ஒருங்கிணைந்த பண்ணை முறை செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ளது.
2.கவாட் (KAWAD)
தலைப்பு: ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை கவாட்  நீர்த் தேக்கப் பகுதிகளில் மேம்படச் செய்தல்
காலம் : 2002-2005
செயல்பாடுகள்: சித்ரதுர்கா, பெல்லாரி, பீஜப்பூர் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில்  வளம் குன்றா வேளாண்மையின் பகுதிகளை வலுப்படுத்துல்
வழங்குபவர்கள் : கவாட் /டி.எப்.ஐ.டி.


அணுகுமுறைகள்
வளம் குன்றா வேளாண்மைக்கான கொள்கைகள் - இந்தியா
இந்திய அரசின் கொள்கைகள் பொதுவாக உணவு தானியங்கள் தன்னிறைவு பெறுவதையே வலியுறுத்தும். ஆனால் வேளாண்மையை நிலைபெறச் செய்ய முக்கியத்துவம் தருவதில்லை. 1970 மற்றும் 1980 களில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறும் வகையில் வளர்ந்து, 1990களில் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையை 2000 -ம் ஆண்டில் மிகவம் மோசமடைந்தது. ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி மற்றும் உணவு தானிய உற்பத்தி 2000-01 லிருந்து 2002-03 வருட காலங்களில் (இந்திய அரசு, 2002) எதிர்மறை வளர்ச்சியை காண்பித்தது. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறைவு என்பது மிக முக்கியமான பிரச்சனையாக மாறியது. அதனால், வளம் குன்றா வேளாண்மை வளர்ச்சிக்கான அணுகுமுறைகள் மிக முக்கியமானது. இந்த ஆய்வு இந்தியாவின் எதிர்கால உணவு தன்னிறைவை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல்  சர்வதேச சந்தைகளின் விளைவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட வேண்டும்.
இந்திய வேளாண்மையின் சுற்றுச்சூழல் சவால்கள்
இந்திய வேளாண்மையின் சவால், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணித்து, உற்பத்தியை அதிகரித்தலாகும். நிலம், நீர் மற்றும் காற்று போன்ற வேளாண் செயல்திறனை நிர்ணயிக்கும் வளத்தின் தரத்தை பாதுகாப்பதில் அடங்கும். இருப்பினும் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது மகசூல் குறைப்புகள், ஓரளவு நிலம் மற்றும் நீர் சுரண்டல் விளைவாக இருக்கலாம். மகசூல் குறைவு பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது, நிலம் மற்றும் நீரின் சுரண்டலினாலும் இருக்கலாம்.
நிலம் தரமிழப்பு இந்திய விவசாயத்தின் ஒரு முக்கிய பின்னடைவு. 1980 களின் ஆரம்பத்தில் தோராயமாக 53 சதவீதம் (173.6 மில்லியன் ஹெக்டேர்கள்) இந்திய புவியியல் பகுதியில் வேளாண் அமைச்சகத்தின் படி தரமிழந்த நிலமாகக் கருதப்பட்டது (GOI, 2001a): நீர் தேங்கி சாகுபடி பரப்பு சுமார் 6 சதவிகிதம் பாதிக்கப்படும் போது கார மற்றும் அமில நிலங்கள் இரண்டும் சேர்ந்து சுமார் 3 சதவிகிதம் பாதிக்கப்படும். நில சீரழிவின் முக்கிய செயல்முறையாக மண் அரிப்பு இருக்கிறது (நீர் மற்றும் காற்றின் அரிப்பு காரணமாக) (GOI, 2001a). தேசிய தொலை உணர்வு முகமை (NRSA) தொகுத்த தரவுகள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதம் (2000 NRSA) தரமிழந்த சாகுபடி செய்யக்கூடிய பாலைவன நிலத்தைக் கொண்டதாகும் என்று சுட்டிக்காட்டியது. இந்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு, மனித நடவடிக்கைகள் மூலம் தரமிழக்கப்பட்டது, கிட்டத்தட்ட அரைப்பங்கு மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களால் (2000 NRSA) தரமிழக்கப்பட்டது. சாதா ஈ.டி.ஏ.எல்.(2004), 1980 மற்றும் 1990 களில் நிலம் தரமிழத்தல் மற்றும் உணவு தானிய உற்பத்திக்கிடையே ஒரு எதிர்மறை மற்றும் குறிப்பிடத்தக்க எதிர்மறை உறவு காணப்படுவதைக் கண்டுபிடித்தது.
