Sunday, June 12, 2016

இந்தியாவிலேயே 100% நட்டமான தொழில்கள் இரண்டே இரண்டுதான்.
1) Shampoo   2) Cinema
ஆனாலும் இத்தொழில்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது?
1) இந்தியாவின் ஒரு ரூபாய் நாணயத்துக்கு இன்னும் மதிப்பிருப்பதாக மக்களை நம்ப வைத்து முட்டாளாக்குவது.
2) செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி என ஊடகங்கள் எத்தனை இருந்தாலும் சினிமா என்னும் ஊடகம் மட்டுமே ஒருநாட்டில் உள்ள அதிப்பெரும்பாண்மையான மக்களை மிகக்குறுகிய காலத்திற்குள் சென்றடைகின்றது. மக்களின் மனநிலையை கட்டுக்குள் வைப்பதும் அதை திசைமாற்றுவதுமான தந்திரத்தை ஆள்வோர்கள் இதைப்பயன்படுத்தியே செய்துவருகிறார்கள்.
தன்னை எதிர்த்து வருகிற 100 பேரை அடித்து வீழ்த்தும் வீரம், மறைந்திருந்து தாக்கும் ஒருவனைக் கண்டறியத் தவறினால் வீணாகிவிடும்.
பேரறிவாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ இவ்வுலகம் ஆளப்படவில்லை. தன்னைச்சுற்றியிருக்கும் எவ்விதமான மனிதரையும் கட்டுப்படுத்தி முட்டாளாக்கும் திறமையே இவ்வுலகை ஆள்வதற்கான அடிப்படைத் தகுதியாகும்.
என் எதிரியையே நான் குருவாக ஏற்றிருக்கிறேன். அவனை வீழ்த்த எனக்கே பாடம் எடுக்கும் அவன் ஒரு பல்கலைக்கழகம்.

Saturday, June 11, 2016

நோய் என்றால் என்ன? மருத்துவம் என்றால் என்ன?

நோய் என்றால் என்ன? மருத்துவம் என்றால் என்ன?

பணிகிறேன் என் அன்பு சகோதரர்களே, சகோதரிகளே.,

நோய் என்றால் என்ன?
மருத்துவம் என்றால் என்ன?
மருத்துவத்தின் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற கேள்விகளே ஆராக்கிய தேடலின் முதல் படி என்று நான் நம்புகிறேன்.,



நோய் என்றால் என்ன?

"மிகையினும், குறையினும் நோய் செய்யும்"
                              -வள்ளுவர்

உடலில் உள்ள ஏதோ ஒன்று (என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்) தேவைக்கு அதிகமாய் இருப்பது அல்லது தேவைப்படும் அளவை விட குறைவாக இருப்பது, இது தான் நோய் என்று அரை வரியில் விளக்கம் அளிக்கிறார் வள்ளுவர்.,

மருத்துவம் என்றால் என்ன?

" நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்."
                                   -வள்ளுவர்

உடலின் சமநிலையற்ற நிலை தான் நேய், சமநிலையற்ற உடலை சமநிலை படுத்தும் செயலே அந்த நோயிற்கான மருத்துவமாகும்.,

இந்த மருத்துவத்தின் அடிப்படையை வள்ளுவர் மிக அழகாக வரையறை செய்கிறார்.,
முதலில் நோயின் தன்மையை கண்டறிய வேண்டும், பின் நோயிற்கான காரணம், அதாவது, குறிப்பிட்ட எந்த ஒன்றின் மிகை அல்லது குறையினால் நோய் ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், பின் அந்த மிகை அல்லது குறையினை சமநிலை படுத்தும் வழிமுறையை கண்டறிந்து அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.,
மேலும் மருத்துவம் என்பது நோயின் காரியத்திற்குகாக(அறிகுறி) அல்லாமல் நோயின் காரணத்திற்காக இருக்க வேண்டும்.,
மருத்துவம் என்பது நிச்சயம் இத்தகைய அடிப்படையை கொண்டிருக்க வேண்டியது கட்டாயம்., அப்போதுதான் அது சரியான மருத்துவமாக இருக்கும்.,

பாரம்பரிய உடலியல்-அறிமுகம்

பாரம்பரிய உடலியல்-அறிமுகம்


சுமார் முன்னூறு அல்லது நானூறு வருடங்களுக்கு முன் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்தவர்கள் (மருத்துவர்கள்) இருந்தார்கள்., அந்த அளவிற்கு மருத்துவம் என்பது எளிமையான ஒன்றாக இருந்தது., ஆனால், இன்று மருத்துவம் என்பது ஒரு சிக்கலான கட்டமைப்பு என்றும் அது நம்மை போன்றவர்களுக்கு புரியாது என்றும் நாம் நம்பவைக்கபட்டுக் கொண்டிருக்கிறோம்.,



மருத்துவம் கடந்த காலங்களில் எளிமையானதாக இருந்ததற்கு காரணம் அந்த மக்களின் உடல் பற்றிய எளிய புரிதல், அந்த புரிதலையே நான் பாரம்பரிய உடலியல் என்று சொல்வேன்.,

நம் முன்னோர்கள் ஆறு விசயங்களைக் கொண்டு உடலை அறிந்து புரிந்தனர்.,

அவை:
1. பனிரெண்டு உறுப்பு.,
2. ஆறு சுவை.,
3. ஐந்து பூதம்.,
4. மூன்று சுழற்சி.,
5. இரண்டு தன்மை.,
6. ஒரு உயிர்.,

இந்த ஆறை சார்ந்தே உடலும், உடலின் செய்களும் அமைந்திருக்கிறது என்பதால் இந்த ஆறையோ அல்லது இதில் ஏதாவது ஒன்றையோ பற்றிய தெளிவான புரிதல் இருக்கும் ஒருவர் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்திருப்பதில் ஆச்சரியமில்லையே.,

1. பனிரெண்டு உறுப்புகள்.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலில் பனிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது.,

அவை:
i) நுரையீரல்(Lung)
ii) பெருங்குடல்(Large Intestine)
iii) இரைப்பையை(Stomach)
iv) மண்ணீரல்(Spleen)
v) இருதயம்(Heart)
vi) சிறு குடல்(Small Intestine)
vii) சிறுநீரகப் பை(Urinary Bladder)
viii) சிறுநீரகம்(Kidney)
ix) இருதய மேலுறை(Pericardium)
x) மூவெப்ப மண்டலம்(Tripple Warmer)
xii) பித்தப்பை(Gall Bladder)
xii) கல்லீரல்(Liver)

இந்த பனிரெண்டும் உடலின் உள்உறுப்புகள் என்று வகை செய்யப்படுகிறது., மேலும் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில் மூளை(Brain) என்பது ஒரு உறுப்பாக வகை செய்யப்படவில்லை., அது எலும்பு மஜ்சைகளின் தொகுப்பாகவே அறியப்படுகிறது.,

மூளை வெறும் கடத்தும் பணியை மட்டுமே செய்வதாகவும், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி அவற்றை கையாள்வது உறுப்புகள் தான் என்றும் இந்திய பாரம்பரிய உளவியல் சொல்கிறது.,

2. ஆறு சுவை.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தங்களுக்கு தேவையானதை சுவையில்(உணவில்) இருந்தே பெற்றுக் கொள்கின்றன., மேலும் உடலில் உள்ள ஏழு தாதுக்களும் இந்த சுவைகளாலே உறுவாக்கப்படுகின்றன.,
இந்த சுவைகள் ஆறாக வகை படுத்தபடுவது நாம் அறிந்த ஒன்றே.,

அவை:
i) இனிப்பு.,
ii) புளிப்பு.,
iii) உப்பு.,
iv) காரம்.,
v) துவர்ப்பு.,
vi) கசப்பு.,

5. ஐந்து பூதம்.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், உடல் மட்டும் அல்ல இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.,

அவை:
i) நிலம்.,
ii) நீர்.,
iii) நெருப்பு.,
iv) காற்று.,
v) ஆகாயம்.,

4. மூன்று சுழற்சி.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமான மூன்று சுழற்சிகளைப் பற்றி நமக்கு சொல்கிறது., இந்த மூன்று சுழற்சிகளே உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாகவும், அதே நேரத்தில் அந்த நோய்களை குணமாக்குவதற்கான வழியாகவும் இருக்கிறது.,

அவை:
i) ஆக்கச் சுழற்சி(வாதச் சுழற்சி)
ii) அழிவுச் சுழற்சி(பித்தச் சுழற்சி)
iii) காக்கும் சுழற்சி(கபச் சுழற்சி)

இந்த மூன்று சுழற்சிகளும் பஞ்சபூதத்தை அடிப்படையாக கொண்டு உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.,

5. இரண்டு தன்மை.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியல் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடல் உறுப்புகள், அவற்றின் செயல்கள், இன்னு உடல் சார்ந்த அனைத்தும் இரண்டு தன்மைகளாக வகை படுத்தப்படுகிறது.,

அவை:
i) இயக்கம்(வலது).,
ii) இருப்பு(இடது).,

பாரம்பரிய உடலியல் - மூன்று சுழற்சி

பாரம்பரிய உடலியல் - மூன்று சுழற்சி


இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமான மூன்று சுழற்சிகளைப் பற்றி நமக்கு சொல்கிறது., இந்த மூன்று சுழற்சிகளே உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாகவும், அதே நேரத்தில் அந்த நோய்களை குணமாக்குவதற்கான வழியாகவும் இருக்கிறது.,


அவை:
i) ஆக்கச் சுழற்சி(வாதச் சுழற்சி)
ii) அழிவுச் சுழற்சி(பித்தச் சுழற்சி)
iii) காக்கும் சுழற்சி(கபச் சுழற்சி)

இந்த மூன்று சுழற்சிகளும் பஞ்சபூதத்தை அடிப்படையாக கொண்டு உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.,

இவை முக்குற்றம் என்றும் அறியப்படுகிறது., இவை நோய் ஏற்படுவதற்கு காரணமாய் இருப்பதால் பலர் இந்த குற்றம் என்ற வார்த்தை நோயை குறிப்பதாக கருதுகின்றனர்., ஆனால் இந்த குற்றம் என்ற வார்த்தை சுழற்சி என்ற அர்த்தத்தையே குறிக்கிறது.,

i) ஆக்கச் சுழற்சி:
பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், வாதக் குற்றம் என்று அறியப்படும் இது காற்றின் அம்சத்தை பெற்று பிரம்ம தத்துவத்தின் படி ஆக்கும் பணியை செய்கிறது.,

இந்திய மற்றும் சீன பாரம்பரிய தத்துவவியலின் அடிப்படையில், (சீனர்கள் ஆகாயத்தை மரம் என்றும் காற்றை உலோகம் என்றும் அழைக்கின்றனர்)

மரம்(ஆகாயம்/உயிர்) ஒன்றோடொன்று உரசி நெருப்பை உண்டாக்குகிறது.,
நெருப்பு சாம்பலாகி மண்ணை உண்டாக்குகிறது.,
மண் தன்னுள் அழுத்தம் பெற்று உலோகத்தை(காற்றை) உண்டாக்குகிறது.,
உலோகம் உருகி(காற்று அழுத்தப்பட்டு) நீரை உண்டாக்குகிறது.,
நீர் மரத்தை(உயிரை) வளர்க்கிறது.,

இவ்வாறாக ஒரு பூதம் மற்றொரு பூதத்தை உண்டாக்குகிறது.,


ii) அழிவுச் சுழற்சி:
பித்த குற்றம் என்று அறியப்படும் இது நெருப்பின் அம்சத்தை பெற்று சிவ தத்துவத்தின் படி அழிக்கும் பணியை செய்கிறது.,

அதன்படி,
மரம் மண்ணை அழிக்கும்.,
மண் நீரை உறிஞ்சும்.,
நீர் நெருப்பை அணைக்கும்.,
நெருப்பு உலோகத்தை உருக்கும்.,
உலோகம் மரத்தை வெட்டும்.,

இவ்வாறாக ஒரு பூதம் மற்றொரு பூதத்தை அழிக்கிறது.,


iii)காக்கும் சுழற்சி:
பித்த குற்றம் என்று அறியப்படும் இது நீரின் அம்சத்தை பெற்று விஷ்ணு(மாயை) தத்துவத்தின் படி காக்கும் பணியை செய்கிறது., இது மாறுபட்ட உறுமாற்றும் சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.,

அதன்படி.,
மரம் அதிகமாகி காற்றை குறைக்கிறது(தடுக்கிறது).,
காற்று அதிகமாகி நெருப்பை குறைக்கிறது.,
நெருப்பு அதிகமாகி நீரை குறைக்கிறது(ஆவியாக்குகிறது).,
நீர் அதிகமாகி நிலத்தை குறைக்கிறது.,
நிலம் அதிகமாகி மரத்தை குறைக்கிறது.,

இவ்வாறாக இது சமநிலையை ஏற்படுத்துகிறது.,

இந்த பதிவில் முக்குற்றம் பற்றிய அடிப்படையை மட்டுமே பார்த்திருக்கிறோம்., அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொரு குற்றத்தை பற்றியும், அது சார்ந்த அனைத்து விசயங்களைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பாரம்பரிய உடலியல் - பஞ்சபூதம்

பாரம்பரிய உடலியல் - பஞ்சபூதம்

(இது ஒரு தொடர் பதிவு)
இந்திய பாரம்பரிய தத்துவவியலில் மிக பழமையானதாகவும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் விளங்குவது இந்த பூதாவாதம்(பஞ்சபூத தத்துவம்)., மார்க்ஸ்ய தத்துவங்கள் இந்த பூதாவத தத்துவத்தை ஒன்றிற்கும் உதாவாதவை என்று குறை கூறினாலும்., உண்மையில் பூதாவாதம் மனித உடல் அமைப்பு, மனம் மற்றும் குணாதிசயம் போன்றவற்றை எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது.,

இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், உடல் மட்டும் அல்ல இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது., பூதாவாதத்தை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் இயக்கத்தை பற்றியும் மனதின் தன்மையை பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.,

அவை:
i) நிலம்.,
ii) நீர்.,
iii) நெருப்பு.,
iv) காற்று.,
v) ஆகாயம்.,


i) நிலம்:
மண்ணின் அம்சத்தை பெற்றவர்கள் திடகாத்திரமான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் இவர்கள் அனைவரையும் தன்னை நோக்கி ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாகவும், பொறுமை சாதுர்யம் ஆகிய குணங்களை உடையவர்களாகவும் இருப்பார்கள்., இவர்களின் வாயில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் இரகசியம் வெளியே வராது.,

மண்ணின் அம்சம் குறைய குறைய கவலையின் அளவு அதிகரிக்கும், உணவில் புளிப்பு சுவையை சேர்த்து கொள்வது உடலில் மண்ணின் அம்சத்தை அதிகரிக்கும்.,(மிகையினும், குறையினும் நோய் செய்யும்)

மண்ணின் அம்சத்திலான மரணமானது, மண்ணீரல் பாதிக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பின் மரணம் ஏற்படும்.,


ii) நீர்:
நீரின் அம்சத்தை பெற்றவர்கள், அழகான, வசீகரமான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும், உடலாலும் மனதாலும் மிகவும் நெகிழ்வு(இளகிய) தன்மை கொண்டவர்களாகவும், அனைத்து சூழ்நிலைகளையும் அனுசரித்து செல்லக் கூடியவர்களாகவும், அச்சமற்வர்களாகவும் இருப்பார்கள்.,

நீரின் அம்சத்தில் குறைபாடு ஏற்படும் போது, அதிக பய உணர்வும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும்., உணவில் இனிப்பு சுவையை சேர்த்து கொள்வது நீரின் அம்சத்தை அதிகப்படுத்தும்.,

நீரின் அம்சத்திலான மரணமானது, சிறுநீரகம் செயலிழந்து அதனால் சருமம் சுருங்கி பின் மரணம் ஏற்படும்.,


iii) நெருப்பு:
நெருப்பின் அம்சத்தை பெற்றவர்கள், வலிமையான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் ஆற்றல் மிக்க மனிதர்களாகவும், எளிதில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாகவும், அனைவராலும் அன்பு செலுத்தப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்., இவர்கள் எந்த ஒன்றையும் எளிதில் உள்வாங்கும் திறனையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.,

