Sunday, October 16, 2016

நாடி என்றால் என்ன?



நோய் அறிதலுக்கு முக்கியமான நாடி பற்றி காண்போம்.
 
                       நாடி 
     உடலில் உயிர் தங்கியிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும்.
          
           நாடிதாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடிவாதம்பித்தம்ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும்.
சுருங்கக் கூறின்நாடியைக் குறிக்கும் தாது
 
        
 
            தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று புரிகளாகக் கருதப்படு கின்றன. 
             அவையே வாதம்பித்தம்ஐயம்(கபம்)  எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்புஎழுவகைத் தோற்றம்எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும் என்பர்.
 
நாடிகளின் தொகை
          உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.
 
நாடிகளின் எண்ணிக்கை
                 நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலைபிங்கலைசுழிமுனைகாந்தாரிகுகுசங்கினிஅசனிஅலம்புடைபுருடன்சிங்குவை என்பன.
இந்த பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலைபிங்கலைசுழு முனை என்பன.
 
நாடிகளும் இயங்கும் இயக்கமும்
          நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.
 
1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.
 
2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.
 
3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.
 
4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.
 
5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.
 
6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.
 
7. அசனி – வலது காதில் நிற்கும்.
 
8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.
 
9. சங்குனி – குறியில் நிற்கும்.
 
10. குகு – அபானத்தில் நிற்கும்
 
என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


மனித உடலின் நாடிகளும் அவற்றை அறியும் விதமும் பற்றி அறிந்துகொள்வோம்.

  
நாடிகளில் மூன்று
        நாடிகளில் வாதம்பித்தம்ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. 
       இம்மூன்று நாடிகள் உடலுக்கு நேர்ந்த நோய்களை கணித்து அறிந்துகொள்ள உதவும்.
 
"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று''
என்ற திருக்குறள் உரையால், மேற்கண்ட மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று சொல்வதைக் காண்கிறோம். 
              அவ்வாறேமருத்துவ நூல்களும் வாதம் உட்பட மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.
    மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில்களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளேயன்றிநோய்களல்ல. 
மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும்வெறியேற்றமும்தனித்தும்பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்;
 உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர் 
        தசைகளின் வழவழப்பான இயக்கத்திற்கு உயவு எண்ணெய் அதாவது மோட்டார் வாகனங்களுக்கு இடும் கிரீஸ் போல  பயன் படுவது ஐயம் அதாவது கபம். 
     இவைஉணவின் செயல்களினாலும்ஒவ்வாமையாலும்இயற்கை மாறுபாட்டினாலும்மிகுதலும்குறைதலும் நேரும் பொழுதுஅவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

நாடிகளின் செயல்கள்
மூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் கூறப்படுகிறது. 
மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்துஆராய்ந்துநோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை மறைவிடம்குதிக்கால்சந்துஉந்திகைமார்புகழுத்துபுருவமத்தி,காதுமூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் செயல்பட்டுக் கொண்டிருப்பதனால்அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை
ஆராயலாம்  என்று கூறப்படுகின்றன..
        நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றனஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும்ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால்கைகளில் ஆணுக்கும்பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால்ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுநுட்பமான அறிவியல் உண்மையாகும்.
             நாடிகளை ஆராயும்போதுகையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்கமுதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும்இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும்மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.
 நாடி வேளை நேரம்
வாதம் பகலும் இரவும் 6 - 10 மணி
பித்தம் பகலும் இரவும் 10 - 2 மணி
கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 - 6 மணி
என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப்பட்டுள்ளன. 
     இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் மந்தமானாலோமாறுபட்டாலோ நமக்கு நோயோ மரணமோ ஏற்படும் என்று  உணர்த்தப்படுகிறது.
நாடிகளும் காலமும்:
 " காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்
பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்
மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''
         பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும்அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும்மாலை பத்து நாழிகை கபம் என்னும் ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். 
    அதேபோல்சூரியன் மறைந்தவுடன் முன்னிரவு பத்து நாழிகை வாதமும்அதன்பின் நள்ளிரவு பத்து நாழிகை பித்தமும்பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். 
   இதனை வாதபித்தஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம்’’ எனவும் கூறுவர்.
நாடிகளும் மாதங்களும்
 " கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்
கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்
விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்
விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்
திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்
சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்
நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்
நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''
கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகைமாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்,
நாடிபார்க்கும் மாதம்வகை:
  " சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்
அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்
மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி
வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''
 " தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்
மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்
தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று
நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''
 சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும்ஆனிஆடிஐப்பசிகார்த்திகையில் நண்பகலிலும்மார்கழிதைமாசியில் மாலை ஏற்பாடு வேளையிலும்பங்குனிஆவணிபுரட்டாசியில் இரவிலும் நாடிகளைக் கணிக்க உரிய நேரமாகும் என்பதனால்இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. 
        வாதபித்தஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும்காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம். 
அதே போல,
         ஆடிஆவணிபுரட்டாசிஐப்பசி ஆகிய திங்களில்வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகைமார்கழிதைமாசி ஆகிய திங்களில்ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனிசித்திரைவைகாசிஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். 
     அவ்வாறேசிறு பொழுதான ஆறில்வைகறையில் வாதமும்நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும்.
இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.
நாடி பிடித்து அறிய முடியாத நபர்கள்....

            பெண்போகர்நீண்டகால நோயாளிகுதிரை ஏற்றம் செய்தோர்யானை ஏற்றம் செய்தோர்வழி நடைப்பயணிபேருண்டி உண்டோர்போதைப் பொருள் கொண்டவர்நீர்ப்பாடுநீரிழிவுபெருநோய்வீக்கம் ஆகிய நோய்களுற்றோர்அத்தி சுரத்தால் இளைத்தவர்பயமுற்றோர்துன்பமுற்றவர்விடந் தீண்டியவர்ஓட்டமுற்றவர்அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர்சூல் கொண்ட பெண்மாதவிடாயான பெண்பெரும்பாடுற்ற பெண்அதிகம் தூங்கியோர்எண்ணெய் தேய்த்து முழுகியவர்சினங்கொண்டோர்மோகங் கொண்டோர்முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர்மதங்கொண்டோர்பெருத்த உடலினர்என்பு முறிந்தோர்சோகை நோயினர்பிணத்தைத் தொட்டோர்வாந்திவிக்கல் எடுத்தோர்விரத மிருப்பவர்மழையில் நனைந்தோர்இசைப் பாடகர்களறி ஆடுவோர்நாட்டியமாடிக் களைப்புற்றோர்மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி ஓட்டத்தை அறிவது இயலாத காரியம் என்கின்றனர்.
மேலே குறிப்பிட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் உடல் செயல்திறனால்  அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த நேரத்தில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும்கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த நேரத்தில்  நாடி பிடித்து சோதனை நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால்மேற்கண்டவர்களை நாடி பிடித்து அறியமுடியாதவர்கள்எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூத நாடி:
        வாதம்பித்தம்ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல.

  “நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’
என்பதற்கிணங்கநாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.

   " சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி
தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''
என்றதனால்ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும்.

    நன்கு ஆராயுமிடத்து வாதபித்தஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.

  இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்கு சாவு என்பதே இல்லை.அதனால் அவன் காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.
பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேர் உறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்துநாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.

குருநாடி:
       வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுறுவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும்காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும்சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும்இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலைகனவுஉறக்கம்துரியம்துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. 

        மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாதபித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலைகனவுஉறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

         குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பதுதான் சரியானது. ஆகவேகுரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணரமுடியாத காரியம் ஆதலால்  யோக வல்லமையினால் தான் அறியமுடியும்.  

   குருநாடிவாதபித்தஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.

  " தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்
தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே''
என்பதினால் 
       குருநாடி வாதபித்தஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. தமரகம்’ எனும் இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதே போல குரு நாடியானது வாதபித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். 

    இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்பதால்குருநாடிநாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும்மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.

நாடி நடை
     நோய் அற்றபோது ஒரு வகை நடையும்நோய் உற்ற போது ஒருவகை நடையும்நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரியிருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள்பறவைகள்ஊர்வனபூச்சிபுழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.

