Tuesday, June 21, 2016

பனிச்சரிவும் பாதுகாப்பு முறைகளும் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் ‏ 5


11501501-winter-driving-packing-list-infographics-for-safety-tripபனி மலைச்சரிவும்
இயற்கை, கடும் குளிரைக் காட்டி விளைiயாடுகிறது; சுடும் வெப்பத்தையும் வீசி விளாசுகிறது. இவை எல்லாம்; இடையூறுகளும், இழப்புகளும், பேரிழப்புகளும் பயங்கரமானவை. இழப்புகள், பனிப்பொழிவின் தீவிரத்தைப் பொறுத்து அமைக்கின்றன.
இந்தப் பூவுலகில், நமது நிலைமை மிக மோசமானதல்ல. ஜப்பானின் வடபகுதியில் (2006 ஜனவரியில்), வரலாறு காணாத பனிப்பொழிவு உண்டானது. சுவர்களில் எல்லாம் அடுக்கடுக்காய் பனியுறைவு. ரயில் நிலையங்களில் (அகிடா ரயில் நிலையம்), மற்றும் தண்டவாளங்களையெல்லாம் பனி மூடிவிட்டது. இந்நிலையில், இரயில் போக்குவரத்து எப்படி? அதற்குப் போக்கில்லை. அப்படியெனில் மக்களின் நிலைமை?
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உட்பட, ஏறத்தாழ ஒருமாதகாலமாகப் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவின் பிடியில் சிக்கின. இதனால், மாண்டவர்களின் எண்ணிக்கை, இதுவரை 63. (9.1.2006). காய மடைந்தோர் கணக்கற்றோர். வீடகளிலும், சாலைகளிலும் 3 மீட்டர் உயரத்துக்குப் பனி படிந்துள்ளதென்றால், நிலமையின் பயங்கரத்தை உங்களால் உணர முடியும். பலர், பனிப் படிவை நீக்க முயன்றபோது, குளிர் தாங்க முடியாமல் மரித்தப் போயினர். சில வீடுகளில் அதிகமாகப் பனிபடிந்து விட்டதால், தாங்காத கூரைகள் இடிந்துவிட, மக்கள் மடிந்தனர்.
மழை பெய்யும்போது சப்தம் கேட்கும். பெரும் காற்று வீசும்போதும் சப்தம் கேட்கும். பனிபெய்யும் போது? அப்போதும் சப்தம் கேட்குமளவுக்குப் பனிப் பொழிவும் தீவிரமாய் இருந்துள்ளது.
ராணுவமும், தொண்டு நிறுவனங்களும், சாலைகளில் படிந்திருந்த பனிக்கட்டிகளை நீக்குவதில் ஈடுபட்டனர். பொது மக்களின் உதவியையும் அவர்க்ள வேண்டிக் கேட்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.
காற்று, மழை, அதிகப் பனிப்பொழிவு, பனிப்பாறைகள் அதிக ஈரமடைதல் போன்ற காரணங்களால், பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. சுவர்போன்ற காரணங்களால், பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. சுவர்போன்று உயரமான, செங்குத்தான பனிப்படர்வுகள், 30-40 விழுக்காடு அளவுக்குச் சரிந்து விழும்.
பனிச்சரிவால் விழுந்த பனிக்கட்டிகள், பக்கத்துப் பகுதிகளுக்குப் பரவும் வேகம், மணிக்கு 300 கிலோ மீட்டர். அப்படியானால், பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அதன் வழியில் மரங்கள் இருந்தாலும், குடிசைகள் இருந்தாலும், தற்காலிகக் கட்டிடங்கள் இருந்தாலும், பனிச் சறுக்குகளில் விளையாடுவோர் என்றாலும், அனைத்துமே துவசம்தான்; அழிவுதான்; நாசம்தான். எனவே, அவைபற்றி கவனமுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பு உணர்வுடனும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனை எல்லாம் இங்கே எங்கே என்கின்றீர்களா?
நீங்கள் எங்கெங்கோ செல்வீர்கள் இன்று, உலகமே சுறுங்கி விட்டதே. வேலைக்காக வடநாடு செல்வதும், வெளிநாடு செல்வம் சாதாரணமாயிற்றே! அங்கெல்லாம் பனிப்பொழிவு உண்டு. எனவே, தற்காப்புக்காகவும், பிறரைப் பாதுகாக்கவும், அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
பேரிடர்களிலிருந்து மீண்டிட..
அவசரகாலத் திட்டம்:
குடும்பத் தலைவர்களே, குடும்ப அளவிலான பேரிடர் திட்டத்தை உருவாக்கி, எதையும் எதிர்கொள்ள, உங்கள் குடும்பத்தை தயாராக்குங்கள். உங்களுக்கு கிடைத்த தகவல்கள் அனைததையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து விவாதியுங்கள். உங்கள் குடும்பத் திட்டத்தில், பின்வருவன இடம்பெற ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
1. தப்பிப்பதற்கான அகன்ற வழிகள்.
2. குடும்பத் தகவல் தொடர்பு.
3. பயன்பாட்டு பொருட்கள்.
4. காப்பீடு மற்றும் முக்கிய ஆவணங்கள்.
5. சில சிறப்புத் தேவைகள்.
6. விலங்குகள் மீதான கவனம்.
7. பாதுகாக்கும் திறமைகள்.
avalancheஉங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையில் இருந்தும், தப்பிப்பதற்குகான இரண்டு பாதைகள் தெளிவாய் இருக்கட்டும். இந்த வழிகளின் வரை படங்களை, குழந்தைகள் புரிந்து கொள்வதை உறுதிப்படுத்துங்கள். ஒவ்வொரு வரைபடத்தின் நகலையும் குழந்தைகளின் கண்ணில் படும்படி அறையில் ஒட்டி வைக்கவும்.
தீ விபத்துபோன்ற அவசர காலங்களில், சந்திப்பதற்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள். பேரிடர்கள் நிகழும்போது, உங்கள் குடும்பத்தினர் ஒரே இடத்தில் இல்லாவிட்டால், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று திட்டமிடுங்கள். மாறுபட்ட சூழ்நிலைகளில் எவ்வாறு தொடர்பு கொள்வது என்றும் சிந்தியுங்கள்.
குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், விபரங்கள் அடங்கிய தொடர்பு அட்டையை கொடுக்கவும். ஒவ்வொருவரும் எப்போதும் இதை கையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு குழந்தை பற்றிய விபரத்தையும் வைத்திருங்கள்.
தொலைதூரத்தில் உள்ள நணபர்களிடமும் உறவிரிடம் நீங்கள் அனைவரும் அவர்களைப் பற்றியும் விசாரியுங்கள். பாதுகாப்பாக இருப்பதை தெரிவியுங்கள்.
பேரிடர்களைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு கசியவும் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளதால் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அவற்றை நிறுத்தத் தெரிந்திருப்பது அவசியம்.
பேரிடர்களின் பின்னர், பொரும்பாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே குடிநீர் குழாய் இணைப்பை நிறுத்தவும் அனைவரும் தெரிந்திருப்பது அவசியம். மின்பொறி கசிவும் சமையல் எரிவாயுவை தீப்பற்ற செய்வதால் மின்சாரத்தைத் துண்டிப்பது எப்படி என்றும், அனைருக்கும் சொல்லிக் கொடுங்கள்.
அன்றாட வாழ்வில் பயன்படும் அனைத்தையும் பற்றிய விவரங்களை அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதை, உணர்ந்து செயல்படுங்கள்.
காப்பீட்டு சான்றிதழ்கள், ஒப்பந்தங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை, உங்கள் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். முக்கிய ஆவணங்களின் நகல்கலை, அவசரகால உதவிப் பொருட்களுடன் வைத்திருக்கவும்.
அவசரகால உதவிப் பொருட்களை வைப்பதற்கென்று, சில வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டவுடன், ஆளுக்கு ஒன்றென. அந்த முக்கியமான அனைத்தையும் எடுத்துச் செல்ல, அவை ஏற்றவையாயும், எளிதாயும் இருக்கிட்டும்.
அவசரகாலங்களில், பணம் மிக அவசியம். வீட்டில் எளிதில் எடுக்கும்படியான இடத்தில் ஓரளவு பணத்தை வைத்திருக்கவும். உங்கள் குடும்பத்தினரோ அல்லது நெருக்கமானவரோ யாராவது உடல் ஊனமுற்றவராக, சிறப்புக் கவனம் தேவைப்படுவராக இருந்தால், அவர்களைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தவும்.
முதலுதவிப் பொருட்களில் இருக்க வேண்டியவை:
1. பல்வேறு அளவுகளில் உள்ள ஒட்டும் பேண்டேஸ்கள் (Band Aids).
2. தூய்மைப்படுத்தப்பட்ட காயகட்டு துணி (Sterilised Bandage roll).
3. நுண்ணுயிர் அழிப்பு மற்றும் எதிர்ப்பு மருந்துகள் (Anti biotics).
4. மருத்துவத் தரத்திலான கையுறைகள் (Surgical gloves).
5. இரண்டு அங்குல அகலமடைய ஒட்டும் டேப்கள்.
6. நாக்கை சுத்தப்படுத்தும் பிளேடுகள் (Tongu cleaners).
7. குளிர் மருந்து பெட்டி (Cold Boxes).
8. சிறிய மற்றும் பெரிய கத்திரிகள் (Scissors).
9. இடுக்கிகள் (Forceps).
10. பல்வேறு அளவில் ஊக்குகள் (Hooks).
11. பஞ்சுப் பொதிகள் (Cotton balls and Cotton rols).
12. வெப்பமானி (Thermometer).