எப்போதும் தனது குறிக்கோளையும், இலக்கையும் மட்டுமே முன்னோக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்., எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.,

கட்டுபாடற்ற நெருப்பின் அம்சத்தை பெற்றவர்கள் தலைகணம், கர்வம் உடையவர்களாக இருப்பார்கள்., காரம் நெருப்பின் அம்சத்தை உடலுக்கு பெற்றுத்தரும்.,

நெருப்பின் அம்சத்திலான மரணமானது, இருதயம் செயலிழப்பதால் திடீரென நிகழும்.,


iv) காற்று:
காற்றின் அம்சத்தை பெற்றவர்கள், பலம் பொருந்திய ஆஜானுபாகுவான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் வேகமாக செயல்படக் கூடியவர்களாகவும், யாராலும் கட்டுபடுத்த முடியாதவர்களாகவும், ஆகாயத்தின் அம்சத்தை பெற்றவர்களுக்கு மட்டுமே கட்டுபட்டவர்களாகவும் இருப்பார்கள்., 

இவர்கள் தோள் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள்.,
இயல்பான ஆரோக்கிய நிலையிலும் அதிக உணவு உண்ணக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.,

காற்றின் அம்சத்தில் குறை ஏற்படும் பொழுது, இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகளும், செயல்பாடுகளில் வேகக் குறைபாடுகளும் ஏற்படும்., உணவில் துவர்ப்பு சுவையை சேர்த்து கொள்வது காற்றின் அம்சத்தை அதிகரிக்க உதவும்.,

காற்றின் அம்சத்திலான மரணமானது,நுரையிரல் செயலிழப்பதால் உடலானது வலிமை இழந்து, கைகளை கூட தூக்க முடியாத நிலை ஏற்பட்டு பின் மரணம் ஏற்படும்.,


V) ஆகாயம்:
ஆகாயத்தின் அம்சத்தை பெற்றவர்கள், எல்லா வகையிலும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் பெற்றிருப்பார்கள்., மேலும் அனைத்தையும் கட்டுபடுத்தி ஆளுமை செய்யும் தகுதி உடையவர்களாய் இருப்பர்.,

எப்போதும் எதையும் தீர்கமாய் சிந்தித்து பின் செயலாற்றுபவர்களாகவும், நேரான வழியில் நடப்பவர்களாகவும், வழி நடத்துபவர்களாகவும் இருப்பார்கள்., சுயநலமற்றவர்களாகவும், அடுத்தவரின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தரக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.,

ஆகாயம் நிலைத் தன்மை கொண்டது என்பதால், இதன் அம்சத்தை பெற்றவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்., உணவில் (உயிர்) கசப்பு சுவையை சேர்பது ஆகாய அம்சத்தை பெறுவதற்கு உதவும் (மிகையினும், குறையினும் நோய் செய்யும்)

ஆகாய அம்சத்திலான மரணம், உயிர் ஆகாயத்தின் அம்சம் என்பதால், உடல் ஆகாயத்தின் அம்சத்தை பெற்றிருக்கும் போது மரணம் என்பது சாத்தியமில்லை.,


மரணம்:
இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் மரணம் என்பது, ஆகாயம்(உயிர்) உடலை விட்டு பிரிவதாகும், ஆகாயம் இல்லாத நிலையில் காற்றுக்கு கட்டுபாடு இல்லை எனவே அதுவும் உடலை விட்டு பிரிகிறது., எரிவதற்கு தேவையான காற்று(பிராணம்) இல்லாததால் நெருப்பு அணைகிறது., எனவே உயிரோடு இருந்த வரை உடலில் இருந்த வெப்பம் இப்போது இல்லாமல் ஆகிறது., நீரை அதனுடைய இடத்தில் பிடித்து வைத்திருந்த காற்று இல்லாததால் விந்து/நாதம், கபம் ஆகியவை உடலை விட்டு பிரிகிறது., எஞ்சி இருக்கும் உடல் மக்கி மண்ணாகிறது.,

பாரம்பரிய உடலியல் - உறுப்புகள்

பாரம்பரிய உடலியல் - உறுப்புகள்


இந்த பதிவில் பாரம்பரிய உடலியலின் அடிப்படையில் உறுப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.,

இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலில் பனிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது.,



அவை:
i) நுரையீரல்(Lung)
ii) பெருங்குடல்(Large Intestine)
iii) இரைப்பையை(Stomach)
iv) மண்ணீரல்(Spleen)
v) இருதயம்(Heart)
vi) சிறு குடல்(Small Intestine)
vii) சிறுநீரகப் பை(Urinary Bladder)
viii) சிறுநீரகம்(Kidney)
ix) இருதய மேலுறை(Pericardium)
x) மூவெப்ப மண்டலம்(Tripple Warmer)
xii) பித்தப்பை(Gall Bladder)
xii) கல்லீரல்(Liver)

இந்த பனிரெண்டும் உடலின் உள்உறுப்புகள் என்று வகை செய்யப்படுகிறது., மேலும் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில் மூளை(Brain) என்பது ஒரு உறுப்பாக வகை செய்யப்படவில்லை., அது எலும்பு மஜ்சைகளின் தொகுப்பாகவே அறியப்படுகிறது.,

மூளை வெறும் கடத்தும் பணியை மட்டுமே செய்வதாகவும், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி அவற்றை கையாள்வது உறுப்புகள் தான் என்றும் இந்திய பாரம்பரிய உளவியல் சொல்கிறது.,

இன்றய நவீன (மேற்கத்திய)மருத்துவம் உள்ளுறுப்புகளை ஆராய பல இயந்திர தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது., ஆனால் இந்த தொழில் நுட்பம் எதுவும் இல்லாத காலத்தில் உள்ளுறுப்பின் நிலையை எப்படி பரிசோதித்திருப்பார்கள்?!

பாரம்பரிய உடலியல், ஒவ்வொரு உள்ளுறுப்பிற்கும் ஒரு வெளிப்புற உணர்வுறுப்பு இருப்பதாகச் சொல்கிறது., அந்த வெளிப்புற உறுப்புகளில் பிரதிபலிக்கும் மிகை, குறைகளைக் கொண்டு உள்ளுருப்பின் மிகை, குறைகள் கணக்கிடப்படும்.,

இனி ஒவ்வொரு உறுப்பை பற்றியும் அவை உடலில் என்ன என்ன வேலையெல்லாம் செய்கிறது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.,

1. நுரையீரல்(Lung):

இயக்கத் தன்மையில் காற்றின் அம்சத்தை தனதாக்கிக் கொண்ட உறுப்பு., இது உடலில் சுவாசத்தை கையாள்வது நமக்கு தெரியும், ஆனால் இதனுடைய வேலை அதோடு நின்றுவிடவில்லை., உடலின் தொடு உணர்வு, தோல் ரோம பராமரிப்பு போன்ற பணிகளையும் நுரையீரல் தான் கவனித்து கொள்கிறது., மேலும் அழுகை என்ற உணர்வு நுரையீரலால் தான் தூண்டப்படுகிறது.,

பலமான நுரையீரலை கொண்டவர் தேவையான இடங்களில் மட்டுமே அழுவார்., பலவீனமான நுரையீரலை கொண்டவர்கள் மட்டுமே எப்போதும் அழுதுகொண்டே இருப்பார்கள்., மிகைபலம் கொண்ட நுரையீரலுக்கு சொந்தகாரர் எப்போதுமே அழமாட்டார்.,

இதன் வெளிப்புற உணர்வுறுப்பாக மூக்கு செயல்படுவதால் நுரையீரல் தனது எந்த பிரச்சினையும் மூக்கின் மூலமாகவே வெளிபடுத்துகிறது.,

2. பெருங்குடல்:

இருப்புத் தன்மையில் காற்றின் அம்சத்தை பெற்றிருக்கும் உறுப்பாக பெருங்குடல் அறியப்படுகிறது., நவீன மருத்துவம் பெருங்குடல் உணவின் திரவ சத்துக்களை உறிஞ்சும் பணியை மட்டுமே செய்வதாகச் சொல்கிறது., என்றாலும் இதன் பணி அதோடு நின்றுவிடவில்லை, தோல்(சரீரம்) பராமரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது., மேலும் மூளைக்கு தேவையான சத்துக்களை உணவில் இருந்து பிரித்து அதை மூளைக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது.,

3. இரைப்பையை:
இது இருப்பின் தன்மையில் மண்ணின் அம்சத்தை பெற்ற உறுப்பாக வகை செய்யப்படுகிறது., நவீன மருத்துவம் இதை முதல் கட்ட ஜீரண உறுப்பு என்று சொன்னாலும், பாரம்பரிய மருத்துவம் இதை இரண்டாம் கட்ட ஜீரண உறுப்பாகவே வரையறை செய்கிறது., (ஜீரணம் வாயில் இருந்தே தொடங்கிவிடுவதால் வாயே முதல் கட்ட ஜீரண உறுப்பாகும்)

இரைப்பையின் பிரச்சினைகள் பெரும்பாலும் முதலில் வாயில் தான் தெரியும்., வாய் இதன் வெளிப்புற உணர்வுறுப்பாக செயல்படுகிறது., வாய் துர்நாற்றம் இரைப்பையில் கழிவு தேங்குவதால் ஏற்படுகிறது.,

கவலை என்னும் உணர்வை கையாளும் உறுப்பாக இது அறியப்படுகிறது., எனவே தான் நாம் கவலையாக இருக்கும் நேரங்களில் நம்மால் பசியை உணரவோ, சாப்பிடவோ முடிவதில்லை.,

4. மண்ணீரல்:
இயக்கத் தன்மையில் மண்ணின் அம்சத்தை பெற்ற உறுப்பு மண்ணீரல்.,

உடலில் இரத்த உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் போன்ற பணிகளையும், அதோடு உடலின் மையவிசையை கட்டுபடுத்தி ஒவ்வொரு உறுப்பையும் அதற்கான இடத்தில் நிலைபடுத்தும் பணியையும் இது செய்கிறது., குடலிறக்கம் போன்ற பிரச்சினைகள் மண்ணீரலின் பலகீனத்தால் தான் ஏற்படுகிறது.,

மண்ணீரல் பலம் கொண்டவர்கள் மனக் கட்டுப்பாடுடனும், வைராக்கியத்துடனும் இருப்பார்கள்.,

உதடு இதன் வெளிப்புற உணர்வுறுப்பாகும்., உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது மண்ணீரலின் அதிகப்படியான உஷ்ணத்தால் ஏற்படுவதாகும்.,

5. இருதயம்:

இயக்கத்தின் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் உறுப்பாக இது அறியப்படுகிறது., இருதயம் மூளையின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் உறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது., மேலும் உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையானதை இரத்தத்தின் மூலம் கடத்தும் கடத்தியாகவும் இது செயல்படுகிறது.,

இருதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை கையாள்கிறது., பலமான இருதயம் கொண்டவர்கள் எளிதில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாக இருப்பர்.,

இருதயத்தின் வெளிப்புற உணர்வுறுப்பு நாக்கு., இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் போது அது மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும், ஞாபக மறதி, மன அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற மூளையோடு தொடர்புடைய பிரச்சினைகள் இருதய பலகீனத்தால் ஏற்படுகின்றன.,

6. சிறுகுடல்:
இருப்புத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் சிறுகுடல் இரைப்பையில் ஜீரணிக்கப்பட்ட உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் பணியை செய்கிறது., நவீன மருத்துவம் சிறுகுடலே முதல் உறிஞ்சும் பணியை செய்வதாகச் சொல்கிறது., ஆனால் நாக்கே மூதல் உறிஞ்சும் பணியை செய்கிறது.,

7. சிறுநீரகப்பை:
இருப்புத் தன்மையில் நீரின் அம்சத்தை பெற்ற உறுப்பு., நவீன மருத்துவம் இது சிறுநீரை சேமித்து வைக்கும் பணியை மட்டுமே செய்வதாக சொல்லகிறது., ஆனால் இது சிறுகுடலில் இருந்து அனுப்பப்படும் நீர் கழிவுகளில் இருக்கும் கடைசிகட்ட சத்துக்களை உறிஞ்சும் பணியையும் செய்கிறது.,

8. சிறுநீரகம்:
இயக்கத் தன்மையில் நீரின் அம்சத்தை பெற்றிருக்கும் உறுப்பாக வகை செய்யப்படுகிறது., இது உடலின் இரண்டு ராஜ உறுப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது.,

நவீன மருத்துவம், இரத்தத்தில் உள்ள தேவையில்லாத உப்பு மற்றும் சக்கரையை பிரிக்கும் பணியை மட்டுமே செய்வதாகச் சொல்கிறது., என்றாலும், சிறுநீரகம், பெற்றோர்களிடமிருந்து பெரப்படும் மூலாதாரத்தை சேமிக்கும் உறுப்பாகவும், மூளையை கட்டுபடுத்தும் உறுப்புகளில் ஒன்றாகவும் செயல்படுகிறது.,

இது பயம் என்ற உணர்வை கையாள்கிறது., பலகீனமான சிறுநீரகம் உடையவர்கள் எப்போதும் அச்சமான மனநிலையிலேயே இருப்பார்கள்.,

இதன் வெளிப்புற உணர்வுறுப்பு காது., இரண்டு காதுகளில் ஒன்று சிறிதாக இருந்தால், அவருக்கு இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிறிதாக இருக்கும்.,

9. இருதய மேலுறை:
இயக்கத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் உறுப்பாக இது அறியப்படுகிறது., நவீன மருத்துவம் இதை ஒரு தனி உறுப்பல்ல என்றும், இருதயத்தோடு சேர்ந்தே இருக்கும் ஒன்று என்றும் சொல்கிறது., ஆனால் இருதயத்தின் பணிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாலும், இது இருதயத்தை பாதுகாக்கும் பிரதான பணியை செய்வதாலும் இது தனி உறுப்பாக கணக்கிடப்படுகிறது.,

10. மூவெப்ப மண்டலம்:
இருப்புத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை கொண்டது., உண்மையில் இது ஒரு உறுப்பில்லை என்ற போதிலும், இதன் பணியின் அவசியத்தின் அடிப்படையில் இதற்கு உறுப்பிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.,

இது உடலின் வெப்ப நிலையை கட்டுபடுத்தி கையாளும் பணியை செய்கிறது., சுவாசத்திற்கு தேவையான வெப்பம், ஜீரணத்திற்கு தேவையான வெப்பம், கழிவு வெளியேற்றத்திற்கு தேவையான வெப்பம் என்று மூன்றாக பிரித்து இது வெப்பத்தின் மீது ஆளுமை செலுத்தி உடலின் சீரான இயக்கத்திற்கு வகை செய்யப்படுகிறது.,

11. பித்தப்பை:
இருப்புத் தன்மையில் ஆகாயத்தின் அம்சத்தை பெற்ற உறுப்பு., இது கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்த நீரை சேமித்து தேவைக்கு ஏற்றார் போல் சுரக்கும் பணியை செய்கிறது.,

12. கல்லீரல்:
இயக்கத் தன்மையில் ஆகாயத்தின் அம்சத்தை தனதாக்கிக் கொண்ட உறுப்பு.,  உடலின் முதன்மையான ராஜ உறுப்பு., ஆகாய அம்சம் ஆதலால் அதிகபடியான உயிர் தன்மை கொண்டு, உடலில் வெட்டினால் மீண்டும் வளரும் ஒரே உள்ளுறுப்பு என்ற தனித்துவத்தை கொண்ட உறுப்பு.,

மனித மூளை மற்றும் சிந்தனை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் உறுப்பாக இது அறியப்படுகிறது.,

இதன் வெளிப்புற உணர்வுறுப்பு கண்., இது கோபம் என்ற உணர்வை கையாள்கிறது.,  பலகீனமான கல்லீரலை கொண்டவர்கள் கடும் கோபக்காரர்களாக இருப்பர்.,