வாத நாடி
  " வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்''
வாத நாடியானது இயல்பினில் அன்னம்கோழிமயில்போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவைமண்டூகம் தாவுவது போலும்ஓணான் போலும்பாம்புஅட்டைவேலிக்குருவிஆமை போலவும் நடக்கும்.

பித்த நாடி
  " ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்''
பித்த நாடியானது இயல்பினில் ஆமைஅட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவைநாகரிகமான அன்ன நடை போலும்மயில் போலும்தாரா போலும்மாடப் புறாஊர்க்குருவி போலும் கருடப் போத்துசிங்கம்பாம்புபிள்ளை குதிப்பது போலமதயானை போலசிறு காக்கை தூங்குவது போலநடக்கும். 

 ஐய நாடி அதாவது கோழைநாடி..
    " போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே''
ஐய நாடியானது இயல்பினில் தவளைபாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடைகொக்கினது உறக்கம்ஊர்க் குருவிசிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும்.
பாம்பு நடையெனப் பதுங்கியும்அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும். 

பூத நாடி
      பூத நாடியானது இயல்பினில்கல்லெறிதல்ஆட்டுக்கிடா பாய்ச்சல்செக்கிடை திருகல்சீறுகின்ற மூஞ்சூறுபந்தடித்து எழும்புதல்ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும்.இதிலிருந்து மாறுபடும் போது,
பூனைபோல நடக்கும்வெள்ளெலி போல குன்றியும் 
வண்டுபோல ஊர்ந்தும் பாம்பு போல நெளிந்தும் 
சங்கு போல ஊர்ந்தும்கார்வண்டு போல ஊர்ந்தும் 
பூதத்தைப் போல ஊர்ந்தும்தேரை போல தாண்டியும் 
காக்கைபோலக் குதித்தும் நெருப்பு போல சுட்டும் 
செக்குபோலச் சுற்றியும் நடக்கு மென்றறியலாம்
என்பதனால்மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும்முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். 
          பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாகவளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவி களுக்கு ஈடாகவிரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மைநோயுற்ற காலம்முதிர்ச்சிமரணத்தின் எல்லை என்பவற்றை யெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு அமைந்திருக்கிறது.


நாடிகளும் அளவுகளும்
          நாடிகளை ஆராயும் போது அவற்றுக்கு உரிய அளவுகளின்படி அமையாமல் குறைந்தோ கூடியோ தோன்றுகின்றனவா என்று அறிவதற்கு நாடிகளின் இயல்பான அளவுகள் குறிப்பிடப் படுகின்றன.

வாத நாடி ஒரு மாத்திரை அளவும்பித்த நாடி அரை மாத்திரை அளவும்ஐயநாடி கால் மாத்திரை அளவும் என மூன்று நாடிகளின் அளவும் குறிப்பிடப் படுகின்றது. 

    இந்த அளவுகளில் மூன்று நாடிகளும் தோன்றினால் உடலில் ஒரு குற்றமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஒரு மாத்திரை என்பது ஒரு கை நொடி அல்லது கண் இமைக்கும் கால அளவு ஆகும்.

நாடிகளுக்குரிய காலங்கள்
     நாடிகளை எல்லா வேளையிலும்எல்லாக் காலங்களிலும் பார்த்தால் அதற்குரிய இயல்புகள் அறிய முடியாமற்போகும் என்பதால்நாடிகளுக்குரிய காலங்களாகச் சிறுபொழுதுபெரும்பொழுது ஆகியவற்றில் உரிய காலத்தை உரைத்துள்ளனர்.
   " காலமே சேத்தும நாடி கட்டுச்சிப் பித்த நாடி
மாலையில் வாத நாடி வகை தப்பிப் பிதறி நின்றால்

நாலஞ்சில் மரணமென்று நன்முனி யருளிச் செய்தார்.''

        நாடித் தேர்வினால் அறியக் கூடிய நோய்கள்
நாடிகள் நடக்கும் இயல்பைக் கொண்டு உடலில் தோன்றிய நோய்களைக் கண்டறிவது மருத்துவத்தில் இயல்பானதாகும். நாடிகளைக் கொண்டு அறியப்படும் நாடிகள்இயல்புக்கு மாறாக நடந்தால் அதுதொந்தம் என்று குறிக்கப்படும்.

