Tuesday, March 21, 2017

ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்வது எப்படி?''


ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்வது எப்படி?''

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரோட்டம் பார்ப்பதில் அனுபவம் வாய்ந்த எஸ்.சண்முகசுந்தரம் பதில் சொல்கிறார்.
''தென்னை மரத்தில் இடி விழுந்து விட்டால், நாம் மனம் ஒடிந்து விடுவோம். ஆனால், அதில் ஒரு சூட்சமம் அடங்கியுள்ளது. அதாவது, 'இடி விழுந்த மரம் இருக்கும் பகுதியில் அதிக நீரோட்டம் இருக்கும். அந்தப் பகுதியில் கிணறு தோண்டினால், வற்றாத நீரூற்று கிடைக்கும்' என்கிற உண்மையைப் பெரியவர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளனர். ஆனால், நாம் 'மரத்தில் இடி விழுந்து விட்டால் குடும்பத்துக்கு ஆகாது’ என்று அஞ்சுகிறோம். என்னுடைய அனுபவத்தில், இந்த அறிகுறியை வைத்து நீரோட்டம் பார்த்து வெற்றி கிடைத்திருக்கிறது.
நீரோட்டம் பார்க்கும் கலையை எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இயற்கையாகவே உடலில் காந்த சக்தி உள்ளவர்களால் மட்டுமே செயல்படுத்த முடியும். சில பகுதிகளில், எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்கள் நீருற்று பார்த்தாலும், தண்ணீர் கிடைக்காது. நீருற்று பார்க்கும் கருவிகளும், சரியான இடத்தைக் காட்டாது. இந்த இடங்களில், நீருற்று பார்க்கும் நபர், அருகில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டிய மண்ணை, கை, கால்களில் பூசிக் கொண்டு நீருற்று பார்த்தால் சரியான இடத்தை காட்டும். நீருற்று உள்ளதைத் துல்லியமாக அறிய... உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் செம்பு உலோகப்பொருள் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக நீருற்று பார்க்க, பச்சைக் குச்சி, தேங்காய்... போன்றவை பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை வைத்து, எத்தனை அடி ஆழத்தில் நீருற்று உள்ளது என்றும்கூட கண்டறிய முடியும்''
தொடர்புக்கு, செல்போன்: 93444-33076

No comments:

Post a Comment