13. பெட்ரோலிய ஜெல்லி (Petroleum Jelly).
14. முகமூடி (Mask).
15. முதலுதவிக் கையேடு (First Aid guide).
16. வலி நிவாரணிகள் (Analgesics) மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்துகள் (Antidiarrho ealis) பேதி மருந்துகள் (haxatives) போன்ற பரிந்துரைக்க கூடிய மருந்துகள் அடங்கியப் பெட்டி.
மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், குறிப்பாக எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக முடிவு செய்யுங்கள். எளிதில் எடுக்கக்கூடிய, ஆனால் பாதுகாப்பான இடத்தில் அவற்றை வைக்கவும். அந்த இடத்தை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவியுங்கள். அவற்றை பராமரிக்கும் பொறுப்புகளை, பலருக்கும் பிரித்து கொடுங்கள்.
பேரிடரிலிருந்து மீளுதல்
பேரிடரிலிருந்து மீண்டு வருவது, எளிதானதுமல்ல விரை வானதுமல்ல. மீண்டு வருவதென்பது, மெதுவாகத்தான் நடக்கும்.
பேரிடர்களில், பாதுகாப்பு எப்படி முக்கிய பிரச்சினையோ அதுபோலவே மனநலமும் உடல்நலனும் உடல்நலனும் முக்கியம். உதவிகள் கிடைக்கும்போது, அவற்றை எப்படி விரைவாகவும் சிரமப்படாமலும் பெறுவது என்பதை அறிந்திருங்கள்.
நிவாரணங்களை வழங்குவோரும், எந்தவகை இழப்பும் இல்லாமல் எப்படி வழங்க வேண்டும் என்பதை அறிந்திட வேண்டும். அதற்கான எளிய முறைகளை வகுத்து, அப்படியே பின்பற்ற வேண்டும்.
அதற்கான எளிய முறைகளை வகுத்து, அப்படியே பின்பற்ற வேண்டும். அப்படியானால் அப்பாவி மக்கள் மடிய மாட்டார்கள். அதிகாரிகளும், பாவத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை.
எந்த பேரிடருக்கும் முன்னர், குடும்பத்தின் உடல் நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். போதுமான பாதுகாப்புத் தகவல்களைப் பெறுவதோடு, குடும்பத்தினரின் உடல்நலத்தையும், நல்வாழ்வையும் கவனிக்க வேண்டும்.
பேரிடருக்குப் பின்னர், வீட்டிற்குத் திரும்புவது, உடல் அளவிலும் உள்ளத்தின் நிலையிலும் சாவல்தான். எனவே, எச்சரிக்கையுடன் இருக்கவும்.
1.பேட்டரியில் இயங்கும் வானொலியை வைத்திருந்து, அவசரகால அறிவிப்புகளைக் கேளுங்கள்.
2. சேதடைந்த வீட்டை, டார்ச் லைட் உதவியால் மட்டுமே பரிசோதியுங்கள்.
3. ஆபத்தான விலங்குகளை குறிப்பாக பாம்புகளைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்.
4.குப்பைக் கூளங்களை, கம்புகளால் மட்டுமே அகற்றுங்கள்.
5.உயிருக்கு ஆபத்தான, அவசரநிலை பற்றிய தகவல்களைத்தெரிவிக்க மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.
6. சாலைக்குச் செல்லாதீர்கள். கட்டாயம் போக நேர்ந்தால், கீழே விழும் பொருட்கள், துண்டிக்கப்பட்ட மின் கம்பிகள்,
வலுவிழந்த சுவர்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்.
உங்கள் வீட்டிற்குள் நுழையும் முன்பு, கவனமாக வீட்டைச்வாசமோ அல்லது வாயு கசியும் ஒலியோ அல்லது வெடிக்கும் சத்தமோ கேட்டால், ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்.
அண்டை வீட்டிலிந்து எரிவாயு நிறுவனத்திற்கு தகவல் தெரிவியுங்கள். வீட்டினுள் எரிவாயுத் கசிவோ பிற எரியும் பொருட்களோ இல்லை என்று உறுதியான பின்னரே, வாயு விளக்குகள், மெழுகு வாதுகுதிகள் போன்றவற்றை வீட்டினுள் பயன்படுத்தலாம்.
நீங்கள் நனைந்தருக்கும்போதோ அல்லது நீரில் நின்று கொண்டோ மின் இணைப்புகளை சோதிக்காதீர்கள். முடிந்தால் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிடுங்கள். நிலைமை பாதுகாப்பற்றதாக இருந்தால், கட்டிடத்தை விட்டு வெளியேறி, உதவிக் கோருங்கள்.
ஆபத்து இல்லையென்று உறுதியாகும்வரை விளக்குகளைப் போடாதீர்கள். மின் பொறியாளரை கொண்டு வீட்டின் மின் இணைப்புகளை பரிசோதனை செய்யுங்கள்.
வீட்டில் கீரல்கள் ஏற்பட்டு, கட்டிடம் மோசமான நிலைமையில் இருந்தால், உடனடியாக வெளியேறுங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் ஈரமாக இருந்தால், வீட்டு மின் இணைபபை துண்டித்து விட்டு, அப்பொருட்களை எடுத்து காய விடுங்கள். மீண்டும் அதைப் பயன்படுத்தும் முன்பு, தேர்ந்த நிபுணர்களை கொண்டு சோதியுங்கள்.
தண்ணீரைப் பயன்படுத்தும் முன்பும், அது தரமானதா என்று சோதிக்கவும். மாசு அடைந்திருக்கலாம் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால், அத்தகைய உணவுப் பொருட்களை, உண்ணாதிர்கள், சாக்கடைநீர், பாக்டீரியா அல்லது வேதிப் பொருட்களால் வீடு மாசடைந்திருந்தால், தூய்மை செய்யவும்.
வீடு சேதமடைந்திருந்தால் உங்களது காப்பீட்டு முகவரை அழைத்து, புகைப்படம் எடுக்கச் செய்யவும். சேதம் மற்றும தூய்மைப் படுத்துவதற்கான சரியான செலவை மதிப்பிடவும், இது உதவும்.
சில வேளைகளில், பேரிடரின்போது ஏற்படுகின்ற நிதி சிக்கல், வீடு இழப்பு நெருக்டியைவிட, உணர்வுப்பூர்வமாக ஏற்படும் இழப்பு பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும். பேரிடர் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள், எதிர் கொள்ளுங்கள் , சமாளியுங்கள்…

சூறாவளி, வரட்சி பாதுகாப்பு முறைகள் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் 4‏

tamil-infographics-hurricane

பெருங்காற்று அல்லது சூறாவளி வீசும்போது, எது காப்பு ?
சூறாவளி வீசும்போது, நீங்கள் வீட்டில் இருந்தால்,
i) வீட்டின் அடித்தளத்திற்குச் (Basement) சென்று விடுங்கள்,
ii) ஜன்னலில்லாத அறைகளில் அடைக்கலம் பெறுங்கள்,
iii) சிறிய தனியறை, மறைவிடம், ஒதுக்கிடம், அல்லது கழிப்பிடம் மிகவும் பாதுகாப்பானது,
iv) படிக்கட்டுகளின் கீழும் பதுங்கிக் கொள்ளலாம்,
v) ஜன்னல்களைத் திறவாதீர்கள்;, ஜன்னல் ஓரமும் நில்லாதீர்கள்,
vi) கதவுகளருகிலும் நிற்காதீர்கள்,
vii) காற்று நுழையக் கூடிய ஒரு இடத்தையும் நாடாதீர்கள்,
viii) மிக கனமான மேஜைகளின் கீழே பதுங்கிக் கொள்ளலாம்,
ix) தற்காலிக வீடுகளில் இருந்தால், உடனே பாதுகாப்பான இடத்துக்கு வெளிளேறுங்கள்,
x) மிகவும் கனமான, உறுதியான கட்டிடங்களில் மட்டுமே அடைக்கலம்
புகுங்கள்,
xi) சூறாவளிப் புயலின் வேகம் மற்றும் திறன் அறிந்து (செய்திகளைக் கேட்டு)
அதற்கேற்ப பாதுகாப்தை; தேடிக் கொள்ளுங்கள்.
சூறாவளி ஏற்படுவற்கு முன்:
1. கட்டுப்பாட்டு அறையொன்றை அமைத்துச் செயல்பட
வேண்டும். ஆபத்து ஏற்படவிருக்கும்போது, முன்னதாகவே மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
2. ஆபத்தை அறிந்து கொண்டு, அதற்கேற்ப மக்களை வெளியேற்ற வேண்டும்.
3. பாதுகாப்பான இடத்திற்குப் போக, மக்களை முறைப்படி வழிப்படுத்த
வேண்டும்.
4. தங்கும் இடத்தையும் முதலுதவிப் பெருட்களையும் (பிளிச்சிங் பவுடர்,
உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார சாதனங்கள்) தயார்படுத்த வேண்டும்.
சூறாவளியின் போது எப்படி செயல்பட வேண்டும்:
1. இடிபாடுகளுக்கிடையே தத்தளிக்கும் மக்களைக் கண்டு பிடித்து மீட்கவேண்டும்.
2. முகாம்கள் அமைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
3. சேதமடைந்த நீர் ஆதாரங்களைச் சரி செய்ய வேண்டும்.
4. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாய் முதலுதவி வழங்க வேண்டும்.
5. தொற்று நோய்கள் வராமலும், பரவாமலும் தடை செய்ய வேண்டும்.
6. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
7. இறந்து போனவர்களின் உடல்களை எரியூட்ட வேண்டும்.
8. தகவல் தொடர்புக்கான அமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும்.
9. ஏற்பட்ட சேதங்களை முதலில் தோராயமாகக் கணக்கிட வேண்டும்(பின்னர் சரியாகக் கணக்கெடுக்க வேண்டும்).
10. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைப் பொருட்களை மீட்டுத்தர முனையவேண்டும்.
சூறாவளிக்குப் பின்:
1. அனைவருக்கும் நிவாரணப் பொருள்களை சமமாகப்பங்கிடுதல் வேண்டும் (அதில் அரசியல் கூடாது)
2. நிவாரணப் பொருட்களை வழங்கிடும் இடங்களை அதிகரித்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும். (ஒருவர் கூடமடியக் கூடாது).
3. குடிநீர்த் தொட்டிகளையும், சுகாதார வசதிகளையும், இடிந்த வீடுகளையும் திரும்பக் கட்டுதல் வேண்டும்.
4 . சேதத்தின் மதிப்பையும், சேதங்களைச் சரிசெய்யத்தேவைப்படும் பணத்தையும் சரியாகக் கணக்கிட்டு, இணக்கமான
உறவோடு மாநில அரசுகள், மைய அரசிடம் கேட்டு வாங்க வேண்டும்.
5. சேதம் அடைந்த பொது வசதிகளைச் சரிசெய்யத் தேவையான நிதியை மதிப்பிட்டு, எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடரைத் தடுக்கவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சூறாவளிக் காற்று வீசும் வேளைகளில் வெளியில் இருக்க நேர்ந்தால்,
i) நான்கு சக்கர வாகனங்களில் இருக்காதீர்கள். அவற்றைத் தொடர்ந்து ஓட்டாதீர்கள். அப்படியே நிறுத்திவிட்டு வெளியேறுகள்.
ii) பள்ளமானதோர் பகுதியைத் தேடி, அது குழியானாலும், அதிலே படுத்து மறைந்து கொள்ளுங்கள்.
iii) சூறாவளிக்காற்று, எந்தக் கடினமான பொருளையாவது, உங்கள் மீது வீசவிட்டுச் செல்லலாம். எனவே, கைகளால் தலையை மூடிக் கொள்ளுங்கள்.
iv) எந்த நேரம் என்ன நடக்கும் என்று ஒன்றும் சொல்லமுடியாது. முழுக்கவனம் மட்டும் வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தை விட்டு இறங்கி, நீங்கள் பதுங்கிக் கொள்வீர்களால், தலைக் கவசத்தை (Helmet) கழற்றாதீர்கள். அதுவே சிறந்த பாதுகாப்பு – தலைக்கு மட்டும்.
பாதுகாப்பு:
Hurricane tamilபுயல், பெருமழை மற்றும் வெள்ளத்தினின்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ள:
i) வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ii) தூரத்துப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது.
iii) தாழ்வான பகுதிகளில், மணல் வீடுகளில் குடியிருப்போர், உடனடியாக வீடுகளைக் காலி செய்திட வேண்டும்.
iv) வாகனங்களில் செல்வோர், குறிப்பாகப் பாலங்களைக் கடப்போர், பாலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது, வெள்ளத்தின் ஆபத்தை உணர்ந்து, பாதுகாப்பாக நின்றிட வேண்டும். பாதுகாப்பான வழியில் மட்டுமே செல்லலாம்.
v) நீச்சல் தெரியாதவர்கள், மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
vi) மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், ஆழம் குறைவாக இருப்பினும், அறுந்த மின் கம்பிகள் கிடக்கலாம். மின் கசிவு ஏற்படலாம். எனவே நீர்வழியைத் தவிர்க்க வேண்டும்.
vii) சிறுவர்களை வெளியில் விடக்கூடாது.
viii) தாழ்வான பகுதிகளில் குடியேறக் கூடாது.
ix) குடிநீர், உணவு ஆகியவற்றில் உடல் நலப் பாதுகாப்பு கவனம் கொள்ள வேண்டும்.
x) வடிகால் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
xi) ஆறு, ஏரிகளின் கரைகளை அவ்வப்போது அகலப்படுத்தவும், உயரப்படுத்தவும் வேண்டும். வேலைக்கு உணவுத் திட்டம், உண்மையாக இப்பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டும்.
xii) வளரும் நகரங்களின், விரிவுக்கும் மக்கள் பெருக்கத்துக்கும் ஏற்ப, பாதுகாப்புக்கான திட்டங்களைத் தொடர்;து செயல்படுத்த வேண்டும்.
xiii) நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, அதற்கு வாய்ப்பே இல்லாமல், இழப்பைத் தடுப்பது மதியுடமை ஆகும்.
மின்னல்:
மழைகாலங்களில், மின்னல்களாலும் பேராபத்துக்கள் ஏற்படுகின்றன. 95 விழுக்காடு மின்னல்கள், மேகங்களுக்குள்ளேயும், மேகங்களுக்கிடையேயும் ஏற்படுகின்றன. உலகில், சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் 100 மின்னல்கள் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
மின்னல்களால், ஆண்டுக்கு 9000 தடவைகள் நெருப்பு பற்றிக் கொள்ளகின்றது. இந்த நெருப்புக்கு இறையாவது, காடுகளும், புல்வெளிகளும் ஆகும்.
மின்னலென்றாலும் இடியென்றாலும், நமக்கு ஏற்படுவது நடுக்கந்தான் என்றாலும், ஒருவர் மின்னலால் பாதிக்கப்படும் வாய்ப்பு 3,50,000க்கு ஒன்றுதான்.
இதனை, 6லட்சத்துக்கு ஒன்றுதான் என்னும் கணிப்பும் உள்ளது. (ஆனாலும் பயம்)
மின்னலில் தாக்கத்திலிருந்து தப்பிக்க…. நீங்கள், வீட்டிலிருக்கும் போது மின்னல்கள் தோன்றினால்…
i) ஜன்னல், கதவு, இரும்புக் கம்பிகள், தொலைபேசி, ரேடியேட்டர்ஸ் ஆகியவற்றிலிருந்து விலகி நில்லுங்கள்.
ii) ரேடியே , டி.வி., கம்ப்யூட்டர், தலையில் மாட்டும் போன்கள் மற்றும் மின் கருவிகள் எவையாயினும், அவற்றின் மின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
திறந்த வெளிப்பரப்பில் அல்லது வீட்டுக்கு வெளியே இருக்க நேர்ந்தால்…
i) பள்ளமான பகுதிகளில், குனிந்தவாறு படுத்துக் கொள்ளுஙகள்.
ii) கூட்டமாக நிற்காதீர்கள்.
iii) உங்களருகே நிற்பவரிடம் இருந்து, குறைந்தது 15அடி தூரம் தள்ளி நில்லுங்கள். ஏனெனில், கூட்டத்தினிடையே மின்னல் பாயும்; ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் தாவும். மின்னலைப் பொறுத்தவரை, தனிமையே பாதுகாப்பு.
iv) தண்ணீர் மரங்கள், கம்பி வேலிகள் மற்றும் தூண்களுக்கும் விலகி நில்லுங்கள்.
v) மின்னலடிக்கும் வேளைகளில், தூண்டில் போடாதீர்கள் குடை பிடிக்காதீர்கள்; உலோகத்தாலான எதையும் வைத்திருக்காதீர்கள்.
vi) விரைவில், வீட்டுக்குள் வந்து விடுங்கள்.
vii) வீட்டிலிருப்போர், இயன்றவரை வெளியில் செல்வதைத் தவிர்க்காலம்.
நீராதார மேலாண்மைக்கு, அடிப்படையாகச் சில காரியங்களைச் செய்யலாம்.
அவை:-
i) எதிர்காலத் தலைமுறையைக் கவனத்தில் கொண்டு, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதைப் பற்றி, பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும்.
ii) தொழிற்சாலைகள் தங்க்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் பயன்படுத்த சட்டம் வகுக்க வேண்டும்.
iii) நட்சத்திர ஓட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள், குளிர்பான நிறுவனங்கள் போன்றவை, தங்கள் விருப்பத்துக்கு ஆழ்துளைக் கிணறுகளைப் போடுவது ஒரு குற்றமாக்கப் பட வேண்டும். இப்படி, நீர் வளத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து சிந்திப்பதையும் செயல்படுவதையும் அரசு தன் முதல் கடமையாகக் கொண்டல், இதற்கெல்லாம் விடிவு பிறக்கும்.
iv) வெள்ள நீரைத் தேக்கி வைக்க, பெரிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.
v) 5,000 கனமீட்டர் கொள்ளவு கொண்ட, 3,39,804 பண்ணைக் குட்டைகளை அமைத்து 600 கோடி கன அடி மழைநீரைத் தேக்க முடியும்.
vi) இவற்றால் பாசனத்தை மேம்படுத்தலாம், மீன் வளத்தை மேம்படுத்தலாம். எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம். புரதப் பஞ்சத்தையும் குறைக்கலாம் ஃ நீக்கலாம்.
vii) இக்குட்டைகளில், ஆண்டொன்றுக்கு 240 கோடி கன அடி நில நீர் வளத்தைப் பெருக்கலாம்.
viii) பண்ணைக் குட்டைகளை அமைக்கத் தேவைப்படும் 1,020 கோடி ரூபாயை, இந்தியாவின் பேரழிவு நிதியில் இருந்து பெற்றுப் பயன்படுத்தலாம்.
‘மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக நடக்கும்!’ என்று எச்சரிக்கிறார்கள் சமூகவியலாளர்கள்!’