       (டி) வாதம் கால்பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடிகள் தோன்றினால்வாந்திமந்தம்வயிற்றெரிச்சல்சுரம்கண்ணில் காந்தல்பாண்டுமூலம் ஆகிய நோயும்,
செவி அடைப்புஉடல் வெதுப்புஉடல்வலிஉடல் நடுக்கம்மூத்திர எரிச்சல்போன்று உடலில் குணங்களும் காணப்படும். 

     (டிடி) வாதம் முக்கால்பித்தம் அரைஐயம் கால் என்னும் அளவில் நாடிகள் தோன்றினால்உடல் வேர்க்கும்சீதளம் உண்டாகும்மேகம் உண்டாகும்உடல் தடிக்கும்காலில் வெடிப்பு உண்டாகும். 

  (டிடிடி) பித்தம் அரைஐயம் அரைவாதம் கால் என்னும் அளவில் நாடிகளின் நடை தோன்றினால்வாய் காந்தும்வாயில் நீரூரும்கண்ணுழலும்இருமல் உண்டாகும்கால்களில் வெடிப் புண்டாகும். 

  (டிதி) வாதம் ஒன்றுபித்தம் ஒன்றுஐயம் ஒன்று என நாடி நடையிருந்தால்,

சாவில்லை சாகாம லிருக்கலாகும்
சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்
சாவில்லை நோயில்லை வறுமையில்லை''
என்றதனால்மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய உடலினர்க்கு இவ்வாறான நாடி நடை அமையுமென்று தெரிகிறது.

     (தி) ஐயம் ஒன்றுபித்தம் கால்வாதம் கால் என்னும் அளவில் நாடி நடை அமைந்தால் காது அடைக்கும்தலையில் வியர்வை உண்டாகும்கண் மூக்கில் நீர் வடியும்மயக்கம் உண்டாகும்.

   (திடி) வாதம் கால்பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடி நடை அமைந்தால்வாய்வு தொடர்பான நோய்கள் உண்டாகும்.

    (திடிடி) வாதம் ஒன்றுபித்தம் முக்கால்ஐயம் ஒன்று என்னும் அளவில் நாடி நடந்தால் தொப்புளுக்கும்தொண்டைக்கும் மூச்சிழுக்கும்நெஞ்சடைக்கும்உடல் முழுவதும் நோவும்மரணம் நெருக்கத்தில் வந்து விட்டதென்று அறியலாம்.
என்று நாடிகளின் தொந்தத்தால் பல நோய்களைக் கண்டறியும் குறிப்புகள் காணப்படுகின்றன. 

          பெரும் பகுதி நாடிகள் மரணத்தின் அறிவிப்பைத் தெரிவிக்க கூடியதாகக் காணப்பட்டாலும்அவற்றின் அறிகுறியை அறிந்த பின்பு அதற்கான மருந்துகளைக் கொண்டு மரணத்திலிருந்து மீளுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

      நாடிமுறைத் தேர்வின் மூலம் அறியக் கூடிய நோய்களாக மருத்துவ நூலார் குறிப்பிடுகின்ற வாத நோய்த் தொகைபித்த நோய்த் தொகைஐய நோய்த்தொகைதொந்த நோய்த் தொகை என்னும் நோய்கள் அனைத்தும் அறியலாம் எனத் தெரிகிறது.

       நாடிகளை அறிக்கூடிய முறைவகுப்புபயிற்சிஅடிப்படைகள் என எதுவும் நாடி நூல்களில் காணப்பட வில்லை. அல்லது கிடைத் துள்ள நாடி நூல்களில் அவ்வாறான பாடல்கள் இணைக்கப் பெற வில்லை.
நோயறியும் முறைகளில் நாடி முறை மிகவும் துல்லியமாகக் கணிக்கப்படுவதாகக் கருத்து நிலவுவதால்அவை பற்றிய அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சித்த மருத்துவத்துக்கு மட்டுமல்லாது உலக மருத்துவத்துக்கே அது உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment