Friday, October 28, 2016

பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் லாக்கை 'உடைப்பது' எப்படி.?

ஏன் நீங்கள் ஒரு மொபைல் பாஸ்வேர்ட்அல்லது பேட்டர்ன் லாக்கை அமைக்க வேண்டும்.? நிச்சயமாக மற்றவர்களிடம் இருந்துஉங்கள் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளவே அமைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் சமீபத்தில் மாற்றம் நிகழ்த்திய உங்கள்பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் லாக்கை தற்செயலாக மறந்துவிட்ட அனுபவம் அந்த குறிப்பிட்ட ஒரு நிலையில் சிக்கிக் கொண்டதுண்டா..? அப்படியான ஒரு கடும் சூழ்நிலையில் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை திறக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால் கீழ்வரும் மூன்று வழிமுறைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.


வழிமுறை #01 
  பேக்டரி ரீசெட் மூலம் அன்லாக் செய்வது : ஆண்ட்ராய்டு சாதனத்தை அன்லாக் செய்ய எளிய தந்திரம் இதுவாகும். இந்த முறை யில் நீங்கள் தொலைபேசி நினைவகத்தில் சேமித்து வைத்துள்ள அனைத்து தரவுகளையும் நீக்கிவிடும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருந்தால் கீழே உள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.

செயல்முறை : 
  உங்கள் ஆண்ட்ராய்டு கருவியை ஸ்விட்ச்டு ஆப் செய்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்கவும். பின்னர் உங்கள் கருவியின் வால்யூம் + பட்டன் மற்றும் பவர் பட்டன் ஆகிய இரண்டையும் ஒன்றாக அழுத்தவும். அது உங்கள் கருவொயின் ரிக்கவரி மோட்தனை திறக்க வழிவகுக்கும். இப்போது மெனுவில் பேக்டரி ரீசெட் ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கிடைக்கும் பட்டியலில் 'வைப் கேச் பார்ட்டிஷன் டு கிளீன் டேட்டா' என்பதை டாப் செய்யவும் பின்னர் இறுதியாக உங்கள் கருவியை ஸ்விட்ச் ஆன் செய்யவும்.


வழிமுறை #02 
  ஏடிஎம் (ADM) பயன்படுத்தி அன்லாக் செய்வது : நீங்கள் ஏடிஎம் (ADM) என்றால் என்ன என்று ஆச்சரியமாக கேட்கலாம். இதுவொரு ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் ஆகும். நீங்கள் எளிதாக எந்த டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினியிலும் இருந்து இதை பயன்படுத்தி உங்கள் மொபைலை அன்லாக் செய்ய முடியும். அதை நிகழ்த்த பின்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்.

செயல்முறை : 
  உங்களின் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் சைட்க்கு செல்லவும் உங்களின் கூகுள் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்யவும். பின்னர் அங்கு லாக் ஆப்ஷனை கிளிக் செய்து புதிய பாஸ்வேர்ட்தனை பதிவு செய்யவும் பின்னர் மீண்டும் ஒருமுறை உங்கள் பாஸ்வேர்டை சரிபார்த்துக் கொள்ளவும். இப்போது உங்கள் கருவியை ரீபூட் செய்யவும், பதிவு செய்த புதிய பாஸ்வேர்டை பயன்படுத்திக் கொள்ளவும்.


வழிமுறை #03 
  பேட்டர்ன் லாக்கை பைபாசிங் செய்வது : இந்த வழிமுறை உங்கள் லாக்டு மொபைலில் ஒரு ஆக்டிவ் டேட்டா இணைப்பு இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.

செயல்முறை : 
  வேண்டுமென்றே 5 முறைக்கும் மேலாக தவறான பேட்டர்ன் லாக்கை நிகழ்த்தவும், பின்னர் 30 நொடிகளுக்கு பின்னர் முயற்சி செய்யவும் என்ற நோட்டிபிக்கேஷன் மெசேஜை நீங்கள் பெறுவீர்கள் பின்னர் பர்கெட் பாஸ்வேர்ட் ஆப்ஷன் உங்களுக்கு காட்டப்படும் அதை டாப் செய்து உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் உங்கள் பாஸ்வேர்ட் அளிக்க உங்கள் கருவிக்கு புதிய பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளலாம்

இது மட்டும் இருந்தா போதும்.. நீங்களும் 'அம்பானி' ஆகலாம்..!

  ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து மாதம் சம்பளம் வாங்குவதை விட ஒரு தொழில் தொடங்கி அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசையா உங்களுக்கு..

  நாட்டில் சுமார் 80% மக்கள் வேலை பார்த்து வரும் நிலையில் 20% பேர்தான் தொழிலதிபர் ஆகி அவர்களுக்கு வேலைக் கொடுக்கின்றனர். இவர்களில் தொடர்ந்து வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர்கள் சுமார் 10% பேர்கள்தான். எனவே நீங்களும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆக வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.

  உறுதியான நோக்கம் மற்றும் முடிவெடுக்கும் திறன் 
  வாழ்க்கையில் ஒரு உறுதியான நோக்கத்தைக் கையில் எடுத்து அதை நோக்கி எடுக்கும் சரியான முடிவுகள்தான் உங்களை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றும். நீங்கள் இரவு பகல் பாராது எந்தவித சோர்வும் இன்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வேலையில் சலிப்பு வந்துவிட்டால் நீங்கள் சறுக்கிவிடுவீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தூக்கம் வரவில்லையா? 
  ஒரு பணியை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அந்தப் பணி முடியும் வரை உங்களுக்குத் தூக்கம் வரவில்லையா? அப்படியென்றால் நீங்களும் ஒருநல்ல தொழிலதிபர்தான். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் ஒரு ஏற்றம் இருக்க வேண்டும். மேலும் மேலும் உயர வேண்டும் என்ற இலக்குதான் உங்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்து வரும் பணியை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்ற வேண்டும்.

ரிஸ்க் எடுக்க வேண்டும் 
  எந்த ஒரு தொழிலதிபரும் ரிஸ்க் எடுக்காமல் தொழிலதிபர் ஆக முடியாது. அதே நேரத்தில் ரிஸ்க் எடுத்தவர்கள் அனைவருமே வெற்றிகரமான தொழிலதிபர் என்று அர்த்தம் கிடையாது.

ரிஸ்க் எடுப்பதற்கு முன்பு 
  ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை எடுப்பதற்கு முன், இந்த ரிஸ்க் நம்மையும் நமது நேரம், முதலீடு ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கும், இந்த ரிஸ்க் பெயிலர் ஆனால் அதற்கு என்னென்ன மாற்று ஏற்பாடு என்பதைத் திட்டமிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒருவேளை அந்த ரிஸ்க் நமக்கு எதிராகத் திரும்பினாலும் அதைச் சந்திக்கும் மன வலிமை வேண்டும்.

தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடன் கூடிய ஈடுபாடு 
   வெற்றி பெற்ற தொழிபதிபரை பாருங்கள் அல்லது அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் படித்து பாருங்கள். நிச்சயம் அனைத்து வெற்றிகரமான தொழிலதிபர்களும் கண்டிப்பாகத் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். இதுதான் ஒரு தொழிலதிபருக்கு தேவையான முதல்படி. அதேபோல் கடின உழைப்பு. மனதிலும் உடலிலும் சோர்வின்றி உழைக்கும் தன்மை மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடனும் நேர்மையுடனும் தொழிலில் கொண்ட ஈடுபாடு நிச்சயம் ஒருவரை வெற்றி பெற செய்யும்.

ஒத்துப் போகுதல் மற்றும் வளைந்து கொடுத்தல் 
  நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதம் தொழிலுக்குச் சரியாக வராது. நம்மைவிட வயது குறைந்தவரோ அல்லது அனுபவம் குறைந்தவரோ ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் தற்போதைய தொழில் போட்டி நிலையில் வளைந்து கொடுக்கும் குணமும் முக்கியம். நெளிவு சுளிவுகளுடன் வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் தாங்க...

மனிதாபிமானம் 
  தொழில் நடத்துபவர்களுக்குக் கண்டிப்பாக மனிதாபிமானம் இருக்க வேண்டும். நம்முடைய தொழிலை பெருக்கி கொள்ளை லாபம் பெற வேண்டும் என்பதற்காக அளவு கடந்த இலாபத்திற்குப் பொருட்களை விற்பது, வாடிக்கையாளர்களிடம் ஏளனமாகப் பேசுவது, நம்மிடம் வேலை பார்ப்பவர்களை சக்கையாகப் பிழிவது, சக தொழிலதிபர்களை மனிதாபிமானம் இன்றி நசுக்குவது போன்ற செயலைச் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் நல்ல தொழிலதிபர் என்று வேண்டுமானால் பெயர் எடுக்கலாம், ஆனால் நல்ல மனிதன் என்ற பெயரை எடுக்க முடியாது.

மார்க்கெட்டிங் அறிவு நிச்சயம் 
  ஒரு நல்ல தொழிலதிபருக்கு தான் உற்பத்தி செய்யும் பொருளின் தரம் மற்றும் மார்க்கெட்டிங் குறித்த நுட்பமான அறிவு அவசியம். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நமது தயாரிப்புக்குரிய மரியாதை, ஏற்ற இறக்க விலைகள் மற்றும் இதே பொருளை தயாரிக்கும் நமது போட்டியாளரின் விலை ஆகியவை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்

முதலீட்டைக் கையாளும் திறன் 
  ஒரு தொழிலதிபரின் வெற்றியின் ரகசியம் அவர் செய்யும் முதலீட்டில்தான் உள்ளது. எந்தத் தொழிலாக இருந்தாலும் இக்கட்டான நிலை ஒன்று வரும். அந்தச் சமயத்தில் கூடுதல் முதலீடு தேவைப்படும். எனவே இருக்கும் பணத்தை இம்மாதிரியான இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க எனத் தனியாக ஒரு தொகையை ஒதுக்கியிருக்க வேண்டும். இருக்கும் பணத்தை மொத்தமாகத் தொழிலில் முதலீடு செய்துவிட்டு பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழிபிதுங்கி இருப்பவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராக முடியாது

திட்டமிடல் தேவையா?
   வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவருக்குத் திட்டமிடல் முக்கியம்தான். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு செயலுக்கும் திட்டமிடல் ஒத்துவராது. சில விஷயங்களை அதன் போக்கில் விட்டுவிட்டுக் கவனிக்க வேண்டும். ஒரே ஒருமுறை திட்டமிட்டாலே அந்தக் காரியம் வெற்றிகரமாக முடிவடைந்துவிடும் என்று எண்ணக்கூடாது. ஒரு திட்டம் பலிக்கவில்லை என்றால் அடுத்த திட்டத்தை தொடங்க வேண்டும். அதேபோல் ஒரு தொழிலை ஆரம்பிக்கும்போது நமது திறமையைத் தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்தத் தொழிலில் நமக்கு என்னென்ன எல்லாம் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிளசும் மைனசு 
  பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பிளசும் மைனசும் கலந்தே இருக்கும். நம்மிடம் உள்ள பிளசை மட்டுமே களமிறங்குவது பிரேக் இல்லாத வண்டியைப் போல. எனவே நம்மிடம் என்னென்ன மைனஸ் இருக்கின்றது என்பதைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் மைனஸ் இக்கட்டான நேரத்தில் நம்மைப் பதம் பார்த்துவிடும். மைனஸ் என்ன என்பது அனுபவம் இல்லாமை, புத்தம் புதிய முயற்சி, தொழிலுக்கான சரியான நேரம் மற்றும் இடம் உள்பட ஒருசில விஷயங்கள் ஆகும். முதலில் நம்முடைய மைனசுக்கு மாற்று வழியைத் தேட வேண்டும். மாற்று வழி தெரிந்த தொழிலதிபர்கள் எந்த நேரத்திலும் தோல்வி அடைவதில்லை

நெட்வொர்க் ரொம்ப முக்கியம் 
  தொழில் செய்பவர்களுக்கு பழக்கவழக்கங்கள் ரொம்ப முக்கியம். நமது துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் வேறு துறைகளை சார்ந்தவராக இருந்தாலும், நண்பர்களை அதிகமாக்கிக் கொள்வது தன்னம்பிக்கையை வளர்க்கும். திடீரென தோன்றும் சிக்கல்களில் இருந்து விடுபட நமது நண்பர்களின் அனுபவங்கள் நமக்குப் பயன்படும். மேலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடலாம் என்று தைரியம் சொல்வதற்கு நான்கு நண்பர்கள் இருந்தால் நமக்குக் கவலையே இருக்காது.

தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு 
   ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதே தொழிலை செய்யும் பலரிடம் பேசுங்கள். இந்தத் தொழிலின் இன்றைய நிலை, எதிர்காலம் ஆகியவை குறித்து புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்வதை விட அந்தத் தொழிலில் ஈடுபடும் ஒருவரிடம் பேசினால் கிடைக்கும் அனுபவங்கள் மிகப்பெரியவை.

வெளியேறத் தயங்க கூடாது 
  தொழிலில் ஈடுபடும் அனைவரும் வெற்றி பெறமுடியாது. போதுமான முதலீடு இருந்தும், துறை சார்ந்த அறிவாற்றல் இருந்தும் சிலசமயம் நாம் செய்யும் தொழில் நஷ்டமடைய நேரிடும். இருப்பினும் நஷ்டமடைந்த தொழிலை விடாப்பிடியாகத் தொடர வேண்டாம். அதை அப்படியே விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறுங்கள். எத்தனையோ தொழிலதிபர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவதாக ஆரம்பித்த தொழிலில்தான் வல்லவர் ஆகியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சந்தேகப்படுங்கள் ஆனால் அதிலும் அளவு இருக்க வேண்டும் 
  எந்த ஒரு தொழிலையும் ஆரம்பிக்கும் முன்னர் நமக்கு நாமே சற்று சந்தேகப்பட வேண்டும். இதை நம்மால் செய்ய முடியுமா? நம் கேரக்டருக்கு இந்தத் தொழில் ஒத்து வருமா? இதே தொழிலில் உலக அளவில் சாதித்தவர்கள் இருக்கும்போது புதியதாக நுழையும் நம்மால் எந்த அளவுக்கு இதைப் புதுமையாக செய்ய முடியும் என்று சந்தேகப்படுங்கள். இதற்கு பாசிட்டிவ் பதில் கிடைத்துவிட்டால் உடனே நீங்கள் ஸ்டார்ட் செய்யலாம். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் பலமுறை யோசிப்பதில் தவறில்லை. ஆனால் ஆரம்பித்தவுடன் முழு மனதுடன் நமது எண்ணம் முழுவதும் வெற்றி என்ற இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்


ஏன் உங்களை மட்டும் கொசு "ஓ"வரா கடிக்குதுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

  மனிதர்களில் மற்ற வகை ரத்தப் பிரிவினரை விட ஓ வகை ரத்தப் பிரிவு கொண்டவர்களைத்தான் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வு ஒன்று செல்கிறது.
நாய்களே ஜாக்கிரதை!

கொசுக்கள்.. பிறந்தோமா, நாலு பேரைக் கடிச்சோமா... நல்லா ரத்தம் குடிச்சோமா என்று திரியும் சுகவாசிகள்...! எந்த வேலையும் இல்லை இந்த கொசுக்களுக்கு. கடிப்பதும், குடிப்பதும் மட்டுமே இதன் தொழில். உலகத்திலேயே சூப்பர் டூப்பர் சோம்பேறிகள் இவை மட்டும்தான். இந்த கொசுக்கள் பார்க்கத்தான் தம்மாத்தூண்டு.. ஆனால் இவர்களால் மனிதகுலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் எத்தனை எத்தனை..! 

  மழைக்காலம் வரப் போகிறது இல்லையா.. கண்டிப்பாக நாம் கொசுக்கள் குறித்தும், கொசுக்கடி குறித்தும் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டும். கொசுக்கள் மொத்தமே 3 வகைதான்... ஆனால் அது கடிப்பதில்தான் எத்தனை வகை. விதம் விதமாக கடிப்பது கொசுக்கள் மட்டுமே. அதை விட முக்கியம் குறி பார்த்துக் கடிப்பதில் கொசுக்கள் கில்லாடி. ஆள் பார்த்துப் பேசு என்பார்கள் இல்லையா.. அது போலவே ஆளுக்கு ஆள் கொசுக்கடி மாறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கடி கிடைப்பதில்லை. இது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாய்களே ஜாக்கிரதை! 
நாய்களை கொசுக்கள் கடித்தால் அந்த நாய்களுக்கு இதயமே நின்று போகும் அளவுக்குப் பெரிய பிரச்சினை ஏற்படுமாம். அதாவது நாய்களை கொசுக்கள் கடிக்கும்போது ஹார்ட்வோர்ம் (heartworm ) எனப்படும் இதய நோய் ஏற்படுகிறது. அதாவது கொசுக்கள் மூலமாக நாய்களின் ரத்தத்தில் புழுக்கள் பரவுகின்றன. இந்தப் புழுக்கள் ரத்த நாளங்களை காலி செய்து விடுமாம். இதனால் பாதிக்கப்பட்ட நாய்களின் இதயம் செயலிழந்து போய் விடுமாம்.


மாசுபட்ட தண்ணீர் 
கொசுக்களுக்கு தண்ணீர் என்றால் இஷ்டம். அதிலும் மாசுபட்ட கழிவு நீர் என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். அங்குதான் அதிக அளவில் கொசுக்கள் முட்டை போடுகின்றன, பல்கிப் பெருகுகின்றன.


இது நல்ல டேஸ்ட் உடம்பு பாஸ்! 
 கொசுக்கள் ஒருவரைக் கடிக்கும் முன்பு தான் கடிக்கப் போவது யார், அது நமக்குச் சரிப்பட்டு வருமா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்குமாம் (தம்மாத்தூண்டு கொசு எப்படியெல்லாம் "ஜிந்திக்குது" பாருங்க!). தனக்குப் பிடித்தமான நபரைத்தான் அது கடிக்குமாம்.

ஓ வகை ஓஹோ! 
  மெடிக்கல் என்டமாலஜி ஜர்னல் (Journal of Medical Entomology) இதுகுறித்த விரிவான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஓ வகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களைத்தான் கொசுக்கள் அதிகமாக கடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களைத்தான் கொசுக்கள் குறி வைத்து குதறி எடுக்குமாம்.


83 சதவீதம் 
  கொசுக்கள் குறி வைக்கும் ரத்தப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 83 சதவீதம் ஓ பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அடுத்த இடத்தில் பி, ஏ மற்றும் ஏபி ஆகியவை உள்ளனவாம். ஓ பிரிவு ரத்தம்தான் கொசுக்களை எளிதாக ஈர்க்கிறதாம். இதனால்தான் ஓ பிரிவினர் அதிக அளவில் கொசுக்கடிக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.


குப்பை சேர விடாதீங்க 
  இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், கொசுக்கள் ஓ பிரிவு ரத்த வகையினரை அதிகம் கடிக்கிறது உண்மைதான் என்றாலும் கூட மற்றவர்களைக் கடிக்காது என்று கவனக்குறைவாக இருக்கக் கூடாது. நாம் வசிக்கும் இடம் சுத்தமாகவும், கழிவு நீரோ அல்லது அழுக்கு நீரோ தேங்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது என்றனர். உண்மைதான்.. கொசு இருந்தால்தானே கடிக்கும்.. எனவே கொசுக்கள் தங்குவதைத் தடுத்தாலே பாதிக் கடியையும் தவிர்க்க முடியும். மழை வரப் போகிறது, மக்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் கொசுக்கடி குறைய வாய்ப்புண்டு.


Tuesday, October 25, 2016

சிறு நீரக செயலிழப்பு ( A to Z விளக்கம் | காரணம் | தீர்வு | மருத்துவம் )

சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன?

kidney

இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிநீரகங்கள் (Kidney / ies) அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.
சிறுநீரகச் செயலிழப்பின் இனங்கள் எவை? விசேஷமானவை இரண்டு வகை.
சடுதியான சிறுநீரகச் செயலிழப்பு – இது குறுகிய காலத்தில் விருத்தி அடையும்: பொதுவாக தொழிற்பாடு திரும்பவும் வரக்கூடியது. ( உ+ம்: பாம்புக்கடியைத் தொடர்ந்து)
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு – இது பல மாதங்கள் , வருடங்களாக விருத்தியடையும். ஆனால் தொழிற்பாடு திரும்பி வராது. (உ+ம்:திரும்பத்திரும்ப சிறுநீரக அழர்ச்சி தோன்றுவது.) மேலே கூறப்பட்ட இரண்டு இனங்களை விட, கலப்பான வேறு இனங்களும் உண்டு.
சிறுநீரகச் செயலிழப்பு யாருக்கு வரக்கூடும்?
சிறு பராயம் முதல் முதிர் வயது வரை எவருக்கும் வரக்கூடும். இது ஆண், பெண் இருசாராருக்கும் வரும். ஆனால் முன்பு அடிக்கடி, சிறுநீரக நோய்கள் வந்தவர்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு.

சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் என்ன?
பிள்ளைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் (Polycystic) சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.
பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.
சிறுநீரக செயல் இழப்பிற்கான இதர காரணங்கள் :
  • அதிகமான ரத்த இழப்பு,
  • வாந்தி -பேதி போன்றவற்றினால் உடலில் அதிகமான நீர் இழப்பு,
  • தேவையான தண்ணீர் குடிக்காதது.
  • மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் உடலிலிருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியாவது.
  • சிறுநீரகங்களுக்குத் தேவையான ரத்த சப்ளை, சரிவர கிடைக்காமல் போவது.
  • சிறுநீர்க்குழாய் (ureter), சிறுநீர்ப்பை ஆகியவைகளில் ஏற்படும் அடைப்பு.
  • வயிற்றில் உண்டாகும் கட்டி,
  • சிறுநீரகத்தையும் யூரிடரையும் (ureter) அமுக்குவதால் ஏற்படும் அடைப்பு ஆகிய காரணங்களினால் சிறுநீரகம் `செயல் இழக்க’ ஆரம்பித்துவிடுகிறது. ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்காமல், அதிக நாட்கள் படுக்கையில் இருப்பவர்களுக்கு, சிறுநீரகம், செயல் இழந்து போகும். அதனால்தான், அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு, முதலில் கிட்னி ஒழுங்காக வேலை செய்கிறதா, இல்லையா என்று சோதனை செய்து பார்ப்பார்கள்.
  • பசி, பட்டினியுடன் கிடந்தும், கிட்னி இன்னும் கெட்டுப் போகவில்லை என்றால், உண்ணாவிரதத்தை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீட்டிக்கலாம். கிட்னி சரியாக வேலை பார்க்கவில்லை என்று தெரிந்தால், உடனே உண்ணாவிரதத்தை முடித்து விடுவதுதான் உடலுக்கு நல்லது.
  • பயங்கர விபத்தினால் உடல் பாகங்கள் நசுங்கி, சிதைந்து போகுதல் மற்றும் அதிகமான தீக்காயம் ஏற்படுதல் முதலிய சமயங்களில் உடல் தசைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு, தசைநார்கள் கூழாகி, சிறுநீரகங்களிலுள்ள பில்டர்களை அடைத்து விடுவதால், சிறுநீரகங்கள் செயல் இழந்து விடுவதும் உண்டு.
  • இதேமாதிரி, சில நேரங்களில், சிறுநீரகக் கற்களால் கூட பாதை அடைபட்டுக் கொண்டு, `கிட்னி பெயிலியர் – kidney failure ‘ ஏற்படுவதுண்டு. ஆனால் எந்தப் பக்கம் கற்கள் இருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள சிறுநீரகம் மட்டும்தான் பாதிப்படையும். மற்றொரு பக்கத்தில் இருக்கும் சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒரே ஒரு சிறுநீரகம் உள்ளவர்களுக்கு, இந்த சிறுநீரகக்கற்கள் அடைத்தால், ஆபத்து தான்.
  • கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் இவைகளும் `கிட்னி பெயிலியர்’ ஏற்பட காரணங்களாகும்.சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால், ஒரு நாள் கூட, நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியாது. உடலில், சொல்ல முடியாத, எதிர்பார்க்காத தொந்தரவுகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.
  • சிறுநீரக பாதிப்பை, மருந்து, மாத்திரைகளால் சரிபண்ண முடியவில்லையென்றால், உடலிலிருந்து வெளியே போகவேண்டிய கழிவுப்பொருட்கள், உடலிலுள்ள ரத்தத்தில் சேர ஆரம்பித்துவிடும். இந்தக் கழிவுப் பொருட்களை எப்படி வெளியே அனுப்புவது? இந்தக் கழிவுப் பொருட்கள் கலந்த ரத்தத்தை எப்படி சுத்தம் பண்ணுவது? இதற்கான அடுத்த நடவடிக்கைதான் `டயலிசிஸ்’ என்பதாகும்.
  • ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களையும், விஷப்பொருட்களையும் வெளியே அனுப்பும் வேலையை, சிறுநீரகத்திற்குப் பதிலாக செய்யும் வேலையை `டயலிசிஸ் (dialysis)’ என்றும், இந்த வேலையை செய்யும் கருவியை `டயலைஸர்’ என்றும் கூறுவதுண்டு. `செயற்கை சிறுநீரகம்` என்று சொல்லக்கூடிய 1 அடி நீளமுள்ள ஒரு கருவியும், 5 அடி உயரமுள்ள இன்னொரு கருவியும் சேர்ந்துதான், ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையைப் பார்க்கின்றன.
பிள்ளைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் (Polycystic) சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.
பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.
சிறுநீரக செயல் இழப்பிற்கான இதர காரணங்கள் :
  • அதிகமான ரத்த இழப்பு,
  • வாந்தி -பேதி போன்றவற்றினால் உடலில் அதிகமான நீர் இழப்பு,
  • தேவையான தண்ணீர் குடிக்காதது.
  • மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் உடலிலிருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியாவது.
  • சிறுநீரகங்களுக்குத் தேவையான ரத்த சப்ளை, சரிவர கிடைக்காமல் போவது.
  • சிறுநீர்க்குழாய் (ureter), சிறுநீர்ப்பை ஆகியவைகளில் ஏற்படும் அடைப்பு.
  • வயிற்றில் உண்டாகும் கட்டி,
  • சிறுநீரகத்தையும் யூரிடரையும் (ureter) அமுக்குவதால் ஏற்படும் அடைப்பு ஆகிய காரணங்களினால் சிறுநீரகம் `செயல் இழக்க’ ஆரம்பித்துவிடுகிறது. ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்காமல், அதிக நாட்கள் படுக்கையில் இருப்பவர்களுக்கு, சிறுநீரகம், செயல் இழந்து போகும். அதனால்தான், அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு, முதலில் கிட்னி ஒழுங்காக வேலை செய்கிறதா, இல்லையா என்று சோதனை செய்து பார்ப்பார்கள்.
  • பசி, பட்டினியுடன் கிடந்தும், கிட்னி இன்னும் கெட்டுப் போகவில்லை என்றால், உண்ணாவிரதத்தை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீட்டிக்கலாம். கிட்னி சரியாக வேலை பார்க்கவில்லை என்று தெரிந்தால், உடனே உண்ணாவிரதத்தை முடித்து விடுவதுதான் உடலுக்கு நல்லது.
  • பயங்கர விபத்தினால் உடல் பாகங்கள் நசுங்கி, சிதைந்து போகுதல் மற்றும் அதிகமான தீக்காயம் ஏற்படுதல் முதலிய சமயங்களில் உடல் தசைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு, தசைநார்கள் கூழாகி, சிறுநீரகங்களிலுள்ள பில்டர்களை அடைத்து விடுவதால், சிறுநீரகங்கள் செயல் இழந்து விடுவதும் உண்டு.
  • இதேமாதிரி, சில நேரங்களில், சிறுநீரகக் கற்களால் கூட பாதை அடைபட்டுக் கொண்டு, `கிட்னி பெயிலியர் – kidney failure ‘ ஏற்படுவதுண்டு. ஆனால் எந்தப் பக்கம் கற்கள் இருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள சிறுநீரகம் மட்டும்தான் பாதிப்படையும். மற்றொரு பக்கத்தில் இருக்கும் சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒரே ஒரு சிறுநீரகம் உள்ளவர்களுக்கு, இந்த சிறுநீரகக்கற்கள் அடைத்தால், ஆபத்து தான்.
  • கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் இவைகளும் `கிட்னி பெயிலியர்’ ஏற்பட காரணங்களாகும்.சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால், ஒரு நாள் கூட, நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியாது. உடலில், சொல்ல முடியாத, எதிர்பார்க்காத தொந்தரவுகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.
  • சிறுநீரக பாதிப்பை, மருந்து, மாத்திரைகளால் சரிபண்ண முடியவில்லையென்றால், உடலிலிருந்து வெளியே போகவேண்டிய கழிவுப்பொருட்கள், உடலிலுள்ள ரத்தத்தில் சேர ஆரம்பித்துவிடும். இந்தக் கழிவுப் பொருட்களை எப்படி வெளியே அனுப்புவது? இந்தக் கழிவுப் பொருட்கள் கலந்த ரத்தத்தை எப்படி சுத்தம் பண்ணுவது? இதற்கான அடுத்த நடவடிக்கைதான் `டயலிசிஸ்’ என்பதாகும்.
  • ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களையும், விஷப்பொருட்களையும் வெளியே அனுப்பும் வேலையை, சிறுநீரகத்திற்குப் பதிலாக செய்யும் வேலையை `டயலிசிஸ் (dialysis)’ என்றும், இந்த வேலையை செய்யும் கருவியை `டயலைஸர்’ என்றும் கூறுவதுண்டு. `செயற்கை சிறுநீரகம்` என்று சொல்லக்கூடிய 1 அடி நீளமுள்ள ஒரு கருவியும், 5 அடி உயரமுள்ள இன்னொரு கருவியும் சேர்ந்துதான், ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையைப் பார்க்கின்றன.
  • kidney dialysis machine
இந்தக் கருவிகளின் விலை சுமார் 5 லட்சத்திலிருந்து சுமார் 12 லட்சம் வரை இருக்கிறது. சிறுநீரகம் இயற்கையாக செய்யும் வேலையை, இந்தக் கருவி செய்து கொடுக்கும். ஆனால் ஒரிஜினல் சிறுநீரகம் மாதிரி, எல்லா வேலையையும் செய்யுமா? என்று நீங்கள் கேட்கலாம், ஓரிஜினல் சிறுநீரகம் மாதிரி வராது. அமெரிக்காவில் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர், செயற்கை சிறுநீரகத்தை நம்பியே வாழ்கிறார்கள்.
`வில்லம்கால்ப்` என்கிற டச்சு நாட்டு டாக்டர், 1943-ம் ஆண்டில், தன் கையில் கிடைத்த கருவிகளைக் கொண்டு, முதன் முதலாக ஒரு `டயலைஸர்’ மெஷினை உருவாக்கினார். இந்த மெஷினை உபயோகித்து, கிட்னி பெயிலியர் ஆன, பதினாறு நோயாளிகளுக்கு `டயலிஸிஸ்’ சிகிச்சை செய்து பார்த்தார். ஆனால், அது வெற்றியைத் தரவில்லை.
1945-ம் ஆண்டில்தான் முதன் முதலாக, சுயநினைவு இல்லாமல் இருந்த ஒரு 67 வயது பெண்ணுக்கு, 11 மணி நேரம் `ஹீமோ டயலிசிஸ்’ சிகிச்சை செய்து, பிழைக்க வைத்து, அதற்கப்புறம் அந்தப் பெண்மணி சுமார் 7 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். முதன் முதலாக `டயலிசிஸ்’ சிகிச்சை மூலம், குணமடைந்து உயிர் வாழ்ந்த பெண்மணி இவர்தான்.

சிறுநீரகச் செயலிழப்பை எப்படி அடையாளம் காண்பது :
  • சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்திலே நோயாளியிடத்தில் குறிப்பாகக் கொள்ளக்கூடிய எதுவித அறிகுறிகளும் இராது. சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தம் சிறுநீர் ஆகியவற்றை பரிசோதித்தே திட்டமாக அறியமுடியும். சிறுநீரகச் செயலிழப்பில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.
  • கடுமையான பசியின்மை, பிரட்டு, சத்தி, விக்கல், வாந்தி.
  • மூச்சு விடுவதில் கஸ்டம்
  • முகம் கால், வயிற்றுப் பகுதியில் வீக்கம்.
  • சிறுநீர் குறைவாகக் கழித்தல், (சடுதியான சிறுநீரகச் செயலுழப்பு) அல்லது கூடுதலான சிறுநீர் கழித்தல் (நாள் கடந்த சிறுநீரக செயலிழப்பில்)
  • இரத்தச் சோகை (Anaemia) (நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு)
சிறுநீரக செயலிழப்பபை எப்படி உறுதிப்படுத்துவது?
யூரியா (Blood urea) சீரம் கிறியற்றினின் (Serum creatinine) என்பவற்றைப் பரிசோதித்து சிறுநீரக செயலிழப்பை உறுதிப்படுத்தலாம். சிறுநீரகச் செயலிழப்பில் யூரியாவும், சீரம் கிறியற்றினினும் கூடுகின்றன. 24 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக சிறுநீரைச் சேர்த்து அதிலே கிறியற்ரினி்ன் கிளியறன்ஸ்(Creatinine clearance) பரிசோதனையை நடத்தினால், அது சிறுநீரகச் செயலிழப்பு என்பதை வைத்தியர் திட்டவட்டமாக அறிந்து கொள்ள உதவும். சிறுநீரகச் செயலிழப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக இப்பரிசோதனை அடிக்கடி செய்யப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாக இருப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள , அல்றா சவுண்ட் ஸ்கான் (Ultra sound scan) னும் வைத்தியருக்கு உதவுகின்றன.
சிறுநீரகச் செயலிழப்புக்கு செய்யக்கூடிய பராமரிப்பு முறைகள் எவை?
  1. உணவு தரப்படுத்தல்./ மாற்றல்.
  2. மருந்துச் சிகிச்சை(Druy therapy)
  3. டயலைசிஸ் (Dialysis)
  4. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை.
  • உணவு மாற்றம் – உணவிலே புரதச்சத்து, பொட்டாசியம், உப்பு நீர் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவது சாதாரண வழக்கம். புரதச்சத்து அடங்கியுள்ள இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை நாள் வீதம் ஒரு அளவிற்குக் குறைக்க வேண்டும். இளநீர் பழவகைகள், பொரித்த உருழைக்கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் இருப்பதால் இவை தவிர்க்கப்பட வேண்டும். கூடுதலான இரத்த அமுக்கம், உடல் வீக்கம், மூச்சு விடக் கஸ்டம் இவை இருந்தால் உப்பு குறைக்கப்பட வேண்டும். பாவிக்க கூடிய தண்ணீரின் அளவை உமது வைத்தியரே தீர்மானிக்க வேண்டும்.
  • மருந்துச் சிகிச்சை(Drug therapy) – நோயாளியின் சிறுநீர் செயலிழப்பு நிலையைப் பொறுத்து பல வித மருந்துகள் தேவைப்படும்…  உடலின் வீக்கத்தைக்குறைக்க – டையூறற்ரிக்ஸ் (Diuretics) (உ+ம்வ்றுஸெமைட் (frusemide) இரத்த அமுக்கத்தைக் குறைக்க – அன்றிஹைபரென்சிவ்ஸ் (Antihypertensives) (உ+ம்: மீதைல்டோபா methyilopa) வாந்தி சத்தியைக் குறைக்க –அன்ரிஎமெற்றிக்ஸ் (Antiemetics) உ+ம் மெற்ரோகுளோபிறமைட் (Metoclopramide) இரத்தக் குறைவுக்கு –இரத்தம் ஏற்றல், எரித்திரோபொயிற்ரின், இது விலை கூடிய மருந்து. சிறுநீர்த் தொற்றைப் பராமரிக்க—அன்றிபையொற்றிக் (உ+ம் :அமொக்சிலின்)
  • டயலைஸிஸ் – சிறுநீரகச் செயலிழப்பில் மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் யூரியா, பொட்டாசியம் எனும் உப்புக்கள் ஆபத்தான நிலைக்கு கூடிவிடும். இந்நிலையில் நோயாளி மரிக்கவும் கூடும். உடலிலுள்ள அழுக்குகளாகிய யூரியா, பொட்டாசியம் என்பவற்றை வெளியேற்றும் முறையே டையலைசிஸ் எனப்படுகிறது. டையலைசிஸ் பற்றிய தலையங்கம் வேறோர் துண்டுப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சிறுநீரக மாற்றுச் சிகிச்சை -எதுவித மாற்றமும் எற்படாத நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு திரும்பத் திரும்ப டையலைசிஸ் சிகிச்சை அளித்தல் , ஆபத்தானதும் செலவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நோயாளருக்கு சிறுநீரகம் மாற்றம் செய்வது நல்லது என சிபார்சு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சுகதேகி ஒருவரின் (இருப்பவரோ,இறந்தவரோ) சிறுநீரகம் நோயாளிக்கு மாற்றப்படுகிறது. சிறுநீரக மாற்று பற்றிய தலையங்கம் வேறொரு பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியுமா?
ஆம். ஒரு அளவிற்கு. இந்நோய் வர காரணமாக இருக்கும் பாம்புக்கடியை தவிர்ப்பதும். நீரிழிவிற்கு நேரத்தோடு சிகிச்சை பெறுவதும், கூடிய இரத்த அமுக்கம் வராது தடுப்பதும், சிறுநீரக அழர்ச்சி ஏற்படாது பார்ப்பதும், புரஸ்ரேட் பிரச்சினையை தவிர்ப்பதும், சிறுநீரக தொற்று ஏற்படாது பார்ப்பதும் இந்நோயை தடுக்கக் கூடிய வழிகளாகும் .அனேக நோயாளிகள் போதிய பராமரிப்பபை பெறுவதில்லை. வைத்தியரின் உதவியையும் இடைநிறுத்தி விடுகின்றனர். சிறுநீரில் காணப்படும் அசாதாரண நிலை குறித்து (உ+ம்:அல்பியுமின், செங்கலங்கள் க சிந்தித்து நோயை இனம் கண்டு அதை குணப்படுத்த நடவடிக்ககை எடுக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு முதிர்ச்சியடைததாய் இருந்தால் அதை தடுப்பது முடியாத காரியமாகும்.
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொ ள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக் குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டு த்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தி யம் இல்லை. ஆனா ல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற் றுக் கொள்ளலாம்.

விவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா?

மருத்துவத்துறையில் ஏழு மருத்துவ தியரிகள் உண்மையான என்பது குறித்து மிகுந்த விவாதங்களுக்கு உரியதாக இருந்தன.

1. காற்றின் மாசு (Air Pollution) நுரையீரல் புற்றுநோய்க்கு காரணம்.
1939 முதல் மருத்துவ விஞ்ஞானிகள் நிறையப்பேர் இது பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தார்கள். காற்றின் மாசு பாதிப்பு என்பது பல படித்தான காரணிகளை கொண்டது.21 வருடங்கள் கழித்து அதை ஒத்துக்கொண்டனர்.
2. பாக்டீரியா அல்சர் பாதிப்புக்கு காரணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்கர்கள் ராஃபின் வாரெண் மற்றும் பேரி மார்ஸல் இவர்கள் கூற்றுப்படி “ஹெலிகோபாக்டர் ஃபைலோரி” எனும் பாக்டீரியா அல்சர் பாதிப்பிற்கு காரணம் என சொன்னார்கள்(1982). இதற்கு மன அழுத்தமும் உணவு முறை பழக்கங்களும் காரணம் எனச் சொல்லப்பட்டு வந்தது. 1990 ல்தான் அமெரிக்கன் இன்ஸ்டிடியுட் அப் ஹெல்த் இதைஉறுதிப்படுத்தியது.
3. ஆஸ்பிரின் மருந்து ஹார்ட் அட்டாக் ஆபத்தை குறைக்கிறது.
லாரன்ஸ் க்ரேவன், இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் தமது முதல் ஆய்வரிக்கையில் ஆஸ்பிரின் இருதயம் சம்பந்தமான ரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக 1950 ல் தெரிவித்தார். அதன் பின் 40 ஆண்டுகள் கழித்துதான் இது ஒப்புக்கொள்ளப்பட்டது. நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஆஸ்ப்ரின் மருந்து ஒருவருக்கு இருதய நோய்களில் பாதுகாப்பளிக்கிறது.
4. எக்ஸ்-ரே உடலுக்கு கெடுதி
1911 ல் நடத்தப் பட்ட ஆய்வில் அதிக எக்ஸ்ரேக்கல் லுக்கிமியா மற்றும் இதர கேன்சர் நோய்களுக்கு காரணம் என்றார்கள். 1956 ல் தான் அமெரிக்கன் சயன்ஸ் அகாடமி தந்த ரிப்போர் படி இஷ்டத்துக்கு எக்ஸ்-ரே எடுக்க கூடாது என அறிவுருத்தப்பட்டது.
5. மாங்கனீஸ் மனித மூளைக்கு கெடுதி
மாங்கனீஸின் அதிக அளவு அதிகரிப்பு பார்கின்ஸன் நோய்களுக்கு காரணம். நியாபக மறதி mental disordersமற்றும் மூளை அயர்ச்சி , tremors, தூக்க மயக்கம்(lethargy) அதோடு கூட மூளைச் சாவிற்கும் காரணம்.
6. கிட்டப் பார்வை (Myopia is a sign of intelligence)க்கும் அறிவு முதிர்ச்சிக்கும் சம்பந்தம்
ஹாங்காங் பல்கலைகழக முடிவுப் படி ஒருவரின் கிட்டப் பார்வைக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் மரபணு பரிமாற்றம் காரணம்.
7. அதிக வெயில் நாட்கள் வயலென்ஸ் க்கு ஒரு காரணம்.
இஸ்ரேலை சேர்ந்த பென் கூரியன் யுனிவர்சிட்டியின் ஆராய்சியாளர்கள் கூற்றுப்படி, வெயில் காலங்களில் உடலில் செரோடோனின் அளவு மாற்றம் ஏற்படுவதாக சொன்னார்கள். அந்த கால கட்டங்களில் 2 – 3 மடங்கு அதிகமாக குற்றங்கள் அதிகரிக்கிறது.

ஆச்சர்யம் ஆனால் உண்மை – மூளை குறித்த தகவல்கள்

நமது உடலின் எடையில் 2% மட்டுமே மூளையின் எடை. ஆனால் அது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிசனில் 20 % கிரகிக்கிறது.

மனிதனின் 18 வயசு வரைக்கும் மூளை வளர்ச்சி தொடரும் அதுக்கப்புரம் ?ஒவ்வொரு நாளும் மூளை செல்கள் இழப்பு நிகழும்.
 நம் உடலின் மூளை நரம்பு செல்லின் தூண்டுணர்வின் வேகம் மணிக்கு 170 மைல்கள் எனக் கணக்கிட்டு இருக்காங்க.
ஒரு 10 வாட் பல்பு எரிவதற்கு தேவைப் படும் மின்சாரம் மூளைக்கு தேவை ,ஆச்சர்யம் ஆனால் உண்மை.(அதுக்காக கரண்ட்பெட்டில கைய வைச்சுராதீங்க ! )
 என்சைளோபீடியா பிரிட்டானிக்கா புத்தகங்களில் உள்ள தகவல்கள் அளவில் 5 மடங்கு நம் மூளை தகவல்களை சேமிச்சு வெச்சு இருக்கு, இந்த தகவல் உறுதியா தெரியல ஆனா விஞ்ஞானிக நம்பராங்க… (குத்து மதிப்பா இருக்கும் போல )
விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளிப்பது , நாம விழித்து இருக்கு போது செயல் படுவதை விட துங்கும் போது ஆதீத ஆற்றலில் செயல்பாடு எப்படி என்பதுதான்.
கை கால இடுப்பு வலி இதெல்லாம் அந்த அந்த பகுதியில் ஏற்படும் வலிதான் இல்லையா ஆனால் தலைவலி என்று சொல்வது மூளையை சுற்றி இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்களில் திசுக்களில் ஏற்படும் வலிதானே தவிர மூளை வலியை உணர்வது இல்லை. இன்னும் தெளிவா சொல்லனும்னா மூளையை தொட்டால் அதை உணர முடியாது.
இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழல் தமனிகளை (aorta) ஒன்று சேர்த்தால் ( diameter of a garden hose) அந்த விட்ட அளவு வீட்டு தோட்ட திற்கு பயன்படுத்தும் குழாய் அளவு இருக்கும்
 பொதுவாச் சொல்றது மூளையை நாம 10% தான் பயன் படுத்துறோம்னிட்டு அப்ப 90% சும்மா இருக்குமா என்றால் இல்லை , எல்லா செல்லுமே வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கும்.

தூக்கம் மூளைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் 11 நாட்கள் ஒருவன் தூங்காம இருந்தால் அவன் இறந்து விடுவான்.

நம் உடல் குறித்த ஆச்சர்யதகவல்கள்

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?
பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்
கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.
img_45kdoei90
நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின் சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.
காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம். அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.
சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.
img_049485ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.
ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.
10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்…(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )
சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க…ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா, சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.
நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.
தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம். (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)
வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை தானா அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.
நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.
நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!) நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம் ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.
மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )
உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)
நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை இழுத்து விடுவது இல்லை. அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.
இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.
ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண் சலிவா உற்பத்தியாகுதாம்.
பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர 206 ஆக குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.

எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபயாட்டிக்ஸ் [Andibiotics]

ஆண்டிபயாடிக் மருந்துகள் சாதாரணமாக பரிந்துரைக்கப்படும் மருந்து. இது உடனடியாக நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் 50% தேவை இல்லாத ஆண்டிபயாடிக் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது.
மக்கள் பொதுவாக பாக்டீரியா, வைரஸ் குறித்த வித்தியாசங்களை தெரிந்து கொள்வதும் இல்லை விருப்பப் படுவதும் இல்லை.
வேகமான நம் வாழ்க்கையில் ஏற்படும் உடல் பிரட்சணை அதாவது காய்ச்சல்
என்றாலே சிலர் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை சாப்பிடும் வழக்கத்தில் இருக்கிறோம்.
இந்த மாத்திரை நமக்கு தற்காலிகமாக நோயில் இருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்தோ அடிக்கடி நாம் இந்த மாத்திரையை உட்க்கொள்வதால் உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ப்ராய்லர் கோழிகளுக்கு கூட நோய் எதிர்ப்பிற்காக இல்லை அவை குண்டாவதற்காக (risk of obesity) இவை குறிப்பிட்ட அளவில் தீவணத்துடன் சேர்த்து கொடுக்கப் படுவதாக சொல்கிறார்கள்., அப்படியானால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் மனிதனுக்கும் ஓபிசிடி என்று சொல்லப் படுகிற உடற்பருமன் ஏற்படும் வாய்ப்பும் உண்டே.
ஆன்டிபயாடிக்குகள் நம் உடலில் உள்ள பயன் தரும் பாக்டீரியாக்களையும் கொல்கிறது.
இந்த பயன் தரும் பாக்டீரியாவனது நம் உடலின் குடல் வாலில் இருக்கிறது.
நம் உடலின் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கிறது.
சிறுவர், சிறுமியருக்கு அந்த வயதில் இருந்தே இந்த மருந்தை உட்கொள்வது கண்டிப்பாக அவர்களின் இன்சுலின் சுரப்பை பாதிப்படைய செயவதாக சொல்கிறார்கள். !! இது முதல் கட்ட சக்கரை நோய்.
H. pylori பைலோரி என்று ஒருவகை பாக்டீரியா ஆஸ்துமாவில் இருந்து நம்மை பாதுகாப்பது.
தொடர்ந்து வழக்கமாக நாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட் கொள்ளும் போது நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் வாய்ப்பும் உண்டு.

வாட்ஸ்ஆப் .... எப்படி..?

    வயது பாரபட்சம் பார்க்காமல் வாட்ஸ்ஆப் ஆனது அனைவரையும் சென்றடைந்துள்ளது என்பது நாம் அனைவருமே ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் அனைவருமே ஒரு வாட்ஸ்ஆப் பயனாளி தான். 

    ஒவ்வொரு முறையும் வாட்ஸ்ஆப் தனது மேம்படுத்தலின் போது கவர்ந்திழுக்கும் அம்சங்களை வெளிக்கொண்டு வந்து மேலும் பலமான ஒரு மெசேஜிங் செயலியாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.


எப்படி..? 
ஒரே ஒரு மட்டும் பயன்படுத்த நேரிடும் தொலைபேசி எண்களை உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்க விரும்பாதவரா நீங்கள்..? அப்படியென்றால், குறிப்பிட்ட தொடர்பை எண்ணை சேமிக்காமலேயே அந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை பற்றிய எளிமையான வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.!

வழிமுறை #01 
கீபேர்டில் எண்ணை டைப் செய்யவும்.!

குறிப்பிட்ட தொலைபேசி எண் முதல் படியாக நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை உங்கள் கீபேர்டில் டைப் செய்ய வேண்டும். உங்கள் போன் டயலரை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு குறிப்பை மறக்க வேண்டாம்.

வழிமுறை #02 
பின்னர் மெனு பட்டனை அழுத்தவும்.!

சேமிக்க அல்லது மெசேஜ் மெனு பட்டனை அழுத்தியதும் நீங்கள் டைப் செய்த எண் சார்ந்த சில ஆப்ஷன்கள் உங்களிடம் கேட்கப்படும். அதாவது, நம்பரை சேமிக்க அல்லது மெசேஜ் அனுப்ப மற்றும் பல கேட்கப்படும்.

வழிமுறை #03 
இப்போது மெசேஜ் ஆப்ஷனை அணுகவும்.!


டெக்ஸ்ட் மெசேஜ் இப்போது மெனு வழங்கும் ஆப்ஷனைகளில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் ஆப்ஷனை பெற முடியும் அதை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதை உறுதி செய்வீர்கள்

வழிமுறை #04 
வாட்ஸ்ஆப் மெசேஜ் கிளிக் செய்யவும்.!


ரீடைரக்ட் 
இறுதிப்படியாக மெசேஜ் ஆப்ஷனில் வாட்ஸ்ஆப் மெசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் நீங்கள் நீங்கள் வாட்ஸ்ஆப் ஆப்ளிகேஷனுக்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள், பின்னர் குறிப்பிட்ட எண்ணிற்கு நீங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாம்.

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை சேர்க்க/நீக்க/மாற்ற எளிய வழிகள்.!

வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பின் மூலமாக கடந்த சில வாரங்களாக பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை வெளியிட்டுள்ளது. அந்த அம்சங்களில் டூடுல் ஸ்டிக்கர்கள், க்விக் மீடியா பார்வேர்ட் லின்க் போன்றவைகளும் அடங்கும். உடன் அது மட்டுமின்றி வாட்ஸ்ஆப் க்ரூப் சார்ந்த அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இப்போது முதல் க்ரூப் அட்மின் குழுவில் இணைவதற்கான அழைப்பு இணைப்பை குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப வேண்டும். அது ஒருபக்கம் இருக்க நீங்கள் என்ன பல அட்மின்களை சேர்க்க அல்லது நீக்க வேண்டும் அல்லது க்ரூப் அட்மினை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..? 

வழிமுறை #01 : 
குறிப்பிட்ட க்ரூப்பிற்குள் நுழைந்து மெம்பர்களை இணைக்க க்ரூப் இன்போ ஆப்ஷனுக்குள் செல்லவும்
வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..?

வழிமுறை #02 : 
யாரை க்ரூப் அட்மினாக தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ அவரை லாங் டாப் செய்யவும். பின்னரே உங்கள் ஸ்க்ரீனில் ஒரு மெனு தோன்றும் அதில் குறிப்பிட்ட க்ரூப்பின் அட்மினிஸ்களில் ஒருவராக குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யவும்
வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..? 

வழிமுறை : 
க்ரூப்பின் பார்ட்டிசிபன்ட்ஸ் லிஸ்ட் தனை திறந்து அட்மினின் காண்டாக்ட்டை லாங் டாப் செய்யவும் பின்னர் குறிப்பிட்ட நபரை ரிமூவ் செய்யவும். யார் அட்மினை ரிமூவ் செய்தாரோ அவரே மீண்டும் அவரை ரீ ஆட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் சேன்ஞ் செய்வது எப்படி..? 

இம்முறையில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு செயல்முறை நிகழ்வுகளுமே அடங்கும். முதலில், தற்போதைய க்ரூப் அட்மின் மற்றொரு நபரை க்ரூப் அட்மினாக மாற்ற அனுமதி பெற வேண்டும். பின்னர் உங்களை அட்மிநீ தன்னை நீக்கி கொண்டு பின்னர் பார்ட்டிசிபன்ட் ஆக தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

Monday, October 24, 2016

முடிவுக்கு வந்தது பெர்முடா முக்கோணத்தின் மர்மம்!

  என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது, எதனால் பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள், விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது. இதற்கான விடை இப்போது கிடைத்துவிட்டது.


உலகில் விலகாத, விடைக் கிடைக்காத மர்மங்களும், மர்ம முடிச்சுகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழும் மர்மம் தான் பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம்.

The Bermuda Triangle Mystery Is Finally Solved!


இங்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது, எதனால் இதைக் கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது. அதற்கான பதிலை தான் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப் பிடித்துள்ளனர்...

மேகங்கள்!

மேகங்கள்! 
பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தான் அங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றை கில்லர் க்ளவுட்ஸ் என்றும் கூறுகின்றனர்.

170 மைல் வேகம்...

170 மைல் வேகம்... 
பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) அமைந்திருக்கின்றன. மேலும், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணத்தால் தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.

22 - 55 மைல் அகலம்! 
பெர்முடா பகுதியில் அறுங்கோண வடிவில் அமையும் மேகங்கள் ஏறத்தாழ 20 -55 மைல் தூர அகலத்தில் அமைகின்றன. இவை பெர்முடா முக்கோணத்தின் மேற்கு பகுதியில் தான் பெரும்பாலும் அமைகிறது. இவ்விடம் தான் மிகவும் அபாயமானது என மக்கள் கருதி வந்தனர். இங்கு சில மேகங்கள் நேர் கோடு வடிவில் அமைகின்றன. இது அசாதாரணமானது ஆகும்.

45 அடி அலைகள்...

45 அடி அலைகள்... 
மணிக்கு 170 மைல் வேகத்தில் 45 அடி உயரத்தில் அலைகள் அடித்தால் எப்படி இருக்கும். அப்படி தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் அலைகள், புயல் மற்றும் மேகத்தின் தாக்கத்தினால் உருவாகின்றன.

முடிவு! 
இந்த காரணங்களினால் தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் பல மர்மமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியோ, நீண்ட காலமாக விடை இன்றி இருந்த மர்மத்திற்கு விடை கிடைத்துவிட்டது.