இந்திய விவசாயத்தில் நீர் மற்றொரு முக்கிய காரணியாகும். விவசாயம், பாசனம் மூலம், (2003 வியாஸ்) 1990 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த நீரின் பயன்பாடு 83 சதவீதம் ஆகும். பசுமைப் புரட்சியின் போது, விவசாயத்தில் தண்ணீர் உபயோகம் கடுமையாக உயர்ந்தது,  1970-71 மற்றும் 2000-01 இடையே 31.1 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 54.68 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்த போது ஒரு தடவைக்கு மேல் பாசனம் பெறும் பரப்பு 7.09 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 20.46 மில்லியன் ஹெக்டேராக இதே காலத்தில் அதிகரித்தது. நிலத்தடி நீர், பாசன இந்தியாவின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று, அது துரிதமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரின் இருப்பை விட 85 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் எடுப்பது 1984- 85 மற்றும் 1998-99 க்கு இடையே 5700 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் 253 லிருந்து 428 இருண்ட தாலுக்காக்களாக அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் குறையும் பிரச்சினை ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மானாவாரி மாநிலங்களில் காணப்படுகிறது.
நவீன தொழில்நுட்பம் சார்ந்த விவசாய அமைப்புகள் அறிமுகம், கூடுதலாக அதிகமான தண்ணீரின் பயன்பாட்டை ஊக்குவித்தல் என்றால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களைப் போன்ற இடுபொருட்களின் பயன்பாடுகள் ஆகும். 1970 மற்றும் 2002 க்கும் இடையில் உரத்தின் பயன்பாடு ஐந்து மடங்கு உயர்ந்து 17360 ஆயிரம் டன்னாக அதிகரித்தது. ரசாயன ஊட்டச்சத்துக்களின் சமச்சீரற்ற விகிதம் இந்திய உர பயன்பாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பூச்சிக்கொல்லியின் பயன்பாடு  1970-71 ல் 24.32 மில்லியன் டன்னிலிருந்து 1999-00 ல் 46.2 மில்லியன் டன் வரை அதிகரித்துள்ளதுடன்  1988-89ன்  போது 75.42 மில்லியன் டன் என்ற உச்ச பயன்பாடாக இருந்தது. (சி.எஸ்.இ. 1999). அதிக மகசூல் விதை வகைகள் ஒரு பயிர்சாகுபடிக்கும்  விவசாயிகளின் ஒரே நேரத்தில் பல பயிரிடும் நெகிழ்வுத் தன்மையும்  விவசாய பல்லுயிர் வகைகளும் குறைய வழிவகுக்கிறது.
இந்திய அரசாங்கம் மேலாண்மை மற்றும் முதல் ஐந்து வருடத் திட்டத்திலிருந்து விவசாய அபிவிருத்தி வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தை உணர்ந்தது என்றாலும், ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளே போதுமானதாக இருந்திருக்கும். உதாரணமாக, அரசாங்கத்தின் முயற்சிகளால் மட்டுமே தரமிழந்த மொத்தப் பரப்பில் 17.28 சதவீதம் மறு உற்பத்தி செய்ய முடிந்தது. (173.6 மில்லியன் ஹெக்டேர்; ஜி.ஓ.ஐ.2001ஏ). இந்தியாவின் தேசிய விவசாய கொள்கை (என்.ஏ.பி.) (2000 ஜி.ஓ.ஐ.) மேலாண்மை மற்றும் வளங்களைப் பாதுகாத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கொள்கையை நாட்டின் இயற்கை, பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தரமுள்ள சூழல்  மற்றும் நாட்டின் இயற்கை வளங்களில் சமூகத்தில் ஒத்துக் கொள்ளப்பட்ட பயன்பாடுகளான நிலம், நீர் மற்றும் மரபணு மானியம் நிலையான வேளாண்மை மேம்பாட்டிற்காக உயர்த்துகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. என்.ஏ.பி. நிலம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தல், நீரின் பயன்பாடு மற்றும் தரத்தை மேம்படுத்தல் மற்றும் விவசாய சமூகத்தின் உணர்வு (ஜி.ஓ.ஐ. 2000) உயர் முன்னுரிமை பெறும் என்று கூறியது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம் (2002 ஜி.ஓ.ஐ.), 2002 முதல் 2007 வரை, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மறு உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் நிலத்தடி நீர் சுரண்டலைக் கட்டுப்படுத்தல், நீர்பிடிப்பு பகுதி மேம்பாடு, நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மேலாண்மை மூலம் இயற்கை வள மேலாண்மைக்கு  முக்கியத்துவம் கொடுத்தலாகும்.  உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்களான பயன்பாடு குறித்து திட்டம்  சொல்வது என்னவென்றால் சரிவிகிதமற்ற தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து  இடுவதால் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை அதிகரிக்கும் மற்றும் மண்ணின் அங்கக கார்பனைக் குறைக்கும், முழுமையான விவசாய சூழல் அணுகுமுறை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மையை வலியுறுத்துகிறது.
மேலும், பத்தாவது ஐந்தாண்டு ஆவணம் விவசாயத்தில் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் மேலாண்மையில் ஒரு 'வாய்ப்புள்ள பகுதியாக' அங்கக வேளாண்மை அங்கீகரிக்கப்படுகிறது.
இந்திய வேளாண்மையின் சோதனை, எதிர்கால வேளாண் வளர்ச்சி மற்றும் உற்பத்தியையும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் இல்லாமல் இரண்டையும் ஒரே நேரத்தில்  நிலையானதாக எடுத்துச்செல்வதாகும். சுற்றுச் சூழல் சவால், குறிப்பாக நிலம் தரமிழப்பு, நிலத்தடி நீர் சுரண்டல், நீர் தேங்குதல், வேதி வேளாண் இடுபொருட்களின் அதிகமான பயன்பாடு எதிர்கால வேளாண்மையின் முன்னால் உள்ள பிரச்சினைகள். இப்பிரச்சினைகளை வெளிக்கொணர,அங்கக வேளாண்மை உள்பட நிலையான வேளாண்மையை மேம்படுத்த வலியுறுத்தும் கொள்கைகளை வகுக்க வேண்டும். இப்பிரச்சினைகளை வெளிக்கொணர, வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் மற்றும் கொள்கைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. வேளாண் இடுபொருட்களை வளங்குன்றாமல் வைத்திருப்பதில் அங்கக வேளாண்மை கடினமான பணியாகும், இது நிறைய கொள்கை நடவடிக்கைகளுடன் சந்தை முன்னேற்றத்திற்கு தேவையான தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு பல பிரச்சினைகளில் சம்பந்தப்படுகிறது. இந்திய வேளாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும் சிறு குறு விவசாயிகளை ஒன்றிணைப்பதாகும். ஆனாலும், சிறு குறு விவசாயிகள் அங்கக வேளாண்மை செய்பவர்கள் என கருதப்படுகிறார்கள், கடுமையான வளச் சிக்கலினால்
அங்கக வேளாண்மையை ஒருபடி முன்னே எடுத்துச் செல்லலாம்.



வளம் குன்றா வேளாண்மையை அளவிடும் காரணிகள்
வளங்குன்றா வேளாண்மையின் சுட்டிக்காட்டிகள்
வளங்குன்றா வேளாண்மையை நேரடியாக அளவிட முடியாது; அது நீண்ட கால அளவில் செயல்பட்டாலும்  மிகவும் மழுப்பலான ஒரு கருத்தாக உள்ளது. நம்முடைய அமைப்பை எவ்வாறு  வளங்குன்றாத அளவில் வைக்கலாம் என்பதை ஆலோசிக்கும் போது அளவிடும் நிகழ்வுகளை அடையாளங் காணும் போது சிறந்த ஒன்றாக செய்ய முடியும். இவைகளை சுட்டிக்காட்டிகள் என அழைக்கிறோம். மனித முயற்சிகள் பலவற்றில் உதவுவதற்கு சுட்டிக்காட்டிகள் பரவலாக வரையறைகளாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் உள்நாட்டு உற்பத்தியில் சுட்டிக்காட்டிகளாக இருந்தாலும் கச்சாதான் பொருளாதார செயல்திறனில் கச்சாதான் சுட்டிக்காட்டியாக இருக்கிறது. வளங்குன்றா வேளாண்மைக்கான சில வேலைகள் ஆஸ்திரேலியாவில் சுட்டிக்காட்டிகளின் முன்னேற்றத்திற்கு முதலிலேயே செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் வேளாண்மை மற்றும் வள மேலாண்மையின் நிலைக்குழு, ஒரு வல்லுநர் குழுவை அமைத்து சுட்டிக்காட்டிகளை மேம்படுத்தி அவை மண்டல மற்றும் மாநில அளவிலான நிர்வாகத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. வளங்குன்றா வேளாண்மையின் சுட்டிக்காட்டிகள் தேசிய கூட்டுத்திட்டத்தை நிறுவுதலுக்கு வழிவகுக்கிறது, இது வளங்குன்றா ஆஸ்திரேலிய வேளாண்மையின் தரமதிப்பீட்டைத் தயார் செய்வதற்கான நோக்கமாகும்.
கொடுக்கப்பட்ட சுட்டிக்காட்டியின் பயன்பாடுகளைத் தீர்மானிக்க நிறைய காரணிகள் பயன்படுத்தப்படுகிறது.
  1. இது அளவிடக்கூடியதா?
  2. இது பயன்படுத்துவதற்குத் தொடர்புடையதா அல்லது எளிதானதா?
  3. குறிப்பிடப்படும் படத்தைத் தருமா?
  4. இது பிரிக்க எளிதானதா? மற்றும் அதிக நேரத்திற்கு வழக்கங்களைக் காண்பிக்குமா?
  5. மாற்றங்களுக்குப் பொறுப்பானதா?
  6. ஒப்பிடுவதற்குக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறதா?
  7. பயன்பாட்டாளர்கள் அதன் முக்கியத்துவத்தைப்பெற முடிகிறதா?
மண்டல /தேசிய சுட்டிக்காட்டிகள் 4 முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
  1. லாபம்
  2. நிலையான உற்பத்திக்கு நிலம் மற்றும் தண்ணீரின் தரம்
  3. நிர்வாகத்திறன் மற்றும் சூழ்நிலையின் தாக்கம்
சுட்டிக்காட்டிகளை விவசாயிகளுக்கு சம்பந்தமுடையதாக செய்ய முடியுமா?