அப்படிப்பட்ட மிக முக்கியமான முதல் தேவையான இயற்கை வளத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதனை, நாம் இழக்கவும் கூடாது; அதனால் நாம் இழப்புக்குள்ளாகவும் கூடாது. தண்ணீரை வாழவைத்தால் தான் நாம் வாழலாம். நமது வாழ்வும் வளமும் மங்காது சிறக்க வேண்டுமானால், நீர் வளம் ஓங்க வேண்டும். அதற்கான பணிகளைத் திருப்பணிகள் போலச் செய்ய வேண்டும்.
வறட்சி:
வாட்டி எடுக்கும் இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றான வறட்சியும் கொடுமையானது. குடிநீருக்குப் பஞ்சம், வேளாண்மை ஓய்தல், மேய்ச்சல் நிலங்கள் காய்தல், கால்நடைகள் உணவின்றியும் நீரின்றியும் சாதல், மக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர்ப்பஞ்சம், கிராம மக்களுக்கு வேலை இண்மை, அதனால் அவர்கள் ஊரைவிட்டு வெளியேறல், மற்றும் நோய்கள் என, வறட்சியால் ஏற்படும். தொடர் தொல்லைகளுக்கு, எல்லைகள் இருப்பதில்லை.
வறட்சி, எத்தனை வருடங்களுக்கு ஒரு தடவை?
இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சி ஏற்பட்டுள்ளது என்றவிவரம், கீழே பட்டியலிடப்பட்டுள்ளதைக் காண்க.
1. கிழக்கு ராஜஸ்தான், 2.5 ஆண்டுகளுக்கு
மேற்கு உத்திரப் பிரதேசம் , ஒருதடவை
தமிழ்நாடு, காஷ்மீர், ஆந்திரா .
2. கிழக்கு உத்திரப்பிரதேசம் 3 வருடங்களுக்
ஒரு முறை.
3. பீஹா, ஒரிஸ்ஸா, 4 வருடங்களுக்கு வட கர்நாடகா ஒருமுறை.
4. மேற்கு வங்கம், 5வருடங்களுக்கு மத்திய பிரதேசம் ஒருமுறை.
5. அஸ்ஸாம் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
குறைந்தபட்ச தேவைக்குக்கூட நீர்வளம் இல்லாமல், நிலம் காய்ந்து, பயிர் வாடி, கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கான புல்வெளியும் இல்லாமல், விவசாயிகள் நலிந்து, குடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்படடு மக்கள் அவதியுறும் நிலை வறட்சி ஆகும். நீரின்- நீர்வளத்தின் இன்றியமையாமையை, மிகத் துல்லிபமாக உணர்த்தவது வறட்சி.
வறட்சி, சில இடங்களில் தொடர்ந்து ஏற்படலாம்.
பல இடங்களுக்கு, அது ஒரு தற்காலிகப் பாதிப்பு. எனினும், அதனால் உண்டாகும் இடையூறு அதிகம்.
வழக்கமாகக் குறிப்பிட்ட பருவகாலத்தில் பெய்யும் மழை, தொடர்ந்து சில ஆண்டுகள், பருவகாலங்களில் பெய்யாமல் பொய்த்துவிட்டால், நிலத்தடி நீர்வளமும் குன்றிவிடும். இதனைத் தொடர்ந்து, நிலத்தடி நீரும் கிடைக்காது. இதுவே வறட்சியின் மிரட்சி எல்லை.
பஞ்சம். ஒரு குறிப்பிட்ட வருடத்தில், வேளாண்மை சிறப்பாக உள்ளபோது, நெற்பயிர்களும் பூத்து, பால்பிடித்து நெல்விளைய வேண்டிய வேளையில், பாய்ச்சுவதற்கு நீரில்லாமல், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும் வரண்டுபோவதுண்டு. அப்போது, விளையும் பயிர், நமது கண்முன்னே வாடி, வரண்டு, காய்ந்துபோகும். இதனால், வீணாவது எவ்வளவு விளைச்சல்? இழப்புக்குகளாவது எவ்வளது விளைச்சல்? என்னால் இயன்றது இவ்வளவுதான் என்று, தன்இயலாமையை வாய்திறந்து நிலம் சொல்வதுபோல, வயலின் நிலமது வெடித்துக் கிடக்கும். வறட்சியின் உச்சகட்டமிது, இன்னும் சில வாரங்களில் விளைந்து, விளைச்சலைத் தரவேண்டிய பயிர், விளையாமலே ஆட்டுக்கும் மாட்டுக்கும் தீனியாய்ப போகும். அதைத் தொடர்ந்து வரும் சில வாரங்களில், கால் நடைகளுக்கு அந்தத் தீனியும் இல்லாமல்போகும். இறுதியாக, ஆடுமாறுகளும் மடியும். மக்கள், தம் இருப்பிடங்களைக் காலி செய்துவிட்டு நீர்வளமுள்ள இடங்களுக்கு பிழைப்பபைத் தேடி குடும்பத்தோடு பரிதாபமாகப் செல்வர்.
சராசரி அளவுக்கும் மேல் வருடந்தோறும் மழைபெய்யும் பகுதிகளில், வறட்சி உண்டாக வழியில்லை. சராசரியளவில் மழைபெய்யும் பகுதிகளிலும், வறட்சி ஏற்படுவதில்லை. மழை நிறைந்த பகுதிகளுக்கும், வறட்சிக்கும் தொடர்பில்லை. எதிர் பார்த்த, அல்லது தேவையான, குறைந்த அளவு மழைகூட, எப்போது பொழிவதில்லையோ, அப்போது, வறட்சி என்னும் பயங்கரம், தலைவிரித்து ஆடுகிறது.
வறட்சி, தற்காலிகமானதாக இருக்கலாம். ஆனாலும், அதன் பாதிப்பு பாதிப்புதான். குடிநீருக்குக் கூட வழியில்லாமல் போய்விடுவதால், வறட்சி மிகவும் கொடுமையானது; தாங்க முடியாதது. சில ஆண்டுகளுக்கு முன்னர், சரக்கு ரெயில்களில், குடிநீர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டதெல்லாம். உச்சகட்ட வறட்சியின் வெளிபாடே!
வரும் காலங்களில், மீண்டுமெரு உலகப்போர் ஏற்படுமானால், அது குடிநீருக்காக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நமது நாட்டிலும், அண்டை மாநிலங்களுக் கிடையேயான உறவு அறுந்து கிடப்பதும், நதி நீர்ப்பங்கீட்டால் தானே! நீர் வளத்தில்,
இந்தியா இன்னும் சிறப்புக்கவனம் செலுத்தி, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவில்லை யானால், மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரியும அபாயம் ஏற்படும், இதனை, அனைவரும் எச்சரிக்கையாய்க் கொள்ள வேண்டும்.
வறட்சியும் இயற்கையின் இடர்பாடுதான். அது, மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர், பேசாமலே தரும் தண்டனை போன்றது. மழை, பெய்யாம் (பேசாமல்) தரும் தண்டனை இது, சிலர், யாகங்கள் எழுப்பி மழையைப் பெற்றுவிடலாம் எ ன எண்ணுகின்றனர். இன்னும் சிலர், இடுப்பளவு தண்ணீரில் நின்று வீணையை மீட்டினாலும் பாடினாலும், வானம் பொத்துக்கொண்டு ஊற்றிவிடும் என்று நம்புகின்றன. இன்னும் சிலர் இது ‘தெய்வகுற்றம்’ என்று, பொதுவாக ஒரு காரணத்தைப் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இவை, அவர்களால் இயன்றவை.
மழை என்றால் என்ன? மேகம் எப்படி உருவாகிறது? நீராவியாதல் என்றால் என்ன, நீர்ச்சக்கரம் என்பது எப்படி முழுமையாகிறது? இவற்றுக்கு அடிப்படையான அறிவியல் காரணங்கள் என்னென்ன,
தேவைகள் யாவை என்றறிருந்து, இயற்கையினைப் பாதுகாத்தால், மழை நம்மைக் கைவிடாது. மழையையும், மழை நீரையும் மதிக்காமல், மேலாண்மை தெரியாத (செய்யாத) முழுமையான முட்டாள்களாய், மழை நீரை இன்னும் வீணடித்தால், நிலைமை பரிதபம்தான்.
சில இழப்புகளை, அல்லது ஏமாற்றங்களை எதிர்பார்த்து, நாமும் சேமிப்பில் கவனம் கொள்ள வேண்டும். நீர்ச் சேமிப்பில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். இல்லையேல், அள்ளிப்பருகிய நீரைத் தொட்டுப்பார்க்கக்கூட நீரிருக்காது.
நிலத்தடி நீர் வளமும் மேம்பட, இயன்றவை எல்லாவற்றையும் செய்திட வேண்டும். வளவாய்ப்புகளைப் பயன்படுத்துவது அறிவு. வளவாய்ப்புகளைச் சேமிப்பது ஞானம். அந்த ஞானம் நமக்கு வேண்டும்.
காற்றும் மழையும் பொதுவானவை; பொதுச் சொத்து. அவற்றுக்கு எவரும் தனியுரிமை கொண்டாட முடியாது. கொண்டாடக் கூடாது. இந்தியா என்பது ஒருநாடு. எனவே, மாநிலங்கள் தமது எண்ணப்படித் தடுப்புச் சுவர்கள் எழுப்பி அல்லது குறுக்கே அணைகளைக் கட்டிக் கொண்டு, எனக்குப்போக மீதி உனக்கு என்ற எண்ணத்தில், செயல்படக் கூடாது. அத்தகைய நிலையை முதலில் மாற்றியாக வேண்டும்.
வலிமையான ஒரு மைய அரசு இல்லாமையால், இதுபோன்ற காரியங்களில் ‘சமநீதி’ கிடைப்பது இல்லை.
இந்தத் தொல்லை, என்று மறையும்?
பெருமழை பெய்யும் காலங்களில், அழிவுக்கு அளவில்லை, வீணாகக் கடலில் கலக்கும் நீரும் கணக்கில்லை. (கடலிலும் நீர் ஓரளவு கலக்க வேண்டும். இல்லையேல், கடல் வளவாய்ப்புகள் குறைந்து, கடல் ‘கலங்கி’விடும்) வீணாகிப் போகும் நீரைக் சேர்த்து வைக்கவும், பயன்படுத்தவும், பெருந்திட்டங்களைத் தீட்ட வேண்டும்; செயல்படுத்தவும் வேண்டும்.
நாட்டின் குறிப்பிட்ட நதிகளை இணைத்து, வெள்ளப் பெருக்குக் காலங்களில் அந்நீரைத் தேவைப்பகுதிகளுக்குத் திசை தருப்பிவிட்டால், இந்திய நாட்டின் முழு மண்ணும் நனையும். வறட்சி, தானாய் மறையும்.
ஒரு வேளாண் நாட்டுக்கு, இதைவிட முன்னுரிமையான திட்டம், வேறு ஒன்றுமே தேவையில்லை. நாட்டுப் பாதுகாப்புக்கான திட்டத்துக்கு இணையான சிறப்பு முக்கியத்துவம் தந்து, எப்படியேனும் நீர்வள ஆதாரத் திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாக இல்லை என்றாலும், பலவேறு கட்டங்களாக, ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முனைப்பான நோக்குடன், இத்திட்டம் நிறை வேற்றப்பட்டாக வேண்டும். நிறைவேற்றினால்,
i) வறட்சி வறண்டு போகும்,
ii) வேளாண்மையின் கீழ்வரும் புதிய நிலப்பரப்புகள் பெருகும்,
iii) முப்போகம் பயிர் செய்தல் சாத்தியமாகும்,
iv) மீனவளர்ப்பு, கொடி கட்டிப் பறக்கும்,
v) நிலத்தடி நீர் மட்டம், நாடு முழுவதும் சிறக்கும்.
vi) கடல்வளமும் மேம்படும்.
vii) எப்போதாவது வானம் பொய்த்தாலும், பாதிப்பு பெரிதாய் இருக்காது. எனவே, வறட்சி என்னும் பேரிடரினின்று மக்களைப் பாதுகாப்பது முக்கிய மென்பதை, மாநில அரசுகளும் மைய அரசம் உணர்ந்து. அதற்கு முன்னுரிமை தந்து செயல்பட வேண்டும்.
அசோக மன்னன், ஒரு அரசனாகச் செய்ததை ஒரு அரசு செய்யக் கூடாதா? செய்ய முடியாதா? முடியாட்சியைவிடக் குடியாட்சி குறுகியதா?
அக்காலக் குறுநில மன்னர்கள், நீர்வள வாய்ப்பைக் காத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளை, இக்கால அரசுகள் செய்திடக் கூடாதா? அதைக் கடமை என்று கொள்ள வேண்டும். வீடுகள் தோறும் மழை சேமிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ‘மிரட்டிய அரசு’ (விழிப்புணர்வு மூலம் உணர்தியிருக்க வேண்டும்) அரசாக, ஒரு முன்னுதாரணமாக, மழைநீரைச் சேமிக்கப் பொது இடங்களில் என்ன செய்தது? என்று மக்கள் எழுப்பும் நியாயமான குரலுக்கு, யார் பதிலுறைப்பது?
ஆழ்ந்து, தொலை நோக்குப் பார்வையுடன், அவசிய காரணங்களுக்கெல்லாம் உரிய முக்கியத்துவம் தந்து, வல்லுனர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டு தலையும் பெற்று செயல்பட்டால்
வறுமையும் இருக்காது – ஒரு
எருமையும் சாகாது.
இன்றுள்ள நிலையில், நிலையில், கழிவு நீரையும் சுத்திகரித்துப் பயன் படுத்த வேண்டும். நீர்மாசுபடுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான குடிநீரை, மக்களனைவருக்கும் வழங்க வேண்டும்.
ஒன்றரை ரூபாய்க்குமேல் ஆகாத ஒரு லிட்டர் குடிநீரை, மக்களனைவருக்கும் வழங்க வேண்டும். ஒன்றரை ரூபாய்க்குமேல் விற்று, பெருங்கொள்ளை அடிப்பதைத் தடுக்க வேண்டும்.
பாலின் விலைக்கு நிகராகத் தண்ணரை விற்கவிட்டால், அத்தகைய அனுமதிக்கு என்ன பெயர்?
மக்களுக்குத் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து, பொறுப்பில் உள்ளவர்கள் விலகுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? கல்வி வழங்குவதும், அதற்கான வசதிகளைப் பெருக்குவதும் முக்கியமான கடமை இல்லையா?
நீர் வளத்துக்குப் பொறுப்பேற்பதும், அதனைப் பெருக்க வேண்டியதும் மக்களாட்சியின் பொறுப்பில் இல்லையா? தான் செய்ய வேண்டிய தலையாய பணிகளை விட்டுவிட்டு, தானே சாராயக் கடைகளை – அதுவும் தண்ணீர் தானே என்று நடத்த முற்படுவதில் என்ன தர்மம் இருக்கிறது?
தண்ணீர் துலிகள்:-
• மார்ச் மாதம் 22ஆம் தேதி, உலக தண்ணீர் தினம்.
• 1993-ஆம் ஆண்டிலிருந்து தண்ணீர் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
• காற்றை, இன்று விலையில்லாமல் பெறுகிறோம்.
• தண்ணீரையோ விலைக்கு வாங்குகிறோம்.
• தண்ணீர் வியாபாரம் கொழிக்கிறது.
• கனடா நாடு, தண்ணீரை ஏற்றுமதி செய்கிறது.
• வறட்சியில் வாடும் நாடுகள், தாகத்தால் துடிக்கின்றன.
• உலகின் நல்ல தண்ணீரில், 70 விழுக்காட்டை விவசாயம் குடிக்கின்றது.
• தேவையான தண்ணீரை, ஒவ்வொருக்கும் தருவது அரசின் கடமை.
• தோண்டத் தோண்ட சுரக்கும் பொருள் தண்ணீர் இல்லை.
• உலகில், மூன்றிலொரு பங்கு மக்களுக்கு, இன்று தண்ணீர்ப் பற்றாக்குறை.
• இந்த அவலநிலை, 2025ல் மூன்றில் இரண்டு பேருக்கு என்று மாறும்.
• மனிதனின் தினசரி சராசரி நீர்த்தேவையை (குறைந்தது 50 லிட்டர்) நிறைவு செய்ய வேண்டும்.
• உலகம் முழுவதும் இத்தேவையை நிறைவு செய்ய, இன்றைய நிலையில், ரூ4 லட்சம் கோடி ரூபாய் தேவை.
• குடிநீரில்லாமல் துன்பப்படுவோர், 100 கோடி மக்கள்.
• பாதுகாப்பற்ற தண்ணீரால் பரவும் நோய்களால், ஆண்டுக்கு 50 இலட்சம் மக்கள் பலியாகின்றன.
• கடந்த 50 ஆண்டு காலப் போர்களுக்குக் காரணம், என்ணெய் வளம்.
• இனிவரும் போர்களுக்கு, தண்ணீரே காரணமாகும்.
• எண்ணெயின் மதிப்பைவிட, தண்ணீரின் மதிப்பு உயரும்.
• உலக அளவில் தண்ணீரின் இன்றைய நிலையை அறிய, 1500 நிபுணர்கள் கொண்ட குழுவை, ஐக்கிய நாட்டு சபை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர், கோத்திலஃப் ஹெம்பெல் (ஜெர்மனியின் கீல் பல்கலைக் கழக நிபுணர்), அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
• ‘ எண்ணெய் வளம் தீர்ந்து விட்டால் மாற்று வழி காணலாம். அவர்.
தண்ணீர் இல்லையென்றால் கண்ணீர்தான்.
ஆப்பிரிக்க நாடுகள், தண்ணீர் இல்லாமல், வறட்சியில் இன்று தத்தளிக்கின்றன. கோடி மக்கள் மாண்டு விடுவரோ என்ற அச்சம், பலரை எச்சிலையும் விழுங்க முடியாமல் செய்து கொண்டிருக்கிறது.
வறட்சியை விரட்ட நீராதாரங்களைப் பேணுங்கள்.
கடும் வெப்பம்
கடும் வெயில் – மரணங்கள்:-
கடுமையான வெயிலால், வெப்பம் அதிகரிக்கின்றது. கோடை காலத்தில் இந்தக் கொடுமை நிகழ்கிறது. குறிப்பாக, ஒரிஸ்ஸா, ஆந்திரா, ராஜஸ்தன், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில், வெயில் கொடுமையாய்ச் சுடுகிறது; மக்களைச் சாடுகிறது. இம்மாவட்டங்களில், அதிகபட்சமாக, 45டிகிரி செ.கி. முதல் (மத்திய பிரதேசம்) 49.3டிகிரி செ.கி.வரை (ராஜஸ்தானில்) வெப்பநிலை இருந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், கடுமையான வெப்பம், 1998ஆம் ஆண்டு இந்தியாவில் நிலவியது. இந்த வெப்பத்தைத் தாங்கமுடியாமல், ஜுன் மாதம் முதல் வாரத்தில் மடிந்து போன மக்கள், குறைந்தது 2000 என்பது, மனதைக் கனக்கச் செய்கிறது. இக்காலத்தில், ஒரிஸ்ஸாவில் மட்டும் மாண்டவர், 954 பேர், அந்திராவில் 441பேரும். ராஜஸ்தானில் 220பேரும், உயிரிழந்தனர்.
கடும் வெப்பத்திற்கு முன்பு:-
1. வெப்பத் தடுப்புக் கதவுகளை அமைக்கலாம் அறையில் வெப்பநிலை, குளிர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.
2. காலையில் அல்லது மாலையில், சுரிய வெளிச்சம் நேரடியாகப்படுவதைக் தடுக்க, ஜன்னல்களிலும், வாசலிலும் திரைச் சீலைகளை தொங்கவிடலாம்.
3. வீட்டைச் சுற்றி, நிழல்தரும் மரங்களை வளர்க்கலாம்.
4. வெளியில், வெப்பத்தாக்குதல் ஏற்படும் நிலையிருந்தால், வீட்டினுள்ளேயே இருங்கள். வெயில் தாக்காமலும், தாக்த்துக்கும், உள்ளாகாமல், கவனித்துக்கொள்ளுங்கள்.
5. வெளியே வேலை செய்யும் பொழுது, அதிகம் தண்ணீர் குடியுங்கள், அவ்வப்போது நிழலில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
6. வழக்கமான சத்தான, எளிமையான, உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.
7. மது வகைகளை, மெதுவாக ஒதுக்கித் தள்ளுஙகள்.
8. மிகத் தளர்வான. மெல்லிய, இள வண்ணங்களாலான, உடைகளை முழு உடலையும் மறைக்கும்படி அணியுங்கள். வெள்ளாடைகளுக்கு அதிக அங்கீகாரம் தாருங்கள்.
9. அகன்ற தொப்பியணிந்து, தலைமையும், முகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
10. குழந்தைகளை வாகனங்களில் இருக்க விட்டு, ஒருபோதும் கதவையும் மூடிவிட்டுச் செல்லாதீர்கள். காற்றோட்டம் ஃ வேண்டுமென்பதை மறவாதீர்
முதலுதவி:-
1. அதிக வெப்பத்தால், உடல் தோல் சிவக்கும். சிவந்து கொப்பளிக்கும்;; காய்ச்சல் உண்டாகும்;; தலைவலியும் ஏற்படும். இதற்கு, உடலின் எண்ணெய் பிசுபிசுப்புகள் நீங்கிட நல்ல சோப்பு போட்டு, ஒரு முறைக்கு இருமுறை குளித்து, உடலை குளிர்ச்சி அடையச் செய்யலாம்.
2. அதிக வியர்வை மற்றும் தலைவலியால் பாதிக்கபடுவோரை, பாதிக்கப்பட்ட தசைகளை மெல்ல நீவி விடலாம்.
3. கால்மணி நேரத்துக்கு ஒருமுறை, பருகிட அரை குவளை குளிர்ந்த நீர் கொடுக்கலாம்.
4. உடல் வெப்பம் அதிகரித்து, நாடித்துடிப் வீழ்ந்தாலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்திருந்தாலும், பாதிக்கப் பட்டவரைக் குளிர்ச்சியான இடத்திற்குக் கொண்டு சென்று, உடைகளைக் களைந்துவிட்டு ஈரத்துணிகளால் உடலைத் துடைத்து விட்டு, விரைவாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
தீ விபத்து:
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் அனைவரும் தீ விபத்துப் பாதுகாப்பு பற்றி அறிந்திருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவும் வேண்டும். அதற்கு,
1. புகைப் பிடிப்பதைத் தடை செய்யலாம்.
2. தீ விபத்து ஒத்திகை தரலாம். ஊழியர்களுக்கு, அதற்கான பயிற்சி வேண்டும். தீயணைப்பு வசதிகளை சரியாகவும், நிறைவாகவும் செய்து வைத்திருக்க வேண்டும்.
3. உயிர் பாதுகாப்பு முறைகளை முழுமையாய் நடைமுறைப் படுத்த வேண்டும்.
தீயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:-
1. சமைக்கும்போது மிகத் தளர்வான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.
2. அடுப்பு எரியும்போது, அடுப்பையும், நெருப்பையும் எப்போதும் கவனித்தவாறு இருங்கள்.
3. திரிவிளக்குகள் அல்லது மெழுகுவர்த்திக்கு பதிலாக, டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்துங்கள்.
4. எரியும் விளக்குகளை, கவனமாகக் கண்காணியுங்கள்.
5. தீப்பெட்டிகளையும், லைட்டர்களையும், சிறார்களுக்கு எட்டாதபடி வைக்கவும்.
6. பட்டாசுகளை கவனமின்றிப் பயன்படுத்தாதீர்கள்.
7. மின்சாதனங்களில் அதிக மின் பளுவை ஏற்றாதீர்கள்.
8. மின் வயர்களை அவற்றின் ஆயட்காலம் வரை மட்டுமே பயன்படுத்துங்கள்.
9. மின் வயர்களை அவ்வப்போது சோதித்துப் பார்த்து, சேதமடைந்தவற்றை உடனே மாற்றி விடுங்கள்.
கல்வி நிலையங்களிலும்,அலுவலகங்களிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள்:-
1. அனைத்து தீ விபத்துகளைக் குறித்தும் நிர்வாகத்திற்கும் தீயணைப்புத் துறைக்கும் தெரிவியுங்கள்.
2. கட்டிடத்தில் எங்கெங்கு தீயணைப்பு கருவிகள் உள்ளன என்பதை, தெரிந்து வைத்திருங்கள். அவற்றைப் பயன் படுத்தவும் அறிந்து கொள்ளுங்கள். இக்காரியத்தில் மாணவர்கள் அனைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும்.
3. சமையல் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக வைக்கவும்.
4. சோதனைக் கூடங்களிலும், பிற இடங்களிலும் ஆக்ஸிஜன் மற்றும் எரியக்கூடிய பொருட்களை கவனமாக கையாளவும்.
5. புத்தகங்கள், தாள்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றை சூடாகும் பொருட்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.
6. பொருட்களை சேர்த்து வைக்கும் அறைகளில், மரத்தூள்கள். மரச்சீவல்கள், எண்ணெய் பொருட்கள் போன்ற ஆபத்தான பொருட்கள் இடம்பெற வேண்டாம்.
7. வெளியேறும் வாயில்களில், ‘வெளியே’ எனும் விளக்கு பலகைகளும் அவசரக் கால விளக்குகளும் வேலை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

எரிமலை, வெப்பம் பாதுகாப்பு நடவடிக்கைகள் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும்‏ 3

வெப்பமும் கடல் அரிப்பும்

பூமி வெப்பமடைவதால், கடல் மட்ட உயர்வுகளால் சில கடலோரப் பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விடும் (மூழ்கும்) ஆபத்து இருக்கிறது. 8 நாடுகள் சார்ந்த ஆர்க்டிக் காலநிலை தாக்க மதிப்பீடு, என்ற அமைப்பின் தலைவரான ராபர்ட் கோரல், 2100 ஆம் ஆண்டில் உலகின் கடற்பரப்பு ஒரு மீட்டர் உயரும் என்றும், இதனால் வங்காள தேசம் முதல் புளோரிடா வரையிலான கடலோரப் பகுதிகளின் வீடுகள், கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனால்; வங்காள தேசம் முதல் புளோரிடா வரையிலான கடலோரப் பகுதிகளின் வீடுகள், கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை செய்துள்ளது. புவி சூடாவதின் விளைவாக, அலாஸ்கா முதல் நார்வே வரையிலான கிரீன்லேண்ட் பனிப்பாளங்களும், ஆர்டிக் பனிப்பாறைகளும் முன்னர் கணக்கிடப்பட்டதை விட, விரைவிலேயே உருகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 20 முதல் 90 செ.மீ வரை உயரும், வங்காள தேசத்தில், சுமார் 17 மில்லியன் மக்கள் கடல் மட்டத்திலிருந்து வெறும் 1 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் வாழுகிறார்கள். இந்நிலையில், இவர்களின் நிலைமை என்னாகும்? எதிர்காலப் பேரிடர்கள் மிக பயங்கரமாய் உள்ளன. நாமும் நமது பாதுகாப்பைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்.
எரிமலை
எரிமலைகளின் நிலைகள்:
எரிமலைகளை, அவற்றின் செயல்படும் நிலையைப் பொறுத்து, கீழ்கண்ட மூன்று வகைகளாய் பிரிக்கலாம். ஆவை:
1. உறங்கு நிலைஎரிமலைகள்(Dormant volcano).
2. விழித்திருக்கும் செயல்படும் எரிமலைகள் (Active volcano).
3. செயலிழந்த அழிந்துபோன எரிமலைகள் (Extinct volcano).
1.உறங்கும் நிலையிலுள்ள எரிமலைகள், கொஞ்ச காலமாக, நெருப்பைக் கக்காமல் இருக்கும். பகலில் செயல்படும் மனிதன், இரவில் உறங்குவது போல, குறிப்பிட்ட காலம் வரை நெருப்பைக்க்காமல், வெடிக்காமல் இருக்கும். இத்தகைய எரிமலைகள், எதிர்பாராமல், எந்த நேரமும் வெடிக்கும். கோபக்காரன், கோபத்தை அடக்கி வைத்திருப்பது போன்ற நிலையிது.
2.செயல்படும் எரிமலைகள் என்பவை, அவ்வப்போது, குறிப்பிட்ட காலகட்டங்களில் என, லாவாவைக் கக்கிக் கொண்டிருப்பவை. தமது அக்கினிக் கோபத்தைக் காட்டி கொண்டிருப்பவை.
3.செயலிழந்த எரிமலைகள், ஆடி அடங்கியவை. இவை, மிகவும் முதுமையானவை எனலாம். இவை அடையாளத்துக்கு இருக்கும். இவற்றில் துடிப்பிருக்காது; இவற்றிலிருந்து கோபம் கொப்பளிக்காது. இந்த எரிமலைகள், அமைதியாகிப் போனவை; இயலாதவை. இவற்றை, ‘சமாதியாகிப் போனவை’ என்றும் சொல்லலாம். ஆனால், எத்தனை பேரை சமாதியாக்கின!
எரிமலை வெடித்தல்:
volcanic-tamilநமது காலடியின் கீழ், 30-200 கிலோ மீட்டர் ஆழத்தில், பாறைக் குழம்பு, நெருப்புப் பிழம்புபோல காற்றுகளுடன் கலந்த கலவையாக, சாதுவின் கோபம்போல அடைபட்டுக்கிடக்கின்றது. அத்தனை சாதுக்களும் முழுச் சாதுக்களாகவே இருப்பதில்லை. மிரண்டு எழும் சாதுக்களும் உண்டுதானே! அதுபோல், அடக்க முடியாத எரிமலைகளும் உண்டு. உலகின் மொத்த எரிமலைகளுள், ஏழத்தாழ 10 விழுக்காடு எரிமலைகள், தம்மை அடக்க முடிடியாதவை.
எரிமலை வெடிப்பின்போது, வேகமுடன் வெளிப்படும் லாவாவாலும், விண்ணுயரச் சென்று பின்னர் கீழ்வரும் புகையாலும், நச்சாலும், நச்சுக் காற்றாலும், உயிரினங்கள் அழிவுக்குள்ளாகும். இவ்வகையில் பல கிராமங்கள் காணாமற் போயிருக்கின்றன.
வெகு தொலைவிலிருந்து எரிமலை வெடிப்பதைப் பார்ப்பது, வாணவேடிக்கை பார்ப்பதைப் போன்றிருக்கலாம். ஆனால், அப்பகுதியின் அருகில் உள்ளோருக்கு அது நரகம். மிக அருகில் உள்ளவர்களுக்கோ அதுவே எமன். நெருப்புத் துண்டுகளும், நச்சுப்புகையும், அடர்ந்து வரும் படர்ந்து சாம்பலும், எண்ணற்ற எமன்களாக, எமன் கூட்டங்களாக ஒரே நேரத்தில் புறப்பட்டு வந்து அப்பகுதியின் மக்களின் உயிரை வங்கிவிடும்.
இதை எல்லாம் பார்க்கும்போது, நரகம் என்பது, எங்கோ இல்லை. இங்குதான் இருக்கின்றது. இதனால் பாதிப்புக்குள்ளானோரை நினைத்தால், நெஞ்சு நடுங்குகின்றது. பாவம்! மக்களுக்கும் இத்தனைச் சோதனைகளா?
எரிமலை மூலம் வெளிப்படும் குழம்புப் படிவுகளை எடுத்து ஆராய்ந்தபோது, அவற்றில் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவை இருந்தது அறியப்பட்டுள்ளது.
இது, என்ன உலமகடா? இங்கே இத்தனை இடர்களா? அதுவும் பேரிடர்களாகவா? இப்படியொரு மரணத்தை மக்கள் சந்திக்க வேண்டுமா? இவர்களின் மரணமத்துக்கு யார் காரணம்? தன் பிறப்புக்குத் தான் காரணமில்லாமல் இருக்கும் மக்கள், தம் மரணத்துக்கும் தாம் காரணமில்லாமலே மடிந்துபோவதை என்ன சொல்வது? இத்தகைய தீர்ப்பை, இயற்கை எழுதுவது ஏன்? அதன்மீது மக்களுக்கு பயம் இருக்க வேண்டும் என்றா? தவறாகத் தீர்ப்பு எழுதும் பேனா முனைகள் ஓடிந்தாலென்ன? இடர்களுக்குத் தொடர் இடர்கள் வந்தாலென்ன? மக்களின் அமைதிக்கு, வழி பிறந்தாலென்ன? இயற்கையே நீயும் செயற்கை ஆகாதே!
எரிமலையும் சுனாமியும்:
volcano-tamilஎரிமலைக்கு எல்லை கிடையாதா? கடலிலும் குமுறுகிறது; கண்டங்களிலும் கண்டபடி குமுறுகிறதே! நிலப்பரப்பில் எரிமலை வெடித்தாலும், இழப்பு அதுவே கடலில் என்றாலும் இழப்பை ஏற்படுத்துகின்றது. அந்த இழப்பு மட்டும் குறைவா? அது சுனாமியை உண்டாக்கி விடுவதால், கடலோரப் பகுதிகளில் ஏற்படும் இழப்பு, கணக்கற்றதாகிவிடுகிறது.
பசுபிக் பிளேட்டும் இந்தோ ஆஸ்திரேலியன் பிளேட்டும் சேரும் ஒரு பகுதியான கடலடியில், கரகாடோ (Krakatau) எரிமலை வெடித்தது. ‘வெடிக்கின்றேன் பார்’ என்று சொல்வதுபோல, அப்போது வெளிப்பட்ட அதன் சத்தம், 3540 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ஆஸ்திரேலியாவுக்குக் கேட்டதாம். அப்போது, கடலின் மேல்மட்டத்தின் மேல், பெருங்கருஞ் சுவர்போல, இமய மலையின் உயரத்தைப்போல, மூன்று மடங்கு உயரத்தில் புகை மலை வெளிப்பட்டது. அந்தக் கரும்புகையால், அண்மைப் பகுதிகளில் பகலே இரவாய் மாறிற்று. எரிமலையிடம், சூரியன் தோற்றுப் போயிற்று.
இந்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலையின் உயரம், ஜாவா, சுமத்திரா பகுதிக் கடற்கரையில் 12 மாடிகளின் உயரமாய் இருந்தது. இந்த அலையினால், துறைமுகங்களில் ஏறத்தாழ 5000 படகுகள் அமிழ்ந்து போயின். பேரான் (Baron) என்னும் கப்பல், கரைக்கு அப்பால், 2 மைல் தொலைவில் ஒரு வனப்பகுதியில் தூக்கி வீசப்பட்டது. பாதிப்புக்குள்ளான கடலோரப் பகுதிகளில், 36,000 மக்கள் மடிந்தனர். மொத்தம், 160 கடலோரக் கிராமங்கள் அழிந்து போயின.
எரிமலை ஏற்படுவதை முன்னறிய முடியுமா?
நில நடுக்கத்தைத்தான் ஏற்படுவதை முன்னறிய முடியாது. ஆனால், எரிமலை வெடிப்பதை முன்னறிய முடியும். எரிமலை ஏற்படப்போகும் பகுதியில்,
* நிலம், வீங்கியதுபோலத் தோன்றும்.
* நிலத்திலிருந்து, புகையுடன் காற்று வெளிப்படும்.
* சிறிய அளவில், நிலம் நடுங்கும்.
* நில வெப்பம் உயரும்
* புவி ஈர்ப்பு விசையில் மாற்றம் தோன்றும்.
* காந்த சக்திப் பரப்பில் மாற்றம் தெரியும்.
* வெளிப்படும் புகையில், சல்பரும் கார்பன் டையாக்சைடும் அதிகமிருக்கும்.
* எரிமலையின் தாக்கம் ஏற்படப்போவதை, தானியிங்கி முறையில் செயல்படும் உபகரணங்கள் மூலமாயும் அறியலாம். எனவே, எரிமலையை எதிர்கொள்ள முடியும்.
எரிமலையிலிருந்து தப்பிக்க:
எரிமலை குமுறப் போவதை அறிந்ததும், அல்லது அதற்கான அறிவிப்பைக் கேட்டதும், பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிட வேண்டும்.
எரிமலையின் கடுமையான வெப்பதாலும், நெருப்பாலும், சிதறும் நெருப்புத் துண்டுகளாலும், புகையாலும் பயங்கர ஆபத்து உண்டென்பதால், வெளியில் எங்கும் அலைந்து திரியாமல், தொலைவில் உள்ள வீடுகளினுள், ஜன்னல்களையும் மூடி இருப்பது பாதுகாப்பு.
எரிமலை வெடிப்பின்போது, மழையும் பெய்யுமானால், அமிலத் தாக்குதலாலும், சிமென்ட்பால் போன்ற எரிமலைச் சாம்பலின் தாக்குதலாலும் ஆபத்து உண்டாவதால், வெளியில் செல்லக் கூடாது.

சுனாமியும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பும் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும்‏ 2

சுனாமி

சுனாமி என்ற வார்த்தை – பொருள்:
tsunami-tamilசுனாமி என்ற வார்த்தையை, அறிவியல்படி சற்று அலசிப் பார்த்தால், அது ஜப்பானிய வார்த்தை என்பது தெளிவாகும். ‘ட்சு’ (Tsu) என்ற சிறு வார்த்தையும், ‘னாமி’ (nami) என்ற சிறு வார்த்தையும் சேர்ந்தது சுனாமி (Tsunami) ‘ட்சு’ என்ற என்பதற்குத் துறைமுகம் என்றும், ‘னாமி’ என்பதற்கு அலை என்றும் ஜப்பானிய மொழியில் பொருள். மொத்தத்தில், சுனாமி (Tsunami) என்பது துறைமுக அலை. ஜப்பானியத் துறைமுகங்களை, இப்பேரலைகள் பெரிதும் தாக்கி வந்தன.
பௌர்ணமி பவர்ஃபுல் தினம்தான்:
பௌர்ணமி (Full Moon), அமாவாசை (New Moon) ஆகிய நாட்களில் பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை, ஒரே நேர் கோட்டில் வருகின்றன.அப்போது பூமியின் புவிஈர்ப்பு சக்திகளால் ஏற்படும் மாறுபாடுகளால், கடல் அலைகளில் கொந்தளிப்பு ஏற்படும். பூமியும், சூரியனும், சந்தரனும் நேர்கோட்டில் வரும் நாட்களில், கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாகவும், உயரமாகவும் இருக்கும். இக்காலங்களில் கடல்நீர், கடற்கரையின் அலைபரவும் பகுதிகளில் அதிகமாய் பரவும். ஓதம் (Tide) எனப்படும் கடல்நீர் உயர்வு (High Tide), இக்காலங்களில் அதிகமிருக்கும். உப்பாறுகளில் கடல் நீர் அதிகம் ஏறிப் பாய்வதும், மூடிக்கிடக்கும் முகத்துவாரங்களை முட்டித் திறப்பதும் இக்காலங்களில்தான்.
இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்களும், இக்காலங்களில்தான் ஏற்பட்டன என்பன கவனிக்கத்தக்கவை. 20.8.1988இல் பீஹாரில் அமாவாசைக்கு முதல் நாள்தான் பூகம்பம் ஏற்பட்டது. 20.10.1991இல் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட பூகம்பமும், 22.5.1997இல் சுபல்பூரில் ஏற்பட்ட பூகம்பமும், பௌர்ணமி தினத்தில்தான் ஏற்ட்டுள்ளன. தற்போது, கடலில் பூகம்பத்தை உண்டாக்கி, அதனால் சுனாமி வந்த 26.12.2004 அன்றும் பௌர்ணமி தினமே. பௌர்ணமி, ‘பவர்ஃபுல்’ (Powerful) தினம்தான் என்பதை, நிகழ்வுகள் நிலைநாட்டுகின்றன.
சுனாமி உண்டாகக் காரணங்கள்:
tsunfcts-tamilபூகம்பம், கடலடி நிலச்சரிவு, எரிமலை, விண்ணிலிருந்து கடலில் விழும் ராட்சச விண்கற்கள் ஆகியவை சுனாமி உண்டாகக் காரணங்கள்.
எத்தனை காலமாய் சுனாமி:
சுனாமியின் அழிவு வேலை, கொஞ்ச காலமாகவா நடக்கின்றது? அதன் 6,600 ஆண்டுகால அழிவு வேலையை என்ன சொல்வது? சரித்திரம் என்பது, எதற்கென்று இல்லையா? இந்தத் தரித்திரத்துக்குமா? அதுவும், 100-200 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நிகழ்ச்சி நடத்துமாம். அதை, நமது நாட்டிலும் அல்லவோ நடத்தியிருக்கிறது.
இதற்கு ஒரு கூட்டணி வேறு. யாரோடு? பூகம்பத்தோடு. இது என்ன முற்போக்குக் கூட்டணியா? அல்லது சார்பற்ற கூட்டணியா? அப்படி இல்லையோ! பூகம்பம் 7.5 ரிக்டருக்கு மேல் வாக்கப் பெற்றால், மீதியைச் சுனாமி பார்த்துக்கொள்ளுமாம். முதல்வர் பதவியை, அது எடுத்துக்கொள்ளுமாம். எடுத்துத்தானே கொன்று குவித்து விட்டது.
உலகின் முக்கிய சுனாமிகளும் ஏற்பட்ட உயிரிழப்புகளும்:
சென்ற நூற்றாண்டில், ஏறத்தாழ 800 சுனாமிகள் உலகில் ஏற்பட்டிருந்தாலும், கடந்த 200 ஆண்டுகளில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவையாக, 17 சுனாமிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே பட்டியலில் காண்க.
உயிரிழந்தோர்கள்:
1. 1707இல் ஜப்பான் 30,000 மக்கள்.
2. 1758இல் ஸ்பெயின் 60,000 மக்கள்.
3. 1883இல் இந்தோனேசியா 33,000 மக்கள்.
4. 1960இல் சிலி 2,000 மக்கள்.
” ஹாவாய் 61 மக்கள்.
” ஜப்பான் 122 மக்கள்.
5. 1979இல் கலிபோர்னியா அலாஸ்கா 10 மக்கள்.
6. 1979இல் மத்திய தரைக்கடல் (ப்ரெஞ்ச், நிபேரியா).
7. 1986இல் ஜப்பானில் 27,000 மக்கள்.
8. 2004ல் இந்தோனேசியா இலங்கை, இந்தியாஉட்பட 13 நாடுகள் 2,00,000 மக்கள்.
1946இல் அலாஸ்காவில் ஏற்பட்ட சுனாமி அலையின் உயரம், 500 மீட்டர் (½ கி.மீ.) என்பது பயங்கரமானது. அதுதான் அலாஸ்காவையே அமுக்கிப் போட்டது.
சுனாமியும் – பாதுகாப்பும்:
1. சுனாமிப் பேரலை வருவதை, 2-3மணி நேரங்களுக்கு முன்னரே தெரிவக்க முடியும் என்பதால், மக்கள் தம்மைக் காத்துக்கொள்ள முடியும்.
2. பொதுவாக, சுனாமி அலை வருவதற்கு முன்பாக, கடல் உள்வாங்கும். அப்போது, ஆச்சரியப்பட்டுக் கடலடியில் தெரியும் மணலையும், பவளப்பாறைகளையும், துள்ளும் மீன்களையும் காணும் ஆசையுடன், உள்ளே சென்று விடாதீர்கள். கடல் உள்வாங்குவதைத் தொடர்ந்து தான் சுனாமியின் ஆவேச அலை வரும்.
3. சுனாமிப் பேரலை வருவதன் அறிவிப்பைப் பெற்றதும், மிக மிக முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, கடலைவிட்டுத் தூரமான, உயரமான இடங்களுக்கு உடனடியாகச் சென்றுவிட வேண்டும்.
4. கால அவகாசம் குறைவென்பதால், நிலமைகளுக்கேற்ப, அண்மையிலுள்ள பலமான, உயரமான கட்டிடங்களில் ஏறி அடைக்கலம் பெறலாம்.
5. சுனாமி வரும்வேளையில், நீங்கள் கடற்கரையில் இருந்தால், உடனடியாகக் கடற்கரையை விட்டு ஓடி விடுங்கள். வேகமான நடை எல்லாம் உதவாது. ஓட்டமும் கூட அப்படித்தான், வாகனம் இருந்தால், அதில் ஏறி நகரின, – நாட்டின் உட்பகுதிக்குச் சென்று விடுங்கள்.
6. வருவது சுனாமி என்றாலும், ஒருபோதும் பயப்படாதிருங்கள். நடுங்கிவிடாதீர்கள். பயமும் பதட்டமும், சரியாகச் செயல்பட விடாது. பயம் இருந்தால் செயல்பட முடியாது. எனவே, அச்சம் தவிர்!
7. குழந்தைகளையும், மகளிரையும், பெரியோரையும் முதலில் பாதுகாப்பதற்கு, சரியான நடவடிக்கையை உடனடியாய் மேற்கொள்ளுங்கள்.
8. தப்பிச்செல்கையில், சாலை வழிதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இப்போது இல்லை. எந்தக் குறுக்கு வழியானாலும், பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து, நேரத்தின் அருமையையும் நினைத்து, பாதுகாப்பான இடத்தை அடைந்துவிடுங்கள்.
9. உங்கள் உடமைகளை, வீட்டுப் பொருட்களைப் பற்றிக் கவலைப்படாதிருங்கள். உங்கள் உயிர் பெரிதென்பதை மறவாமல், உடனடியாகத் தப்பிச் செல்ல வழி பாருங்கள். பொருளை, என்றைக்கும் சோத்து கொள்ளலாம். உயிர் …!
10. தப்பித்து ஓடும்போது, சுனாமி நெருங்கிவிட்டால், அருகிலிருக்கும் மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள். மரத்தில் ஏறிவிடுங்கள். சுனாமியின் கைகளுக்கு எட்டாத தூரத்துக்கும் உயரத்துக்கும் சென்றுவிட்டால், சுனாமியால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
11. கடலோரக் குடியிருப்புக்கான வீடுகளை, பாதுகாப்பான இடங்களிலேயே (தூரமான இடத்திலும், உயரமான இடத்திலும்) அமையுங்கள்.
12. சுனாமி அலை, ஒரு அலை அல்ல. சுனாமி அலைகள் தொடர் அலைகளாய் வரும். அலைகள் தொடர்ந்து வரலாம். எனவே, பாதுகாப்பான பகுதியிலேயே இருங்கள்.
13. கடற்கரை ஓரங்களில், சுனாமி அலைகளைக் கட்டுப்படுத்தும் சதுப்பு நிலக்காடுகளை, இயற்கை அரண்களாகக் கடலோரமெங்கும் அமைத்திட முற்படுகள். (இப்பணியை. கடலோர மக்களின் ஈடுபாட்டுடன், பாதுகாப்புத் திட்டங்களாய் அரசினர் மிக முக்கியத்துவம் தந்து செயல்படுத்த வேண்டும்).
14. சாத்தியமான பகுதிகளில், மணல் குன்றுகளைத் (Sand Dunes) தொடராய் அமைக்க வேண்டும்.
15. மணற்பாங்கான பகுதிகளில், சவுக்குமரக் காடுகளையும், மணற்குன்றுகளைக் காக்கும்படி வளர்க்கலாம்.
16. மக்கள் குடியிருப்பு அதிகமாகிவிட்ட பகுதிகளில், அலைகளைக் கட்டுப்படுத்த, பெருங்கற்களைக் குவித்தும், அரண்களை அமைத்தும் பாதுகாப்பை வலுப்படுத்தலாம்.