Tuesday, September 27, 2016

இன்னுமாங்க சக்கரைக்கு மருந்து சாப்டுறீங்க?

" ஆமாங்க வேற வழி என்னதான் யோகாசனம், நடைப்பயிற்சி பண்ணினாலும்  சக்கரை நார்மலுக்கு வரலையே "

எப்பங்க மருந்தை நிறுத்தப்போறீங்க?
" சக்கரை நார்மலுக்கு வந்ததும் மருந்தை நிறுத்தீருவேங்க "
என்னங்க, இப்படி அப்பாவியா இருக்கீங்க.! இரண்டாயிரமாவது  ஆண்டில்  சாப்பிடும் முன்  சக்கரை  அளவு 130 வரை இருக்கலாம் என்றார்கள் இப்பொழுது 110 வரை தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். பிறகெப்படி உங்களுக்கு சக்கரை குறையும்? வெள்ளக்காரன்  எங்கோயோ இருநெதுட்டு மருத்துவ ஆராய்ச்சிங்கற பேர்ல என்னத்தையாவாவது உள றிட்டு போறான் அவனுக்கு மருந்து விக்கணும்லா ஆனால்,  உங்களுக்கு நோய் போகனும்னா நம்ம நாட்டு சித்தர்களும் யோகிகளும் சொல்றத கேளுங்க  ஆவரைக்குடிநீரை பத்து நாள் குடிச்சா ச க்கரையால் வந்த அத்தனை அறிகுறிகளும் குணமாகும்னு   சொல்கிறார் சித்த மருத்துவ மேதை  சிவ சண்முகம் , ஆறுமாதம் வரை தொடர்ந்து யோகா பண்ணினால் எத்தகைய நிலையில் செயலிழந்துள்ள கணையத்தையும் மீண்டும் சீராக இயங்க வைத்துவிடலாம்     என்று வழிகாட்டியதோடு பயிற்சி முறையையும தெளிவாக வகுத்தளித்துள்ளார்   யோகி பெங்களூர் சுந்தரம்  அய்யா    இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?

 "தெரியாமல்  என்ன அதுதான் எவனைப்பாத்தாலும் வெந்தயத்தை   பிசைஞ்சி குடி  , கொத்தமல்லியை காய்ச்சிக்குடினு எதையோ உளறிட்டுப் போறானே  இதற்கெல்லாம் ஆதாரம் எங்க இருக்கு?

"ஹஹ்ஹா … அய்யா.!
 எதையும் ஆதாரத்தை வைத்துதான் நம்ப வேண்டும் என்று உங்களை நம்ப வைத்ததில் தான்  வெள்ளக்கார மருத்துவத்தின் வெற்றியே அடங்கி உள்ளது.  உங்கள் உடலை உணர அடுத்தவன் கண்டுப்பிடிச்ச   மிசினும் அளவீடும்தான்   வேணுமினா தமிழன் பல்லாயிரம் காலமாக கண்டறிந்த அத்தனை மருத்துவ ஞானமும்  குப்பை என்றும்  இத்தனை காலமும் மனிதன் உயிரை இந்த  மண்ணில் நிலை நிறுத்தி வைத்த முன்னோர் வாழ்க்கை நெறியும்
 முட்டாள் தனமானது என்று  ஒப்புக்கொள்கிறீர்களா?

 இப்படி நாம் கேட்டதும் எல்லாம் உண்மைதான்   ஒத்துக்கொள்கிறேன்.அடிக்கடி சிறுநீர் போகிறது  அதை நிறுத்த ஏதாவது உபயம் கூறுங்கள் என்றார் பெரியவர்  சரியென்று  ஒரு முன்னோர் வழி முறையை கூறி இதை பத்துநாள் செய்யுங்கள்  என்று கீழ்கண்ட  வழிமுறையை கூறினேன்  ஆங்கில மரு ந்துகளை பாதியாக குறைத்துவிட்டு எளிய யோகாப் பயிற்சியோடு இதை  சக்கரைக்கு பல ஆண்டுகாக மருந்து சாப்பிட்டு வரும் கோமாளிகள்  யாரும் பயன்படுத்தி பயனடையலாமே…!

ஆவாரைக்குடிநீர்

 நாவல் பட்டை, 
மருதம்பட்டை, 
கோரைக்கிழங்கு.
 கடுக்காய்,
 தான்றி, 
நெல்லி வற்றல், 
கட்டுக்கொடி, 
போஸ்தக்காய் தோல், 
கடலழிஞ்சிப்பட்டை, 
ஆவரைப்பூ, 
ஆவாரைப்பட்டை, 
ஆவாரை வேர்ப்பட்டை.


செய்முறை:-
     இப்பன்னிரண்டு சரக்குகளும் வகைக்கு ஒரு  35 கிராம் வீதம் எடுத்து இடித்து சூரணித்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது ஒன்றரை தேக்கரண்டி சூரணத்தை கால்படி <300 மில்லி>நீரில் போட்டு, அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி ஆறவிட்டு வடித்துச் சாப்பிடவும்.  இப்படி தினம் இரு வேளையாக பத்து நாட்கள் சாப்பிட மதுமேகம் அதனாலுண்டான அதிக தாகம், நீர்ப்போக்கு, அழலை இவை நீங்கும்.!  - சித்த வைத்தியத் திரட்டு

செய்துதான் பாருங்களேன்.!

சக்கரை நோயாளிகள் இயற்கை வழியில் செயற்கை மருந்துகளை நிறுத்தி இன்பமாக வாழ நமது இன்சுலின் என்ற ஆவணப்படத்தை பாருங்கள்.!

No comments:

Post a Comment