மத்திய திட்டங்கள் | |
தமிழ்நாடு:
I. நிறுவனங்களின் கடன் வசதிகள்:
தரமான விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவி செய்தல்
நலத் திட்டக் கூறுகள் மற்றும் அதன் நன்மைகள் | நன்மையை பயன்படுத்திக் கொள்வதற்கான தகுதி மற்றும் வரையறைகள் | தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் |
விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவும், தங்களால் எடுக்கப்பட்ட சிறந்த முயற்சிகளை நிலை நிறுத்துவதற்காகவும், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து விதைகளுக்கும் செயல் ஊக்கம் அளிக்கப்படுகின்றன. | ஒப்பந்த முறையில், விதைகளை உற்பத்தி செய்து, வேளாண்மைத் துறைக்கு வழங்கும் அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தின் கீழ் தங்களின் விதைப் பண்ணைகளை பதிவு செய்து கொள்ள தகுதியானவர்கள். | கிராம நிலை- உதவி வேளாண்மை அலுவலர் |
நெல்: சான்று விதைகளை உற்பத்தி செய்வதற்கு, ஒரு கிலோ விதைக்கு ரூ.2/- மதிப்பு அளிக்கப்படுகிறது. | பண்ணை மகளிர்குழுக்கள், மற்றும் ஆர்வமான விவசாயிகள் பிரிவுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. | உதவிவிதை அலுவலர்/துணை வேளாண் அலுவலர்/ வட்டார நிலை வேளாண் அலுவலர். |
| வேளாண்மை விரிவாக்க மையங்கள், மூலமாக குறிப்பிட்ட தேவையான விதைப் பொருட்களை பணம் செலுத்திப் பெறுவதற்கு வேளாண்மை துறை வழங்குகின்றது. | வட்டநிலை வேளாண்மைஉதவிஇயக்குநர். |
| வயல்நிலை செயலிகள்/விதைச் சான்று அலுவலர்களால் வழங்கப்பட்ட தரம் பாதுகாத்தல் பற்றிய வழிகாட்டுச் செய்திகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். | மாவட்டநிலை வேளாண்மை இணை இயக்குநர். |
|
|
|
|
II. பண்ணை இயந்திரமயமாக்குதல் திட்டம்:
1. வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம்:
திட்டத்தின் பெயர்: | வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் |
திட்டம் செயல்படும் இடம்: | அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர) |
வேலைகளின் விவரம்: | வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர்கள், தானியங்கி நெல் நடும் இயந்திரங்கள், தானியங்கி நெல் அறுவடை இயந்திரங்கள், சுழல் கலப்பை, கொத்துக்கலப்பை உளிக்கலப்பை, சட்டிக்கலப்பை ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. |
அளிக்கும் நன்மைகள்:
(மானியம்) | இயந்திரம்/கருவிகளின் மொத்த விலையில் 25 சதவிகிதம்வழங்குதல்/ஒவ்வொரு இயந்திரம்/கருவிகளுக்கான, இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டஉச்சவரம்புவிலையில் 25 சதம் வழங்குதல். |
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்: | வருவாய்ப் பிரிவிலுள்ளஉதவி வேளாண்மை செயற்பொறியாளர், மாவட்டத்திலுள்ள செயற்பொறியாளர், மண்டல நிலை கண்காணிப்புப்பொறியாளர்,தலைமைபொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை -35, போன்:2435-2686, 2435-2622 |
|
|
|
2. செயல்முறைப் பரப்பின் நில மேம்பாட்டுத் திட்டம்:
திட்டத்தின் பெயர்: | நில மேம்பாட்டுத் திட்டம்- செயல்முறைப் பரப்பு |
செயல்முறைப் பரப்பு: | அனைத்து மாவட்டங்கள் |
வேலைகளின் விவரம்: | நில வடிவமைத்தல், நில சமப்படுத்துதல், நில சீர்திருத்தம், உழவு, சேற்றுழவு, கூட்டு அறுவடை இயந்திரத்தால் நெல் அறுவடை. |
அளிக்கப்படும் நன்மைகள்:
(மானியம்) | அரசால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக் கட்டணத்தில் வேளாண்மை பொறியியல் துறையானது மேற்கூறிய செயல்முறைகளை மேற்கொள்வதற்காக இயந்திரங்களை வாடகைக்கு விவசாயிகளுக்கு அளிக்கின்றன.
(வாடகை விலை பின்வருமாறு) |
தகுதி: | அனைத்து வகை விவசாயிகளும். |
செயல்படுத்துவதற்கான கால அளவு: | முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் ஒதுக்கப்படும். |
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்: | உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு. செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622 |
|
|
|
நில மேம்பாடு-இயந்திரங்களுக்கான வாடகை மதிப்பு விவரங்கள்:
வ.
எண்
|
இயந்திரத்தின் பெயர்
|
வாடகை மதிப்புகள் (ரூ/ஒரு மணி நேரத்திற்கு, டீசலுடன் சேர்த்து)
|
1.
|
டிராக்டர்
|
265
|
2.
|
அதிவிசை மண் தள்ளும் இயந்திரம்
|
670
|
3.
|
டிராக்டரில் இணைக்கப்பட்ட கூட்டு அறுவடை இயந்திரம்
|
780
|
4.
|
ரப்பர் டிராக் வகையான கூட்டு இயந்திரங்கள்
|
1130
|
|
3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
திட்டத்தின் பெயர்: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)
திட்டசெயலாக்க இடம்: அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்: பின்வருமாறு:
வ.எண் | கூறுகள் | வேலைகளின் வகை |
1. | வேளாண்மை எந்திரமயமாக்குதல் | (அ) புதிதாக உருவாக்கியுள்ள வேளாண்மை இயந்திரங்கள்/கருவிகளைப் புதுப்பித்தல்
(ஆ)வழக்கத்திலுள்ள இயந்திரம்/கருவிகளை பிரபலப்படுத்துதல். |
2. | மானாவாரி நில மேம்பாடு | (அ)எடுத்துச் செல்லக் கூடிய தெளிப்பான் தொகுதியுடைய பிளாஸ்டிக்கால் கோடிடப்பட்ட பண்ணைக் குட்டை
(ஆ)கோடிடப்படாத பண்ணை குட்டை அமைத்தல்.
(இ)கட்டுப்பாத்தி அமைத்தல். |
3. | நில வளங்கள் ஆராய்ச்சி மற்றும் GIS செய்திக் குறிப்புகளை நிறுவுதல் | நன்கு பயிர் விளையும் கிராமங்களின் வரைபடங்களை மின்படமாகஅமைத்தல். |
| அளிக்கப்படும் நன்மைகள் (மானியம்): | புதிதாக உருவாக்கியுள்ள வேளாண்மைக் கருவிகள் சிறு கூட்டு அறுவடை இயந்திரம், பல்வகை பயிர் கதிர் அடிக்குங்கருவி, நெல் நடவு இயந்திரம், ஆகியவற்றைப் பெறுவதற்கு 50 சதவிகிதம் மானிய உதவி அளிக்கப்படுகிறது. மேலும் வழக்கத்திலுள்ள கருவிகளான பவர் டில்லர், கொத்துக் கலப்பை, சுழல் கலப்பை, சட்டிப்பலுகு, சட்டிக்கலப்பை ஆகியவற்றைப் பெறுவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவிகிதம் மானிய உதவி அளிக்கப்படுகிறது. |
|
|
|
|
மழைநீர் அறுவடை மற்றும் நீர்வெளியோடல் மேலாண்மைத் திட்டம் மற்றும் நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டம்:
மழைநீர் அறுவடை மற்றும் நீர் வெளியோடல் மேலாண்மைத் திட்டம்:
திட்டம் செயல்படும் இடம்: அனைத்து மாவட்டங்களும் (சென்னை மற்றும் நீலகிரி தவிர)
நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டங்கள்:
திட்டம் செயல்படும் இடம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம். கடலுார், வேலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை, துாத்துக்குடி, கோயமுத்துார் மற்றும் நீலகிரி.
வேலைகளின் விவரம் | கசிவுநீர்க் குட்டைகள், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தடுப்பணைகள். பண்ணை குட்டைகள்
பயன்படுத்தப்படாத கிணறுகளை புத்துயிர்ப்பு பெறச் செய்தல். கிராம தொட்டிகள்/ஊறணிகள் |
வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்) | Êசமுதாய நிலங்களில் செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் 100 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. இருப்பினும், நன்மையடையும் விவசாயிகள் வேலையின் மொத்த மதிப்பில் 10 சதவிகிதம் (தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 5 சதவிகிதம்) தொகையை கிராம வளர்ச்சிக் குழுமம் (அ) நீர் பங்கீட்டு குழுமத்திற்கு அளிக்க வேண்டும். இதனால் உருவாக்கப்பட்ட இருப்புகளை வருங்காலத்தில் பாதுகாக்க இத்தொகை உதவுகிறது. பட்டா நிலங்களில் வேலைக்காக 90 சதவிகிதம் மானியத் தொகை வழங்கப்படுவதுடன் மீதமுள்ள 10 சதவிகிதம் நலன் அடைவோரின் பங்காகப் பெறப்படுகிறது. |
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்: | உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு. செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622 . |
|
|
|
5. புதியமோட்டார்பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்:
திட்டத்தின் பெயர் : புதிய மோட்டார்பம்ப்செட்களைக்கொண்டு பழைய மோட்டார்பம்ப்செட்களை மாற்றி அமைத்தல்.
செயல்படும் இடம் : அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்: பழைய, தரமற்ற மோட்டார்பம்ப்செட்களை புதிய BIS மோட்டார்பம்ப்செட்கள்கொண்டு மாற்றி அமைத்தல் மற்றும் மின் துணைக்கருவிகளை புதுப்பித்தல்.
வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்)
விபரம் | தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியின விவசாயிகளுக்கு | மற்ற விவசாயிகளுக்கு |
5 குதிரைத் திறனுக்குக் குறைவான மோட்டார்பம்ப்செட்கள். | பம்ப்செட்மதிப்பில்50 சதவிகிதம் (அ) ரூ.3500/- மானியத் தொகை-இதில் எது குறைவோ அது. | பம்ப்செட்மதிப்பில் 25 சதவிகிதம் (அ) ரூ.2500/- மானியத் தொகை- இதில் எது குறைவோ அது. |
5 குதிரைத் திறன் மற்றும் அதற்கு அதிகதிறன் கொண்ட மோட்டார்பம்ப்செட்கள் . | மோட்டார்பம்ப்செட்கள்மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூபாய்.6000/-மானியத் தொகையாக வழங்குதல். இதில் எது குறைவோ அது. | மோட்டார்பம்ப்செட் மதிப்பில்25சதவிகிதம் அல்லது ரூ.5000/- மானியத் தொகையாக வழங்குதல்- இதில் எது குறைவோ அது. |
மேல்மூடி மற்றும் அதன் மற்ற துணைப் பாகங்களை மாற்றி அமைக்கும் செலவு | மேல்பாகம் மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூ.1500/- மானியமாகவழங்குதல். இதில் எது குறைவோ அது. | மேல்பாகம் மதிப்பில்50 சதவிகிதம் அல்லது ரூ.1500/- மானியமாகவழங்குதல். இதில் எது குறைவோ அது. |
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்: | உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு. செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622 |
|
|
|
செயல் முறை விளக்கங்கள் மூலமாக 40000 எக்டர் பரப்புகளில் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்துதல்:
a. விதைகள் மற்றும் இதர இடுபொருள்களை எக்டருக்கு ரூ.800/- என்ற அளவில் வழங்குதல்.
b. உருளைக் களையெடுக்கும் கருவி மற்றும் குறியிடும் கருவியை @ ரூ.2200/- எக்டர் வழங்குதல்.
- சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களின், திருந்திய நெல் சாகுபடி முறையை செயல்படுத்துகின்ற விவசாயிகள் பயனடையலாம்.
3000 சுய உதவிக்குழு பெண்களுக்கு உருளைக்களைப்பான் (நெல் களையெடுக்குங்கருவி) மற்றும் குறியிடும் கருவியை வழங்குதல்.
- இயந்திரங்களை/கருவிகளை எளிதாக பெறுவதை உறுதி செய்வதற்கு, ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.7400/- மதிப்புள்ள 5 உருளைக் களைப்பான்கள் மற்றும் /குறியிடும் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.
- சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலுள்ள 3000 சுய உதவிக்குழு/பண்ணை மகளிர் குழு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
|
|
|
|
No comments:
Post a Comment