பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
3. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல்
4. தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.
5. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்
6. பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை, தட்டைப்பயிறு
7. வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்
8. சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.
9. மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.
10. சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்
11. ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ.கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு – உருளைக் கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு
12. அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக் கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக் கிழங்கு / கரும்பு – உளுந்து / பச்சைப் பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்
13. ஒருவிதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இருவிதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். எ.கா: உருளைக் கிழங்கு / கடுகு / நிலக்கடலை / பயிறு வகைகள் – நெல் / கோதுமை / கரும்பு / கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.
14. சில பயிர்கள் கெட்ட வாடையை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பின் இப்பயிர்களைப் பயிரிட்டால் சில வகைப் பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
15. ஊடுபயிரல்லாத தனிப்பயிர் செய்தபின் அதிகம் அரிதாள் கட்டை விடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: கரும்பு / வெள்ளைச் சோளம் / பருத்தி / அவரை – தீவனப் பயிர்கள்
16. சில வறட்சி தாவரங்களைத் தொடர்ந்து ஈரப்பதம் விரும்பும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நெல் – கொண்டைக் கடலை
யூரியாவிற்கு மாற்றாக இயற்கை மருந்து
யூரியாவை விட இயற்கை மருந்து நல்லது!யூரியாவிற்கு மாற்றாக, தானே தயாரித்துப் பயன்படுத்தும், இயற்கை உரம் குறித்து விளக்கும், விவசாயி பாஸ்கரன்:
தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான எண்ணம், நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நைட்ரஜன் சத்தை செடிகள் கிரகிப்பதற்காகவே, உப்புத் தன்மை அதிகம் உள்ள யூரியாவை பயன்படுத்துகிறோம்.செடிகளின் வேர்களில் நீர்ச்சத்து இருக்கும் வரை தான், நாம் போடும் யூரியாவை உறிஞ்சும். மீதி உள்ள யூரியா பூமிக்கடியில் சென்று தங்கி விடும். இப்படி ரசாயன உரங்களும், யூரியாவும் அதிகப்படியாக பூமியில் சேருவதால், இயற்கையாக வளரும் நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக, இயற்கை முறையில், நான் தயாரித்த உரத்தையே யூரியாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தி வருகிறேன்.
தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில், 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லத்தை கலந்து, மூடி வைத்து நொதிக்க விட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த, 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை கலந்து நொதிக்க விட வேண்டும்.இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன், தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலந்து, ஒரு இரவு நொதிக்க விட வேண்டும்.இந்தக் கரைசல், தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு, 2 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து, சில மணிநேரம் வைத்திருந்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டு பத்திற்கு மாறிவிடும்.இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாக தெளிக்க வேண்டும்.
அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து, ஆரோக்கியமாக வளர துவங்கி விடும். இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக் கரைசல்’ என, அழைக்கின்றனர்.இதுதவிர, இலை, தழைகளை கொண்டே இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப்பாகவும், ஊட்டச்சத்து கொடுக்கலாம்; இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா, 5 கிலோ வேம்பு, புங்கன் நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடாதொடா இலைகளை ஒன்றாக கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின், ஆற வைத்து வடிகட்டி, 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலக்க வேண்டும். இக்கரைசலில் இருந்து, 2 லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீர் கலந்து, ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.இவற்றை பயன்படுத்துவதால் மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.தொடர்புக்கு: 94428 – 71049
ஈ எம் பற்றி
ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம்…80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ,எம். .
இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம்,அசட்டோபேக்டர்,அசிட்டோபேக்டர்,ட்ரைகோடர்மா,சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிகளும்.லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா,ரே பூசணம்,ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களும் உள்ளன…ஈஎம் பற்றி அறிமுகம் போதுமானது.இது கால்நடை வளர்ப்பில் என்ன வகையில் பயன் படுகின்றது என்பதை மட்டும் பார்க்கலாம்.
ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம்.இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம்.இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும்.இதனை வெளியில் வாங்குவது எளிது.
உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.
உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.
ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ
செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.
பயன் படுத்தும் முறை
இந்த இரண்டாம் நிலை திரவத்தில் ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து பயன் படுத்தலாம்.இது கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன் படும்.தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.தொழுவத்தின் துர்நாற்றம் குறையும்
ஈஎம் பொக்காஷி எனும் தவிடு உணவு தயாரிக்கும் முறை,தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில் ஏ.ஈ.எம் எனும் இரண்டாம் நிலை திரவத்தை தவிடு புட்டு பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் பிளாஸ்டிக் பாயில் கட்டி வைக்க வேண்டும்.ஒருவாரம் சென்றபின் திறந்து பார்க்கும் போது மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூசனம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி.இதனை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்…
ஒருலிட்டர் தாய் திரவம் சுமார் 300 ரூபாய் வரும்.இதனை சுமார் ஆறு மாதம் வரை பயன் படுத்தலாம்.இரண்டாம் நிலை திரவத்தை 30 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.வாங்கியவுடன் 1 லிட்டர் தாய் திரவத்தையும் பயன் படுத்த வேண்டாம்.நம்முடைய தேவை பயன் பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன் படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயார் செய்யுங்கள்..நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள்.
நான் எனது மண்ணில்லா தீவன வளர்ப்பிற்கும்,தொழுவத்தில் தெளிப்பதற்கும்.கோழிகளுக்கு குடிநீரில் கலப்பதற்கும் தொடர்ந்து பயன் படுத்துகின்றேன்..நல்ல பலன் தான் கொடுக்கின்றது…
மீன் அமிலம் தயாரிப்பது
மீன் அமிலம் தயாரிப்பது :
தேவையான பொருள்கள் + செய்முறை :
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
பதம் அறிதல் :
நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.
இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.
பழவாடை அறிதல் :
பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
பயன்படுத்தும் முறை :
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்
பயன்கள் :
பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
வைப்பு :
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment