Saturday, November 19, 2016

2 வாரத்தில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க இந்த ஹேர் மாஸ்க்கை போடுங்க...

 

     இங்கு தலைமுடியின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்க கேரட்டைக் கொண்டு எப்படி மாஸ்க் போடுவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.



    கேரட்டில் வைட்டமின்களான ஏ, கே மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்வதோடு, புதிய மயிர்கால்களின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி, இரத்த ஓட்டத்தைத் தூண்டி, மயிர்கால்களை வலிமைப்படுத்தி, தலைமுடி உதிர்வதையும், உடைவதையும் தடுக்கும்.
இங்கு தலைமுடியின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்க கேரட்டைக் கொண்டு எப்படி மாஸ்க் போடுவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.


ஸ்டெப் #1

ஒரு அவகேடோ பழத்தை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அவகேடோவில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது.
ஸ்டெப் #1


ஸ்டெப் #2

ஒரு கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப, கேரட்டை பயன்படுத்தி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் #2

ஸ்டெப் #3

ஒரு பௌலில் கேரட் ஜூஸ், அவகேடோ பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, சிறிது தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் மிகவும் கெட்டியாகவோ அல்லது நீர்மமாகவே இல்லாமல் நடுநிலையான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் #3

ஸ்டெப் #4

பின் அத்துடன் சிறிது ரோஸ்மேரி ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ரோஸ்மேரி ஆயிலில் உள்ள பண்புகள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, தலைமுடியின் ஆரோக்கியத்தைத் தூண்டும்.
ஸ்டெப் #4

ஸ்டெப் #5

பின்பு சீப்பால் தலைமுடியை சீவி, தலைமுடியில் உள்ள சிக்குகளை நீக்க வேண்டும்

ஸ்டெப் #6

பின் பிரஷ் பயன்படுத்தி, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7

ஒரு மணிநேரம் கழித்து, தலைமுடியை மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு போட்டு வந்தால், தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.

No comments:

Post a Comment