Tuesday, March 21, 2017

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம் !



பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால்தாய்பாலில் இருந்து தான்குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறதுஇதனால்தான் 6மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள்அறிவுறுத்துகின்றனர்உடல்நிலை காரணமாகவும்சத்தான உணவுகளைஉட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன்மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
மூலிகை கசாயம்:
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால்தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால்பெருகும்.
முருங்கை கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால்தாய்பால் அதிகரிக்கும்முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால்அதிகம் சுரக்கும்.
அதே போல் ஆலம் விழுதின் துளிர்விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில்கொடுத்துவர தாய்பால் பெருகும்குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டைநல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால்அதிகம் சுரக்கும்இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.


உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது.கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

No comments:

Post a Comment