சுட்டிக்காட்டிகளைப் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடும் முறை அவர்களையே வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு தகவலாக உள்ளது. நடைமுறைக்கு சுட்டிக்காட்டிகளைக் கொண்டு வருவதற்காக அவர்களுடைய வசதிகளையும் தேவைகளையும் விளக்குவதன் மூலம் அந்த தீர்மானித்தல் இல்லாததால், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகள் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். எனவே, நிலையான சுட்டிக்காட்டிகளுக்கு விவசாயிகள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை.
  1. சுட்டிக்காட்டிகள் ஆரம்ப நிலையிலேயே மாற்றங்களை அறிவிக்க மற்றும் ஆலோசனை தேவைப்பட்டாலும் அதில் தோன்றுகிறது.
  2. லாபகர சுட்டிக்காட்டிகள் வலிமையையும் பலவீனத்தையும்மற்றும் வழக்கங்களையும் தெளிவாகக் காண்பிக்கிறது.
  3. நில மற்றும் நீர் சுட்டிக்காட்டிகள் இயற்கை வளப் பிரச்சினைகளைத் தெளிவாகக் காண்பிக்கிறது. இந்த இயற்கை வளம் உறங்குவான் மற்றும் கண்ணுக்குத் தெரியாதவரை கண்டுபடிக்க முடியாது.
  4. திறமைகளை நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்குத் திட்டமிடுதலுக்கு நிர்வாகத்திறமைகளான சுய தணிக்கையினால் தனி வியாபார பங்குதாரர்களை உடனமர்த்திக்கொள்ள முடியும்
  5. கண்ணுக்குத் தெரியாத தாக்கத்தைக் கவனித்தல் தனி வியாபாரத்தை உறுதிப்படுத்தல், தரத்தை நிலைநிறுத்தல் மற்றும் பெரிய அளவிலான சமூகத்துக்கு பிரச்சினைகளில் பங்கு கொள்வதில்லை.

வளம்குன்றா வேளாண்மையின் ஆராய்ச்சி & கல்வி திட்டம்
நிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டம் (SARE) SARE என்பது வளம் குன்றா வேளாண்மை செய்முறைகளை ஆய்வு செய்வது மற்றும் வெளியீடுவதற்கான அமெரிக்கா வேளாண் துறையாகும். இந்த திட்டத்தில், 3000-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முதலில், இந்த திட்டம் குறைந்த இடுபொருள் இடும் வளம் குன்றா வேளாண்மை திட்டமாக இருந்தது. பின் 1985-ம் ஆண்டு வேளாண்மையில் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான அறிவியல் சார்ந்த செய்திகள் விவசாயிகளுக்கு தரும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் காங்கிரஸில்  SARE என்று தொடங்கப்பட்டது. LISA திட்டம் 1998-ல் 3.9 மில்லரியன் டாலருடன் தொடங்கப்பட்டது. உணவு, வேளாண்மை, பாதுகாத்தல் மற்றும் வர்த்தக சட்டம் 1990 என்படி LISA, என்பது நிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடன் இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டன. ஒன்று, ஒருங்கிணைந்த பயிர், கால்நடை செயல்பாட்டிற்கான ஆய்வுகளுக்கும், மற்றொன்று, விரிவாக்க சேவை நிறுவனங்களுக்கு பயிற்சி கொடுப்பதும் ஆகும்.  1991-ல் SARE திட்டம்  சுற்றுப்புற பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்த வேளாண்மையை நிர்வகிக்க ஆரம்பிக்கப்பட்டது.




அடிக்கடி கேட்கும் கேள்விகள்    

வளங்குன்றா வேளாண்மை என்றால் என்ன?
 வளங்குன்றா வேளாண்மை  தற்போதைய உற்பத்திக்குக் குறைவில்லாமல் அதிக உணவு, தீவனம், அல்லது ஆற்றல் பயிர் விளைச்சலை வழங்க முடியும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு மாற்றாக விவசாயிகள் ஒரு நிலையான அணுகுமுறையை எடுக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் பயிர் சுழற்சி மற்றும் விவசாய அமைப்பின் மற்ற மாற்றங்களை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, மண் செறிவூட்டல், ஆரோக்கியமான தாவரங்களை உருவாக்கிவிடும், அது நோய் எதிர்ப்புத் தன்மையைப் பெறும். கவர் பயிர்கள் அரிப்பைத் தடுத்தல் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை விலங்குகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது. இதன் விளைவாக விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மூலம் பண சேமிப்பு மற்றும் சூழலை பாதுகாக்கிறது.
  1. வளங்குன்றா வேளாண்மையின் பொருள் விளக்கம் என்ன?
சூழலைப் பாதுகாக்கும் போது தற்போதைய பண்ணை வளங்களை அதிகப்படுத்தல் மற்றும் மறுசுழற்சி மூலம் லாபத்தை உறுதிப்படுத்தலுக்கு வளங்குன்றா வேளாண்மை முயற்சிக்கின்றது.  உள்ளூர் சமூகத்துடன் ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் உறவு மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு, வளங்குன்றா உத்திகள் விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது.
  1. அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையின் மற்றொரு பெயரா?
இல்லை. இல்லை அது ஒரு தவறான கருத்தாகும். அது உண்மை என்றாலும் வளங்குன்றா வேளாண்மையின் குடையின் கீழ் வரும். அது வளங்குன்றா வேளாண்மையைப் பின்பற்றாமல், எப்பொழுதும் அங்கக வேளாண்மையைப் பின்பற்றுகிறது.
  1. எப்படி அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையிலிருந்து வேறுபடுகிறது?
கரிம விவசாயம், எந்தெந்த  செயற்கை கூட்டு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயிர்கள் மீது பயன்படுத்த முடியும் என கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. கனிம உரங்கள் அல்லது கூடுதல் பயன்பாடு அனுமதிக்க முடியாது மண் அல்லது நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும் விலங்கு உற்பத்தி செய்ய வேண்டும். மண்ணில் கனிம உரங்கள் அல்லது அதன் கூடுதல் பயன்பாட்டை அனுமதிக்க முடியாது, விலங்கு உற்பத்தியில் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்த முடியாது. பயிர்களை இயற்கை வழிப்பயிராக சந்தைப்படுத்துவதற்கு முன்பு பயிர் வயல்கள் மூன்று வருடங்கள் வரை இரசாயன உரங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மை முறைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.
  1. வளங்குன்றா வேளாண்மையில் யார் பங்கு பெற வேண்டும்?
பண்ணை வளங்களின் மேம்படுத்தப்பட்ட மேலாண்மையின் செலவுகளைக் குறைக்க மற்றும் விவசாய லாபத்தை மேம்படுத்த விருப்பம் உள்ள முயற்சி செய்பவர்கள். எல்லோரும் வளங்குன்றா வேளாண்மையில் பங்களிக்கவும் மற்றும் தங்கள் சொந்த நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு தங்கள் கருத்தை மதிப்பு மிக்கதாக செய்யும் முயற்சிக்கும் வரவேற்கப் படுகிறார்கள். உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சூழலில் இணக்கமான லாபம் தரும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தார்மீக கடமையைத் தவிர வேறு ஒரு குறிப்பிட்ட நிலையான தேவைகள் இல்லை.
  1. விவசாய பண்ணை ஒரு நவீன அணுகுமுறையை வளங்குன்றா வேளாண்மையில் பயன்படுத்துமா?
வளங்குன்றா வேளாண்மையின் பொருள் குறைந்த விளைச்சல் அல்லது ஏழை விவசாயிகளுக்கான முறை என்பது அல்ல. இது  19-ம் நூற்றாண்டின் வகைப்படுத்துதல் முறையாகும். மாறாக, வளங்குன்றா வேளாண்மை, தற்போதைய வேளாண் சாதனைகள் எந்த விவசாயத்தை நம்பியிருக்கும் வளங்களின் மதிப்பு குறையாமல் அதிக லாபம் மற்றும் பண்ணை லாபத்தைப் பராமரித்தல் போன்ற சிக்கலான அணுகுமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிர் சுழற்சி வேலைகள் பூச்சிக் கட்டுப்பாட்டைக் குறைத்தல் செலவுகள் போலவே, உயர் விளைச்சல் ரகங்களின் செலவுகளும் இருக்கிறது, அது போலவே, நேற்றைய குறைந்த விளைச்சல் தரும் இரகங்களின் செலவுகளும் இருக்கிறது. விவசாயத்தை வளங்குன்றாமல் செய்வது என்பது, பயிர்களைத்தின்னும் பூச்சிகளைக் கவனிப்பது என்று பொருளல்ல. அது உயர் தரமான மண், பயிர் சுழற்சி, மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகளைப் பயன்படுத்தி ஒரு முற்றிலும் மாறுபட்ட வழியில் பூச்சிக் கட்டுப்பாட்டை நெருங்குதலாகும்.
நாம் நமது விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளைக் குறைவாக மதிப்பிட்டால், சிறந்த இன்றைய உற்பத்தியை ஏற்றுக்கொண்டால், மிகவும் மாசுபட்டுள்ள விவசாயத்தைத் தான் நாம் இந்த நாட்டில் செய்ய முடியும். அதிக உற்பத்தியை மேம்படுத்தும் சவாலில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வளங்களைக் கொடுக்க வேண்டும்.
  1. வளங்குன்றா வேளாண்மைக்கு பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு  ஒதுக்கிய நிலம் தேவைப்படுமா?
    வளங்குன்றா வேளாண்மை எதிர்ப்பாளர்கள் அது குறைவாக மகசூலை உற்பத்தி செய்வதனால் பூங்கா மற்றும் சரணாலயத்திற்கு ஒதுக்கிய நிலங்களை மீட்டு விவசாயத்தின் அடிப்படை உணவு மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யத் தேவையில்லை. ஆனால் வளங்குன்றா வேளாண்மை குறைவான மகசூலைத் தருவதில்லை. தொழில்துறை விவசாயத்தை விட நீண்ட கால முறைக்கு அதிக திறன் அவசியம் இல்லை, எனவே பயிர்களின் குறைந்த அளவு உற்பத்திக்கு அதே அளவு நிலம் போதுமானது. நிலையான விவசாயத்தை இயற்கை பகுதிகளில் மாற்றத் தேவையில்லை நிலங்களை நமக்கு தேவைப்படும் பூங்காக்கள் மற்றும் பொழுது போக்குக்காக ஒதுக்கியது, நமது விவசாயத்தைப் பாதிக்காது. இந்த நாட்டில் பூங்காக்களின் அத்து மீறல் என்பது வெறுமனே ஒரு கருத்து.  பிரச்சனை என்னவென்றால், அச்சுறுத்தல் குறிப்பாக நகரங்களை சுற்றியிருக்கும் வளர்ச்சி, விவசாயத்தில் முன்னிறுத்துகிறது. நகரப்பகுதிகள், விவசாயத்திற்குக் கிடைக்காமல் செய்த பண்ணை நிலங்களை ஏப்பமிடுவது தொடர்கிறது. நகரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், விவசாய பயன்பாட்டுக்குரிய பண்ணை நிலங்களைப் பாதுகாக்கவும் ஐக்கிய அமெரிக்கா சில கொள்கைகளை வகுத்துள்ளது. இது குறிப்பாக முக்கியமானது, நீண்ட தூர வேளாண் நிலங்களிலிருந்து வரும் உணவுப்பொருட்களை விட, உள்ளூர் வேளாண் நிலங்களிலிருந்து வரும் உணவுப்பயிர்கள் மக்களைச் சென்றடைவது தான் குறிக்கோளாக இருக்கிறது.
  2. உயிர் எரி சக்திப் பயிர்களை நிலையாக வளரச்செய்ய முடியுமா?
நிலையான வழியில் வளர்ச்சியடைந்தால், உயிர்எரிசக்தியை, மின்சாரம், எரிபொருள் இரண்டிலும் சில இடர்ப்பாடுகளுடன் நிலையாக உற்பத்தி செய்வதை விட எண்ணெய், நிலக்கரி மற்றும் அணுசக்தித் தொழில்நுட்பங்களில் உற்பத்தி செய்வதில் நிறைய இடர்ப்பாடுகள் உள்ளது. உயிர்சக்திப் பயிர்கள் மற்ற சக்தி நிலையங்களிலிருந்து வெளிவிடப்படும் வெப்பத்தை எடுத்துக்கொண்டு உலக காலநிலை மாற்றத்தில் பங்கு கொள்கிறது. ஆனால் உயிர்சக்தி முன்னேற்றத்தினுடைய வேகமான உலக விரிவாக்கம் விரும்பத்தகாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் உணவு, நார்ப்பயிர்கள், தொழில் மூலப்பொருட்களின் உற்பத்தியின் உலகத்திறனைக் குறைக்க வாய்ப்புள்ளது. யூ.சி.எஸ். வழிகாட்டும் கொள்கைகளின் தொகுப்பை வைத்திருக்கிறது அது நாட்டுக்கு உயிர்சக்தி முன்னேற்றத்தில் ஒரு முறையில் உதவி செய்கிறது; வாய்ப்புகளை அதிகப்படுத்தியும் மற்றும் இந்த புதுப்பிக்கும் வளங்களுடன் இணைந்துள்ள சவால்களைக் கண்டு பிடிக்க உதவுகிறது.
9.வளங்குன்றா வேளாண்மை அறிவியல் பூர்வமானதா?
வளங்குன்றா வேளாண்மை உறுதியாக அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. பயிர்கள், பூச்சிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கிடையே பலதரப்பட்ட நெருங்கிய தொடர்பு, விலையுயர்ந்த தொழில்நுட்பத் தேவைகளான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் தேவையைத் தவிர்க்கிறது. இந்த மாதிரியான அறிவு நிறைய அறிவியல் துறைகளில்  மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பொறுத்து இருக்கிறது; அதில் பூச்சியியல், களை அறிவியல், உழவியல் துறைகள் அடங்கியுள்ளது. அறிவியல் விஞ்ஞானிகள் இந்தக்களத்தில் ஒன்றாகப் பணியாற்றும் பொழுது, வேளாண்மை ஒருமுறை எனப் புரிந்து கொள்வார்கள். ஒரு நல்ல உதாரணமாக, மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச் சூழலியல் திட்டம் இருக்கிறது,  பெரிய அளவிலான, நடந்து கொண்டிருக்கும் பல கட்டுப்பாட்டுக் கல்வி சூழ்நிலையியல் மற்றும் பொருளாதாரவியல் மற்றும் தாவர உயிரியலாளர்கள் பொருளாதார ரீதியான உருளைக்கிழங்கு உற்பத்தியைப் புரிந்து கொள்ள மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச்சூழல் முறைத் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். உருளைக்கிழங்கு வளர்ப்பவர்களில், யார் பூச்சிக்கொல்லிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் அல்லது உரத்தினைப் பயன்படுத்துவதைக் குறைத்தலுக்கு ஆலோசனை தேவைப்படுகிறவர்களுக்கு மதிப்பு மிக்க தகவலைக் கொடுத்தல் வேண்டும். மண், பூச்சிகள் மற்றும் உருளைக்கிழங்கு இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்தல் ஒரு நீண்ட கால தொகுப்பாகும். பல முக்கிய குறிக்கோள்கள், உதாரணமாக, மண்வளம், தாவரத்தின் வளரும் தன்மை, பூச்சிக் கொல்லிகளின் தன்மைகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள். களைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும்  பல்வேறு காலநிலை மற்றும் அழுத்த நிலைகளின் கீழ் உருளைக்கிழங்கு மகசூலினுடைய கலந்துரையாடல்கள் மேல் விரிவான மற்றும் பயனுள்ள தகவலின் பரந்த அளவு மூலம் திட்டம் உருவாகிறது. (ஆல்போர்டு, ஆர்.ஏ. 1996. சூழ்நிலையியல், பொருளாதாரம் மற்றும் உருளைக்கிழங்கின் பயிரிடும் திட்டத்தின் மேலாண்மை: மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச்சூழல் முறைத் திட்டத்தின் முதல் நான்கு வருடங்களின் விவரம் மெய்னே வேளாண்மை மற்றும் வன சோதனை நிலையம், மெய்னே பல்கலைக்கழகம், புல்லடின் 843.)
வளங்குன்றா வேளாண்மை, வலுவான அறிவியல் ஆதாரத்தைச் சார்ந்திருக்கிறது, இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தொழில் முறை வேளாண்மை சம்பந்தமான, வெவ்வேறு விதமான கலவையான வேளாண்மை முறையில் அறிவியல் விஞ்ஞானிகள் இன்னும் தெரியாத இணைப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனாலும் வேதியியலாளர்கள் பூச்சிக்கொல்லிகளை உருவாக்குகிறார்கள், வளங்குன்றா வேளாண்மைக்கு வளமான மண்களில் உள்ள வெளிக்கொண்டு வராத ஆச்சரியங்களைக் கண்டுபிடிக்க மண் அறிவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். உயிரியலாளர்கள் பயிர்கள் களைக்கொல்லி களைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவைகளாக உருவாக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மைக்கு அறுவடை செய்யவும், பயிர்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தவும் புது வழிகளைக் கண்டுபிடிக்கவும் அதிகமாகக் களை சுற்றுச்சூழலியலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
10.வளங்குன்றா வேளாண்மை வேலை செய்கிறதா?
இந்த கேள்விக்கு பதிலளிப்பது நிறைய காரணங்களால் சிக்கலானது. வளங்குன்றா வேளாண்மையின் பொருள் மாறக்கூடியது மற்றும் பல வகையான வழக்கங்களை சுட்டிக்காட்ட முடியும் ஆனால், ரசாயனத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்தலைச் சார்ந்திருக்கிறது.மேலும்,வளங்குன்றா முறைகள் வளர்ச்சிக்கு நேரம் எடுத்துக்கொள்ளும். மண்ணின் தரத்தையும், முக்கியத்துவத்தையும் நிலை நிறுத்துவதற்கு பாரம்பரிய வேளாண்முறை வருடக்கணக்கில் எடுத்துக்கொள்ளும். பாரம்பரிய வேளாண்மையைப் பயன்படுத்திப் பயிர் வளர்த்தலில் மண்ணிற்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி ஊட்டமளித்தல் மற்றும் அவைகள் தரமற்ற நிலத்தில் வளர்வதை வளங்குன்றா வேளாண்மை தக்க வைக்கும் என்பது தவறான கருத்தாகும். ஒப்பீடு வெவ்வேறு விதமான பருவநிலை மற்றும் காலநிலையில் நீண்ட காலத்திற்கு செய்வதுதான் மதிப்புள்ளதாக இருக்கும். தவிர, ஒப்பீட்டின் முடிவு, வளங்குன்றா அணுகுமுறை அதிக உற்பத்தி மற்றும் பொருளாதார ரீதியாகத் தகுதி உடையது.(Northwest Area Foundation, A better row to hoe: The economic, environmental and social impact of sustainable agriculture, 1994.)
ஒப்பீட்டைக் கணக்கில் எடுக்கும் போது, ஒன்றைக்கணக்கில் வைத்துக்கொள்வது முக்கியமானது, மகசூல் குறைவானால், விவசாயிகளின் குறைந்த லாபத்திற்கு வளங்குன்றா வேளாண்மையைக் காரணம் சொல்லக்கூடாது. குறைந்த மகசூல் கிடைத்தால் முடிவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்குக் குறைந்த செலவு அல்லது சக்தி, உண்மையில் வயலில் லாபம் அதிகரித்துத் தான் கிடைக்கும். வளங்குன்றா முறையின் பண்ணைக்குத் தேவையான வெளிப் பொருட்கள் லாபத்தைக் கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. மேலும், இயற்கைச் சீற்றங்களால் வேளாண்மைக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பாரம்பரிய வேளாண்மையின் எதிர்பார்க்க முடியாத விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது வளங்குன்றா உற்பத்தி முறையில் அதை வலிமையாக்குகிறது.



கால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை



கால்நடை பராமரிப்பு

விவசாயிகளின் உயிர்த் தோழனாகவும், விவசாயம் பொய்த்துப் போகும்போதும் அவர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் சிறப்பு பெற்றவை கால்நடைகள். ஆடு, மாடு, என விவசாய பணிகளோடு இணைந்துள்ள கால்நடைகளுக்கு தற்போது புதிது புதிதாய் நோய்கள் தாக்குவது விவசாயிகளை அச்சப்படுத்தி வருகிறது.
அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோமாரி போன்ற கால்நடைகளுக்கான நோய்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையே தொடர்கிறது.

வழிமுறைகள்

கால்நடைகளுக்கு அன்றாடத் தேவைக்குண்டான அடர்தீவனம், பசுந்தீவனம் போதுமான தண்ணீர் கொடுத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் நமக்கிருக்கிறது. அதேபோல் கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பாரம்பரியமாக நாம் கையாண்டு வந்த வழிமுறைகளைத் தெரிந்து, அவற்றைப் பின்பற்றுவது நலம் பயக்கும். அந்த வகையில், கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மூலிகை மசால் உருண்டை.
ஆடு, மாடு போன்ற கால்நடை களுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களும் தாக்காது. சாப்பிடுகின்ற தீனி எளிதில் ஜீரணமாகும். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
1. அருகம்புல்
2. ஆவாரம் பூ இலை
3. வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கண்ணி
4. சோற்றுக்கற்றாழை
5. ஆடாதோடா
6. வாத நாராயணன் இலை
7. ஓரிதழ் தாமரை
8. செம்பருத்தி
9. தும்பை
10. அழுதாழை
11. பெரியா நங்கை
12. சிறியா நங்கை
13. அமுக்காரா
14. அம்மாள் பச்சரிசி
15. வாழைப்பூ
16. வெற்றிலை
17. பிரண்டை
18. துத்தி
19. மாவிலை
20. வல்லாரை
21. துளசி
22.முடக்கறுத்தான்
23. மணத்தக்காளி
24. புதினா
25. நெருஞ்சி
26. நெல்லிக்காய்
27. நுணா
28. பொன்னாங்கண்ணி
29. நல்வேளை
30. நாய்வேளை
31. பால்பெருக்கி
32. குப்பைமேனி
33. கோவை இலை
34. மொசு மொசுக்கை
35. கருவேப்பிலை
36. கீழாநெல்லி
37. அகத்தி
38. சரக்கொன்றை
39. நிலவேம்பு
40. வேலிப்பருத்தி
41. வெட்டிவேர்
42. மருதாணி
43. வில்வஇலை
44. விஷ்ணுகிரந்தி
45. மாதுளம் பழம் தோல்
46. தவசி முருங்கை
47. அப்பக்கோவை
48. அல்லி
49. தாமரை
50. அரசு இலை
51. வேப்பிலை
52. தூதுவாளை
53. தொட்டாச்சிணுங்கி
54. எலுமிச்சை இலை
55. கொய்யா இலை
56. ஆல் இலை
போன்ற மூலிகைகள் மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும்.
மேலும்,
1. சுக்கு
2. மிளகு
3. திப்பிலி
4. பூண்டு
5. அகில்
6. மிளகாய் வற்றல்
7. கிராம்பு
8. ஜாதிக்காய்
9. கடுக்காய்
10. வெந்தயம்
11. அதிமதுரம்
12. சீரகம்
13. கசகசா
14. ஓமம்
15. உப்பு
16. தண்ணீர் விட்டான் கிழங்கு
17. சிறிய வெங்காயம்
18. கொத்தமல்லி விதை
19. பெருங்காயம்
20. தேங்காய்
21. பனைவெல்லம்
22. ஏலக்காய்
23. மஞ்சள்தூள்
ஆகிய சமையலறைப் பொருள்களும் தேவைப்படும். மூலிகைச் செடிகளை தனியாகவும், சமையலறைப் பொருள்களை தனியாகவும் மிக்ஸி, கிரைண்டரில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து ஆரஞ்சுப் பழ அளவிற்கு உருட்டிக் கொண்டு மஞ்சள் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் மூலிகைகளைக் கொண்டே அந்த மூலிகை மசால் உருண்டைகளாய் தயார் செய்து கொள்ளலாம். மூலிகைகள் கிடைக்கும் பொழுது அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்
ஆதாரம் : ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளை