Thursday, September 29, 2016

பித்தம்.

பித்தம் என்றால் என்ன ?


மனிதனின் உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம் ) என்று 3 விதமான நாடிகள் உண்டு.

உடலில் உள்ள பித்தபை எனப்படும் சுரபி வேலை செய்தால் மட்டுமே நல்ல பசி, உண்ட உணவுகள் செறிக்கும் தன்மை அடைகிறது. இதை அக்னி, சூடு என்று சொல்வதுண்டு . இது அதிகமாக சுரக்கும் உணவுகளை ( எண்ணை உணவுகள் ) எடுத்தாலும், நீர் தன்மை உடலில் குறைந்தாலும் பித்தம் சமநிலை தவறும்.

இன்று உள்ள அல்லோபதி மருத்துவத்தில் தரப்படும் மாத்திரைகள் பித்தசுரபிகளை தொல்லை படுத்துகிறது.

சித்த வைத்திய முறையில்:

உணவின் ரசத்தை பிரிப்பது கபம் அதாவது உண்டபின் கபமும், குருதியில் இருந்து சதைக்கு சேர்ப்பது பித்தம் (ஜீரணம் நடக்கும் பொழுது பித்தம்).

குடலில் இருந்து காற்றை பிரிப்பது ,கழிவு பொருளை வெளியேற்றுவது வாதம் என்றும் (ஜீரணம் நடந்த முடிந்த பின்) சொல்ல படுகிறது .

⭕அதிகாலை கபமும்
⭕சூரிய சக்தி அதிகமானதும் பித்தம் என்றும்
⭕சூரிய சக்தி தணியும் பொழுது வாதமும் வேலை செய்கிறது என்றும் சொல்ல படுகிறது .

🌀 இந்த பித்தம் சளியின் நண்பன். பித்தம் அதிகம் உண்டாகும் பொழுது சளி உண்டாகும். இப்படியும் சொல்லலாம் சளி உண்டாகும் பொழுது பித்தம் உண்டாகும்.

🌀 இந்த சளி எனப்படும் eosinophilia மிகுந்த தொல்லை தரும் செயல் என்று நாம் அறிவோம்.

🌀 இந்த பித்தம் உடல் சூட்டை உண்டாக்கும் , மேலும் பித்த தேகம் உடையவர்கள் ஒல்லியாக இருப்பர்.

🌀 உடலில் பித்தத்தினால் ஏற்படும் சூடு என்னும் உஷ்ணம் மலம், மூத்திரம் மற்றும் விந்து வழியாகவெளி ஏறி உடலை சமநிலை அடைய செய்யும் .

🎯 இந்த பித்தம் நம்மில் சம நிலை அடைய இஞ்சி சிறிதளவு, எலுமிச்சை பழத்தின் அரை பாதி, இத்துடன் சமளவு தேன் கலந்து காலை எழுந்தவுடன் பருக வேண்டும். அதாவது முதல் நாள் இஞ்சியை சிறிதளவு நசுக்கி அதில் சிறிது நீர் சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை இந்த நீரை வடிகட்டி இந்த நீரின் அளவு தேன், இதன் அளவு எலுமிச்சைசாறு சேர்த்து பருக வேண்டும். 60 நாட்கள் 3 முறை செய்ய பித்தம் சமப்படும் .
இவைகள்தான் நம் உடலில் உள்ள பித்தத்தின் செயல்.

இந்த பித்தம் சிலரின் உடலில் சமநிலை அடைவதும் அடையாமல் இருப்பதும் என்று தெரிந்து கொள்ள உடலில் சில அடையாளம் மற்றும் சில மாற்றங்கள் வெளிபடுத்தும் .

✔ பித்தம் அதிகமாக உற்பத்தியாகி சிலருக்கு வாய்களில் கசப்பு உற்பத்தியாகி மஞ்சள் நிறத்துடன் வாந்தியாக வெளியே வரும்.இதுவே சிலருக்கு பச்சை நிறமாகவும் வெளியே வரும். சிலருக்கு தலை சுற்றல் வரும். உடலில் பித்தம் மிகவும் அதிகம் சேர்ந்து பிறகு இப்படி வெளிபடும் .

1⃣ பித்தத்தின் முதல் நிலை மஞ்சள்
2⃣ இரண்டாம் நிலை பச்சை
3⃣ முன்றாம் நிலை கருமை ....

⭕ முதல் இரண்டு நிலைகளை தான் பெருபான்மையோர் அனுபவித்து வருகின்றனர் .

⭕ இரண்டாம் நிலை உடலில் தாக்கியவுடன் தலையில் உள்ள மூடிகள் வெண்மை நிறமாக மாறிவிடும். இதை பித்த நரை என்று சொல்வது உண்டு. இது இளமையில் வருவது கொடுமை .

நமக்கு காலம் செல்ல செல்ல (வயது கூட) பித்தப்பை தன் செயலை குறைப்பதினால் மற்றும் எண்ணை உணவுகளை செரிக்கும் தன்மை குறைவதால் நமக்கு பித்தம் தலைக்கு ஏறி நரை வருகிறது. இப்படி சொல்வது சித்த நூல்கள் .

அலோபதி மருத்துவர்கள் விட்டமின்ஸ் இல்லை என்பார்கள். உடல் கூறுகளை அருமையாக காரணத்துடன் விளக்கி சொல்லியது நம்முடைய
சித்த நூல்கள் மட்டுமே .

⭕ மூன்றாம் நிலை பைத்தியம். இதை சித்த நூலகள் பித்தம் தலைக்கு ஏறி பித்து பிடித்து விட்டது என்பார்கள். வாய்க்கு வந்த பித்தம் மஞ்சளாக மாறி பச்சையாக மாறி பிறகு கருப்பாக மாறி தலைக்கு ஏறி சித்தத்தை குழப்பி கெடுத்து விட்டது என்பார்கள் .

இதை சித்த மருத்துவர்கள் சில பச்சை இலைகளை கொடுத்ததும், முலீகை இலைகளை கலந்து, ஊறி, அலசி வரும் நீரினாலும் இதை குடிப்பதாலும்,  தலைக்கு குளிப்பதினாலும், சித்தம் திரும்ப பெறவும், பித்தம் குறைந்து போகும் என்று மருத்துவம் செய்தார்கள்.

இந்த மருத்துவத்திற்காக விளைந்த முலிகைகளை கொண்ட திரிகூடமலை (சித்திர சபை )
வனத்தில் சித்தர்கள் தங்கி மருந்து செய்தார்கள் .

இந்த மலையில் அசையும் சக்தி நீராகவும், அசையாத மலை சிவனாகவும் இருந்து இதில் குளிப்பவர்களுக்கு பித்தம் சமநிலை அடைய செய்வார்கள் என்று நம்பிகை உள்ளது .

இப்படி பித்தம் என்பது சித்தத்தை குழப்பும் சக்திகளை கொண்டது .

பித்தம் ஏறினால் எப்படி பித்து பிடிக்கும் என்று புரிந்து கொண்டோம் .!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

No comments:

Post a Comment